என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தவளக்குப்பம் அருகே இளம்பெண்ணை கடத்தி சென்ற டிரைவர் கைது
அரியாங்குப்பம்:
தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கத்தை அடுத்த தமிழக பகுதியான சிங்கிரிகுடி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 21). டிரைவர். இவர் அபிஷேகப்பாக்கம் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லட்சுமணன் காதலித்து வந்த இளம்பெண் திடீரென மாயமானார். அதே வேளையில் லட்சுமணனும் மாயமாகி இருந்தார்.
இதையடுத்து மாயமான பெண்ணின் பெற்றோர் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தனர். புகாரில் தங்களது மகளை லட்சுமணன் கடத்தி சென்று விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் போக்சோ சட்டத்தின் கீழ் கடத்தல், கற்பழித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை கடத்தி சென்ற லட்சுமணனை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவரை கைது செய்தனர்.
மேலும் கடத்தி செல்லப்பட்ட இளம்பெண்ணை மீட்டனர். இன்று அவர்கள் இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்