search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி தனியார் நிறுவன காவலாளி மீது தாக்குதல்: நண்பர்கள் 4 பேர் கைது
    X

    திருச்சி தனியார் நிறுவன காவலாளி மீது தாக்குதல்: நண்பர்கள் 4 பேர் கைது

    தனியார் நிறுவன காவலாளி மீது தாக்குதல் நடத்திய நண்பர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருச்சி:

    திருச்சி ஏர்போர்ட் உடையான்பட்டியை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 26). இவர் கே.கே.நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது நண்பர்கள் குட்டி அம்பலக்காரன்பட்டியை சேர்ந்த சக்திவேல், அண்ணாமலை, ராஜேந்திரன் மற்றும் சிவா. சம்பவத்தன்று கார்த்திகேயன் நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்துள்ளார்.

    அப்போது 4 பேரும் கார்த்திகேயனின் குடும்பத்தை பற்றி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த  அவர்கள் கார்த்திகேயனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவரின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

    இது குறித்து விமானநிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சக்திவேல் (24), அண்ணாமலை (20), ராஜேந்திரன் (29) மற்றும் சிவா (22) ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×