என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராமநாதபுரம் அருகே அடுத்தடுத்து விபத்து: லாரி டிரைவர்-வாலிபர் பலி
கமுதி:
கமுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 30). இவர் கோட்டைமேடு பகுதியில் இருந்து கமுதிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
குண்டத்துவீரன் கோவில் வளைவில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது கமுதியில் இருந்து அபிராமம் நோக்கி வந்த மினிலாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் குணசேகரன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை கமுதி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே குணசேகரன் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து கமுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து மினிலாரி டிரைவர் தனகேசரனை கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.
நயினார்கோவில் அருகே உள்ள அரசடிவந்தல் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (49) லாரி டிரைவர். இவர் இருசக்கர வாகனத்தில் அரியேந்தல் பகுதியில் சென்றபோது கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது மனைவி இந்திராகாந்தி கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காளையார்கோவில் கிருஷ்ணாநகர் பகுதியில் வசிக்கும் துரைப் பாண்டியின் தாயார் கல்யாணி (70) நேற்று இரவு வாட்டர் டேங் அருகில் உள்ள சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததார்.
அப்போது காரைக்குடி நோக்கிச்சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் கல்யாணி சம்பவ இடத்தில் இறந்து விட்டார்.
அவரது மகன் துரைப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் காளையார் கோவில் போலீசார், அரசு பஸ் டிரைவர் நயினார் கோவிலைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #accidentcase
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்