search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்காசி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
    X

    தென்காசி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

    தென்காசி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியானார். இதுபற்றி தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள இலத்தூரை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது32). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தென்காசி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் செல்வராஜ் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்...

    சிங்கை வைத்திலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி தங்கம்(வயது70). இவர் விபத்தில் காயம் அடைந்து நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி சிங்கை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×