search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெட்டியார்பாளையத்தில் கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
    X

    ரெட்டியார்பாளையத்தில் கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

    ரெட்டியார்பாளையத்தில் நோய்க்கொடுமையால் அவதிப்பட்டு வந்த கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார்பாளையம் கம்பன்நகர் 7-வது குறுக்குதெருவில் உள்ள தனியார் அப்பார்ட் மெண்டில் வசித்து வந்தவர் பாலச்சந்திரன் (வயது50), கூலித்தொழிலாளி. இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    பாலச்சந்திரன் கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று பாலச்சந்திரனின் மனைவி விஜயலட்சுமி கும்பகோணம் கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது நோய்க்கொடுமை அதிகமானதால் விரக்தி அடைந்த பாலச்சந்திரன் வீட்டில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாகப்பன் வழக்குபதிவு விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் புதுவை கோவிந்தசாலை ராஜீவ்காந்தி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (வயது42). டெய்லரான இவர் காண்டிராக்டு அடிப்படையில் துணிக்கடைகளுக்கு ரெடிமேடு ஆடைகளை தயாரித்து கொடுத்து வந்தார். இவருக்கு உதவியாக அவரது மனைவி ரோசியும் தையல் வேலையில் ஈடுபட்டு வந்தார்.

    இதற்கிடையே ரெடிமேடு ஆடைகள் தயாரித்து கொடுத்த கடையில் பணம் தராததால் கணவன்-மனைவிக்கிடையே தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்தது. நேற்றும் இதுதொடர்பாக அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சார்லஸ் வீட்டில் இருந்த கரையான் பூச்சி கொல்லி மருந்தை (வி‌ஷம்) எடுத்து குடித்து விட்டார்.

    இதில் மயங்கி விழுந்த சார்லசை அவரது மனைவி ரோசி மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து புகாரின் பேரில் பெரியக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×