search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனூர் அருகே மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை
    X

    வில்லியனூர் அருகே மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை

    வில்லியனூர் அருகே வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    நெய்வேலி தில்லை நகரை சேர்ந்தவர் ராமையன். ஓய்வு பெற்ற என்.எல்.சி. ஊழியர். இவரது மனைவி குப்பம்மாள் (வயது 58). இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்தது.

    இதற்காக இவர் வில்லியனூர் அருகே பத்துக்கண்ணுவில் உள்ள தனது அக்காள் மகள் தேன்மொழி வீட்டில் தங்கி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார்.

    ஆனாலும் நோய் குணமாகவில்லை. அவ்வப் போது வலிப்பு நோயால் குப்பம்மாள் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன முடைந்த குப்பம்மாள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    நேற்று மாலை வீட்டின் குளியல் அறையில் குப்பம்மாள் ‌ஷவரில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×