என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
முதுகுளத்தூர் சந்தையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது
முதுகுளத்தூர்:
முதுகுளத்தூர் வாரசந்தை நாளான ஒவ்வொரு வியாழக் கிழமைகளிலும் கிராம பகுதியிலிருந்து சந்தைக்கு பொருட்களை வாங்க வரும் நபர்களிடம் செல்போன், பணம், நகைகள் திருடுபோயின.
இதையடுத்து முதுகுளத்தூர் டி.எஸ்.பி., உதயசூரியன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் பெரிய சாமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுதர்சன் மற்றும் போலீசார் வாரசந்தையில் சீருடை இல்லாமல் ரோந்து வந்தனர்.
அப்போது சந்தைக்கு வந்த சாயல்குடி ஜெயேந்திரபாண்டியிடம் இருந்து, செல்போனை திருடும் போது, போலீசார் பிக்பாக்கெட் திருடர்களைகையும், களவுமாக பிடித்தார்.
பிக் பாக்கெட் திருடர்களான மதுரை திருப்பரங்குன்றம் ராஜேந்திரன், (52), ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்த செல்வக்குமார் (41), ஆகிய இருவரிடம் இருந்து 2 செல்போன்கள், 5 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இருவர் மீதும் வழக்கு பதிந்து, முதுகுளத்தூர் கிளை சிறையில், போலீசார் அடைத்தனர். பிக் பாக்கெட் திருடர்களான திருப்பரங்குன்றம் முருகேசன், ராமநாதபுரம் செல்வக்குமார் இருவரும் திண்டுக்கல், கரூர், திருச்சி, பரமக்குடி, முதுகுளத்தூர் பகுதியில் தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டுள்ளனர்.
முருகேசன் ஒரு வாரத்திற்கு முன்பு தான் திருச்சி சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்