search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கச்சிராயப்பாளையம் அருகே தனியார் பள்ளி பஸ் மோதி வாலிபர் பலி
    X

    கச்சிராயப்பாளையம் அருகே தனியார் பள்ளி பஸ் மோதி வாலிபர் பலி

    கச்சிராயப்பாளையம் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது தனியார் பள்ளி பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

    கச்சிராயப்பாளையம்:

    விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள எடுத்தவாய்நத்தம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 20). பால் வியாபாரி.

    இன்று காலை 9 மணிக்கு பாலாஜி மோட்டார் சைக்கிளில் எடுத்தவாய்நத்தம் பகுதியில் இருந்து அருகில் உள்ள அம்பேத்கார் நகருக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த தனியார் பள்ளி பஸ் ஒன்று பாலாஜியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

    தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பாலாஜி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கச்சிராயப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் மாணிக்க ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×