என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருத்தங்கல் அருகே பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து பொதுமக்கள் போராட்டம்
விருதுநகர்:
விருதுநகர், சிவகாசி வழியாக செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு தினமும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில், திருத்தங்கல்-சங்கரலிங்காபுரம் பகுதியில் சென்றது. அங்கு பாலம் வேலை நடப்பதால், ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டு தண்டவாளத்திற்கு வந்து ரெயிலை மறித்தனர். இதனை கண்டதும் ரெயிலை என்ஜின் டிரைவர் நிறுத்தினார். கோரம்பட்டி ஆள் இல்லாத ரெயில்வே கேட் அகற்றப்பட்டு, அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருத்தங்கல் போலீசாரும், ரெயில்வே அதிகாரிகளும் விரைந்து வந்து மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். உங்கள் கோரிக்கை பற்றி அதிகாரிகளிடம் புகார் மனு கொடுக்க வேண்டும். ரெயிலை மறிக்க கூடாது என அறிவுறுத்தினர்.
இதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக சுமார் 30 நிமிடம் ரெயில் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. #Train
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்