search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: 47 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை- தமிழக அரசு
    X

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: 47 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை- தமிழக அரசு

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் 47 பேர் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர். #MGRcentenaryfunction #TNPrisonersReleased
    சென்னை:

    முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. அரசு சார்பில் பல்வேறு மாவட்டங்களிலும் அதற்கான விழாக்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, சிறைச்சாலைகளில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றும் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டது.

    அதில், மாநில ஆளுநருக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தியும், உச்சநீதிமன்றம் மற்றும் மாநில உயர் நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின்படியும் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், 10 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்துள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகளில், முதற்கட்டமாக 67 ஆயுள் தண்டனை கைதிகள் கடந்த 6ந்தேதி விடுதலை செய்யப்பட்டனர்.  அதன்பின்னர் கடந்த 12ந்தேதி 52 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.



    இந்நிலையில், புழல் சிறையில் இருந்து 47 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர்.  இதனை சிறைத்துறை டி.ஐ.ஜி. முருகேசன் தெரிவித்துள்ளார். #MGRcentenaryfunction #TNPrisonersReleased
    Next Story
    ×