search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போடியில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு சீல் வைப்பு
    X

    போடியில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு சீல் வைப்பு

    போடியில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

    போடி:

    போடி நகராட்சி சார்பில் காமராஜர் பஜார், பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி ரோடு ஆகிய இடங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளை டெண்டர் மூலம் வியாபாரிகளுக்கு வருடாந்திர முறையில் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

    இது மாதம் ஒரு முறை, 3 மாதம், 6 மாதம், 12 மாதங்களுக்குரிய வாடகைகளை நகராட்சி அலுவலகத்தில் கட்டலாம். இதில் சென்ற ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டிற்குரிய வாடகைகளை கடைக் காரர்கள் கட்டவில்லை. பல தடவை நகராட்சி நிர்வாகம் வாடகைகளை கட்டும்படி கடைக்காரர்களை எச்சரித்து உள்ளது. ஆனால் வாடகை பணம் நகராட்சிக்கு வசூல் ஆக வில்லை.

    நகராட்சி ஆணையாளர் சுவாமிநாதன் நகராட்சி அலவலர்களுடன் வணிக வளாகத்திற்கு சென்று வாடகைகள் செலுத்தாத 20 கடைகளுக்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார். இந்த நடவடிக்கை வாடகை பணம் கட்டாத கடைகாரர்கள் மீது பாயும் என்றார்.

    Next Story
    ×