search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதி பெண் பலி
    X

    திருப்பூரில் மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதி பெண் பலி

    திருப்பூரில் மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் சந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 55). இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருப்பூர் கொங்கு மெயின்ரோடு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பேபி (45) என்ற பெண்ணுடன் தாராபுரம் ரோட்டில் சென்றார். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

    இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயங்களுடன் ரோட்டில் கிடந்தனர். அக்கம் பக்கத்தினர் பேபியை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பேபியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும்வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ரவியை குமார்நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகன டிரைவரான திருப்பூர் ஈஸ்வரமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த செல்லத்துரை (52) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். #Tamilnews
    Next Story
    ×