என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெரியகுளம் அருகே அதிமுக கொடிகம்பம் அகற்றப்பட்டதால் பரபரப்பு
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எண்டபுளிபுதுப்பட்டி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் அ.தி.மு.க. கொடி கம்பம் மற்றும் கல்வெட்டு உள்ளது.
இந்த கம்பத்தை ஒரு கும்பல் அகற்றி விட்டு அதே இடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடி கம்பத்தை நடமுயன்றனர். மேலும் அருகில் இருந்த கல்வெட்டையும் இடித்து சேதப்படுத்தினர்.
இது குறித்து ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் அன்னகொடி மற்றும் கட்சியினருக்கு தெரியவரவே அப்பகுதியில் ஒன்று திரண்டனர். இந்த விஷயம் அந்த பகுதியில் காட்டு தீ போல் பரவியது. இதனால் எண்டபுளிபுதுப்பட்டி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு இருந்த கொடி கம்பங்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்