search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசாரை கண்டு தப்பியோடிய 2பேர் கீழே விழுந்து காயம்
    X

    மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குற்றவாளிகள்.

    போலீசாரை கண்டு தப்பியோடிய 2பேர் கீழே விழுந்து காயம்

    • முத்துப்பேட்டை மங்களூர் பகுதியை சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் சாமி கும்பிட வந்த போது உள்ளூர் நபர்களுடன் தகராறு ஏற்பட்டது.
    • இந்த குற்ற வழக்கில் தொடர்புடைய ராஜ துரை என்பவர் கடந்த வாரம் பாத்ரூமில்வழுக்கி விழுந்ததில் வலதுகை உடைபட்டது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூர் வீரனார் கோவில் அருகில் கடந்த 15-ம் தேதி முத்துப்பேட்டை மங்களூர் பகுதியை சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் சாமி கும்பிட வந்த போது உள்ளூர் நபர்களுடன் தகராறு ஏற்பட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பலனின்றி முத்துப்பேட்டை செம்படவன் காடு மங்களூர் பகுதியை சேர்ந்த கார்த்தி இறந்தார். இது குறித்து அவரது மனைவி சுகன்யா (வயது 29) கொடுத்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த குற்ற வழக்கில் தொடர்புடைய ராஜ துரை என்பவர் கடந்த வாரம் பாத்ரூமில்வழுக்கி விழுந்ததில் வலதுகை உடைபட்டது. அதனைத் தொடர்ந்து மற்ற குற்றவா ளிகளான சத்யராஜ், செல்வா ஆகிய இருவரும் மறைந்திருக்கும் இடத்தை அறிந்து போலீசார் அவர்களை விட்டி சென்றனர். அப்போது அங்கிருந்து தப்பி ஓடிய அவர்கள் தடுமாறி விழுந்து இருவருக்கும் இடதுகை உடைந்தது. அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×