search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு - மூன்றாவது நீதிபதி முன்னிலையில் விசாரணை தொடங்கியது
    X

    எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு - மூன்றாவது நீதிபதி முன்னிலையில் விசாரணை தொடங்கியது

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன் முன்பு இன்று விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. #MLAsDisqualificationCase
    சென்னை:

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில், இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரை சுப்ரீம் கோர்ட்டு மாற்றிவிட்டு சத்யநாராயணனை 3-வது நீதிபதியாக நியமித்தது.

    புதிய நீதிபதி சத்யநாராயணன் கடந்த 4-ம் தேதி விசாரணையை தொடங்கினார். முதலில் இரு தரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்து விசாரணையை நடத்துவது குறித்து ஆலோசித்தார். இந்த வழக்கை எப்போது தொடங்கி நடத்துவது என்பது குறித்து வழக்கறிஞர்களின் கருத்தை கேட்டறிந்தார்.

    அதன்பின்னர், வழக்கு விசாரணையை ஜூலை 23-ம் தேதிக்கு  ஒத்திவைத்தார். 23-ம் தேதி திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு விசாரணை தொடங்கும் என்றும், வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதி சத்தியநாராயணன் அறிவித்திருந்தார்.


    அதன்படி நீதிபதி சத்தியநாராயணன் இன்று காலை 10.30 மணிக்கு விசாரணையை தொடங்கினார். இந்த விசாரணையின்போது அரசு மற்றும் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க உள்ளனர். முதலில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதாடினார். #MLAsDisqualificationCase
    Next Story
    ×