search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எழும்பூரில் போலி இன்ஸ்பெக்டர் கைது
    X

    எழும்பூரில் போலி இன்ஸ்பெக்டர் கைது

    எழும்பூரில் வாலிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற போலி இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
    சென்னை:

    ஆவடி ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோசஸ். இவர் எழும்பூர் எத்திராஜ் சாலை பஸ் நிறுத்தம் அருகில் காரில் சென்ற போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை மடக்கினார்.

    பின்னர் மோசசிடம் “நான் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று கூறி டிரைவிங் லைசென்ஸ் உள்ளதா?” என்று கேட்டு மிரட்டினார். ரூ.1000 தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

    இதுபற்றி எழும்பூர் இன்ஸ்பெக்டர் சேட்டு விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்தார். அவரது பெயர் நிஜாம் என்பது தெரிய வந்தது. போலி இன்ஸ்பெக்டரான அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×