search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியகுளம் அருகே அதிமுக கொடிகம்பம் அகற்றப்பட்டதால் பரபரப்பு
    X

    பெரியகுளம் அருகே அதிமுக கொடிகம்பம் அகற்றப்பட்டதால் பரபரப்பு

    பெரியகுளம் அருகே அ.தி.மு.க. கொடி கம்பம் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எண்டபுளிபுதுப்பட்டி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் அ.தி.மு.க. கொடி கம்பம் மற்றும் கல்வெட்டு உள்ளது.

    இந்த கம்பத்தை ஒரு கும்பல் அகற்றி விட்டு அதே இடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடி கம்பத்தை நடமுயன்றனர். மேலும் அருகில் இருந்த கல்வெட்டையும் இடித்து சேதப்படுத்தினர்.

    இது குறித்து ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் அன்னகொடி மற்றும் கட்சியினருக்கு தெரியவரவே அப்பகுதியில் ஒன்று திரண்டனர். இந்த வி‌ஷயம் அந்த பகுதியில் காட்டு தீ போல் பரவியது. இதனால் எண்டபுளிபுதுப்பட்டி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு இருந்த கொடி கம்பங்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×