என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அஞ்சுகிராமத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து வாலிபர் பலி
நாகர்கோவில்:
அஞ்சுகிராமம் அருகே வாரியூர் ஸ்ரீலெட்சுமிபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் சக்திவேல்குமார் (வயது 23).
இவர், தனது மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அஞ்சுகிராமம் டாஸ்மாக்கடை அருகே வந்தபோது ரோட்டின் குறுக்கே நாய் ஒன்று பாய்ந்தது. அதன் மீது மோதாமல் இருக்க சக்திவேல் குமார் பிரேக் போட்டார்.
அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து சக்திவேல் குமார் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக் காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சக்திவேல் குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து அஞ்சு கிராமம் போலீஸ் இன்ஸ் பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான சக்திவேல்குமாரின் உடல் பரிசோதனை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது.
இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்