search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே நகைக்காக விவசாயியை தாக்கிய கணவன்-மனைவி
    X

    தேனி அருகே நகைக்காக விவசாயியை தாக்கிய கணவன்-மனைவி

    தேனி அருகே நகைக்காக விவசாயியை தாக்கிய கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.

    தேனி:

    தேனி அருகே பழனிசெட்டிபட்டி போலீஸ் சரகம் சங்ககோணான்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சீனி (வயது 70). விவசாயி. அவரது மகன் சிவக்குமார் (25). மருமகள் மகேஸ்வரி (22). இவர்கள் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்கள்.

    சம்பவத்தன்று சீனியிடம் உள்ள 3 பவுன் நகையை சிவக்குமார் அவருக்கு தெரியாமல் எடுத்துள்ளார். இதனை அறிந்த சீனி அவர்களை தட்டிக் கேட்டார். ஆத்திரமடைந்த கணவன்-மனைவி 2 பேரும் சேர்ந்து சீனியை சரமாரியாக தாக்கினர்.

    படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சீனி பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிவக்குமார், அவரது மனைவி மகேஸ்வரியை கைது செய்தனர்.

    Next Story
    ×