search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமேசுவரத்தில் கல்லூரி மாணவி காரில் கடத்தல்
    X

    ராமேசுவரத்தில் கல்லூரி மாணவி காரில் கடத்தல்

    கல்லூரி மாணவியை காரில் கடத்தியதாக வாலிபர் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் அருகே உள்ள திட்டக்குடியை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகள் சித்ர பரியா (வயது 18) தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவருக்கும் மேட்டுத் தெருவைச்சேர்ந்த சேதுராமன் மகன் பிரம் (18) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது.

    இந்த நிலையில் நேற்று இரவு சித்ரபிரியா திடீரென மாயமாகி விட்டார். இது குறித்து அவரது தந்தை கண்ணன் ராமேசுவரம் நகர் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதில், பிரேம், அவரது சகோதரர் தேசிகன் (17) நண்பர் பிரபு ஆகியோர் சித்ரபிரியாவை காரில் கடத்திச் சென்று விட்டதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    மாணவி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கார் டிரைவர் இளையராஜா என்பவரை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட சித்ரபிரியா எங்குள்ளார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×