என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கதிராமங்கலத்துக்கு ஆதரவாக போராட்டம்: மெரீனாவில் போலீஸ் பாதுகாப்பு
Byமாலை மலர்23 July 2017 6:59 AM GMT (Updated: 23 July 2017 6:59 AM GMT)
கதிராமங்கலத்துக்கு ஆதரவாக சென்னை மெரீனாவில் போராட்டம் நடத்த போவதாக சமூக வலைதளங்களில வெளியான தகவலை அடுத்து ஏராளமான போலீசார் மெரீன கடற்கரையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சிக்கு எதிராக பொது மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வயல்வெளியில் எண்ணெய் குழாய் பதிப்பதற்கும் எரிவாயு எடுப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து பொது மக்களுடன் மாணவ- மாணவிகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்துக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்கள் தினமும் வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவாக மெரீனா கடற்கரையிலும் மாணவ- மாணவிகள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்த வர உள்ளதாக உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனால் போராட்டத்தை முன் கூட்டியே தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் மெரீனா கடற்கரையில் இன்று குவிக்கப்பட்டுள்ளனர். ரோந்து போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பஸ் நிறுத்தங்களில் மொத்தமாக யாராவது வந்து இறங்கினால் அவர்களிடம் போலீசார் எங்கிருந்து வருகிறீர்கள் என்று விசாரிக்கின்றனர். மெரீனாவில் வழக்கத்துக்கு அதிகமாக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான நிலை காணப்படுகிறது.
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சிக்கு எதிராக பொது மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வயல்வெளியில் எண்ணெய் குழாய் பதிப்பதற்கும் எரிவாயு எடுப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து பொது மக்களுடன் மாணவ- மாணவிகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்துக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்கள் தினமும் வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவாக மெரீனா கடற்கரையிலும் மாணவ- மாணவிகள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்த வர உள்ளதாக உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனால் போராட்டத்தை முன் கூட்டியே தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் மெரீனா கடற்கரையில் இன்று குவிக்கப்பட்டுள்ளனர். ரோந்து போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பஸ் நிறுத்தங்களில் மொத்தமாக யாராவது வந்து இறங்கினால் அவர்களிடம் போலீசார் எங்கிருந்து வருகிறீர்கள் என்று விசாரிக்கின்றனர். மெரீனாவில் வழக்கத்துக்கு அதிகமாக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான நிலை காணப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X