search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனூரில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி
    X

    வில்லியனூரில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

    மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை திருமால் நகரை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மனைவி லூர்துமேரி.(வயது 63). இவரது மகன் ஞானபிரகாசம் (42).

    லூர்துமேரி நேற்று முன்தினம் ஒரு வேலை காரணமாக தனது மகன் ஞானபிரகாசத்தின் நண்பர் குழந்தைசாமி (47)யுடன் மோட்டார் சைக்கிளில் வில்லியனூர் சென்றார்.

    வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் அரசு வங்கி அருகே வந்த போது, குழந்தைசாமி மோட்டார் சைக்கிளை திடீர் பிரேக் போட்டார்.

    இதில், தவறி கீழே விழுந்த லூர்துமேரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த லூர்துமேரி சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இறந்தார்.

    இது குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசில் ஞானபிரகாசம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    Next Story
    ×