search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
    X

    குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

    • கள்ளப்பெரம்பூர் புதுக்காலனி தெருவை சேர்ந்த செல்வகுமார் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
    • இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார்.

    தஞ்சாவூர்:

    அரியலூர் மாவட்டம், மண்டபத்தேரி மேற்கு தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 38) சாராய வியாபாரி. தஞ்சை மாவட்டம் கள்ளப்பெரம்பூர் புதுக்காலனி தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (38). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இதையடுத்து திருநாவு க்கரசு மற்றும் செல்வகுமார் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவுபடி கும்பகோணம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி, தஞ்சை தாலுகாபோலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீ ஸ்வரன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் திருநாவுக்கரசு, செல்வகுமார் ஆகியோரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×