என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வில்லியனூரில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி
புதுச்சேரி:
புதுவை திருமால் நகரை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மனைவி லூர்துமேரி.(வயது 63). இவரது மகன் ஞானபிரகாசம் (42).
லூர்துமேரி நேற்று முன்தினம் ஒரு வேலை காரணமாக தனது மகன் ஞானபிரகாசத்தின் நண்பர் குழந்தைசாமி (47)யுடன் மோட்டார் சைக்கிளில் வில்லியனூர் சென்றார்.
வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் அரசு வங்கி அருகே வந்த போது, குழந்தைசாமி மோட்டார் சைக்கிளை திடீர் பிரேக் போட்டார்.
இதில், தவறி கீழே விழுந்த லூர்துமேரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த லூர்துமேரி சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இறந்தார்.
இது குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசில் ஞானபிரகாசம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்