search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓமலூர் அருகே லாரி டிரைவர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
    X

    ஓமலூர் அருகே லாரி டிரைவர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே லாரி டிரைவர் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுகனேஸ்வரன். லாரி டிரைவர். இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்கைகள் உள்ளனர். இவர்கள் நேற்று இரவு வீட்டின் கீழ் தளத்தில் கதவை பூட்டி விட்டு மேல் தளத்தில் தூங்கி கொண்டிருந்தனர்.

    இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் அங்கு வந்து வீட்டின் கீழ் தள முன்பக்க கதவை கடப்பாரையால் நெம்பி உடைத்து உள்ளே புகுந்து நகை, பணம் இருக்கிறதா? என தேடினார்கள். பீரோவை திறந்து பார்த்தனர். அதில் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து ஒரு இரும்பு பெட்டியை எடுத்து உடைத்து பார்த்தனர்.

    அதில் வீட்டின் பத்திரம், 3½ பவுன் நகை, ரூ.1000 ரொக்கம் ஆகியவை இருந்தது. இதில் பணத்தையும், நகையையும், திருடிக் கொண்டு மர்மநபர்கள் அங்கிருந்து வெளியேறி பக்கத்து தெருவுக்கு சென்றார்கள். அங்கு 2 வீடுகளின் கதவை உடைக்க முயற்சி செய்துள்ளனர். கதவு தடிமனாக இருந்தால் உடையவில்லை. இதனால் மர்மநபர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×