search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் அச்சுறுத்தல் காரணமாகவே மக்கள் அதிகாரம் மீது புகார் - ஒருங்கிணைப்பாளர் பேட்டி
    X

    போலீஸ் அச்சுறுத்தல் காரணமாகவே மக்கள் அதிகாரம் மீது புகார் - ஒருங்கிணைப்பாளர் பேட்டி

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு விகாரத்தில் போலீஸ் அச்சுறுத்தல் காரணமாகவே மக்கள் அதிகாரம் மீது புகார் கூறப்பட்டுள்ளது என ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராஜூ தெரிவித்துள்ளார். #Thoothukudifiring

    சென்னை:

    மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மக்கள் அதிகாரம் அமைப்பை பற்றி மீனவ சங்க பிரதிநிதிகள் புகார் மனு கொடுத்தற்கு போலீசின் அச்சுறுத்தலே காரணம், இதனை சாக்காக வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பை பயங்கரவாதி என பா.ஜ.க. அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசுவது கண்டிக்கதக்கது.

    இந்துத்வா கொள்கையை வைத்துக்கொண்டு மக்கள் அதிகாரம் அமைப்பை பற்றி பயங்கரவாதம், என பேசுவது, வேடிக்கையானது.

    ஸ்டெர்லைட்டைவிட அதிக ஆபத்து போலீசின் அடக்குமுறைதான். ஒரு சில மீனவ சங்க நிர்வாகிகளை அச்சுறுத்தி மூளைச்சலவை செய்து, இரண்டு வழக்கறிஞர்கள் மீதும், மக்கள் அதிகார அமைப்பின் மீதும் அவதூறு பிரச்சாரத்தை கட்ட விழ்த்துவிட்டுள்ளது. மீனவ அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்தார்கள் என எந்த நீதிமன்றத்திலும் யாரும் சொல்லவில்லை.


    மீனவ சங்க பிரதிநிதிகள் கொடுத்த மனுவில் துப்பாக்கிச்சூடு படுகொலையை கண்டித்து ஒரு வரிகூட கிடையாது. அவர்கள் சுதந்திரமாக இந்த புகாரை கொடுக்கவில்லை. இரு வழக்கறிஞர்களும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் அல்ல. போலீசார் தனது நடவடிக்கையை நியாயபடுத்த அவ்வாறு பரப்பி வருகிறார்கள்.

    இனி யாரும் எதற்கும் போராடகூடாது என்பதன் அச்சுறுத்தல்தான் தூத்துக்குடி துப்பாக்கிசூடு மக்கள் அதிகாரத் தோழர்கள் எந்த வன்முறை தீ வைப்பு சம்பவத்திலும் ஈடுபடவில்லை. எந்த ஆதாரத்தையும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யோ, அமைச்சர் பொன்னாரோ காட்ட முடியாது. தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போரட்டத்தை பா.ஜ.க. அதிமுக. தவிர தமிழகத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் அங்கு சென்று ஆதரித்தார்கள். எந்த பாகுபாடு, வேறுபாடுமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து போராடினார்கள். இதில் மூளைச்சலவை எங்கு வருகிறது. வெளியிலிருந்து தூண்டுவது எங்கு வருகிறது?

    போலீசின் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்புகளை பற்றி பயங்கரவாதி என பீதியூட்ட முயல்கிறார்கள். அதற்காக அனைவரும் போராட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Thoothukudifiring

    Next Story
    ×