search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரட்டூரில் எல்.ஐ.சி. அதிகாரி வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை
    X

    கொரட்டூரில் எல்.ஐ.சி. அதிகாரி வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை

    கொரட்டூரில் எல்.ஐ.சி. அதிகாரி வீட்டில் 30 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையரை தேடி வருகிறார்கள்.
    வில்லிவாக்கம்:

    கொரட்டூரில் கண்டிகை தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி.யில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அற்புதம். முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார்.

    நேற்று இருவரும் வீட்டை பூட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றனர். சாவியை காலணிகள் வைக்கும் மேஜையில் மறைத்து வைத்து விட்டு சென்றனர்.

    பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த அற்புதம் சாவி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவில் இருந்த 30 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

    வீட்டு சாவியை காலணி வைக்கும் மேஜையில் மறைத்து வைப்பதை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

    நகையை கொள்ளையடித்து பின் வீட்டை பூட்டி விட்டு சாவியை வேறு எங்கோ வீசி உள்ளனர் என்று தெரிகிறது. இதுகுறித்து கொரட்டூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையரை தேடி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்...

    அம்பத்தூர் மேனாம்மேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் கடைக்கு நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் 5 பவுன் நகையை பறித்து சென்று விட்டனர்.

    Next Story
    ×