search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கிச்சூட்டில் பலியான எஞ்சிய 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் தடை
    X

    துப்பாக்கிச்சூட்டில் பலியான எஞ்சிய 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் தடை

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களில் எஞ்சிய 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. #ThoothukudiShooting
    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தாலும் பதப்படுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஏற்கனவே, 7 பேரின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இதனை, அடுத்து மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய அரசு அனுமதி கோரியிருந்தது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தங்களது தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்ய கூடாது என வழக்கறிஞர் சங்கரச்சுப்பு வாதிட்டார். இதனை அடுத்து, மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய நீதிபதிகள் தடை விதித்தனர். 

    பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
    Next Story
    ×