search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீரடி சாய் பாபா
    X
    சீரடி சாய் பாபா

    ஆத்ம ஞானம் மேம்படுத்தும்...பாபா காட்டிய பாதை...மகத்தான மூல மந்திரம்

    மூல மந்திரத்தை சொல்ல சொல்ல அது பாபா காட்டும் பாதைக்கு நம்மையும் அறியாமல் நம்மை அழைத்துச் செல்லும்.

    ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
    சீரடி சாய்பாபாவின் மகத்தான மூல மந்திரம்.
    யார் ஒருவர் இந்த மூல மந்திரத்தை தினமும் 108 தடவை மனதுக்குள் உச்சரிக் கிறார்களோ அவர்களுக்கு பாபாவின் அருள் கடாட்சம் நிரம்பக் கிடைக்கும். இதை சாய்பாபாவே பல தடவை தனது பக்தர்களிடம் சொல்லி இருக்கிறார்.
    பாபாவை குருவாக ஏற்று நம்பிக்கை வைத்து அவரை தியானிப்பவர்கள் தினமும் இந்த மந்திரத்தை தவறாமல் சொல்ல வேண்டும். அப்படி மூல மந்திரத்தை சொல்ல சொல்ல அது பாபா காட்டும் பாதைக்கு நம்மையும் அறியாமல் நம்மை அழைத்துச் செல்லும்.

    “சாய்.... சாய்... என்று எப்போதும் கூறிக் கொண்டிருப்பீர்களானால் நான் உங்களை ஏழு கடலுக்கு அப்பால் எடுத்துச் செல்வேன். இம்மொழிகளை நம்புங்கள். நீங்கள் நிச்சயம் நன்மை அடைவீர்கள். வழிபாட்டின் உபசாரங்கள் எட்டோ, பதினாறோ எனக்குத்தேவையில்லை. எங்கு முழுமையான பக்தி இருக்கிறதோ அங்கு நான் அமர்கிறேன்” என்று பாபாவே சொல்லி இருக்கிறார்.
    தினமும் காலையில் இறைவழிபாடு செய்யும் போது ஒரு 10 நிமிடம் ஒதுக்கி “ஓம் சாய் ஸ்ரீசாய் ஜெய ஜெய சாய்”  மூல மந்திரத்தை மனதார சொல்லுங்கள். உங்களது அன்பையும், பக்தியையும் பாபா ஏற்றுக் கொண்டு ஆசீர்வதிப்பார். உங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு கவசமாக இந்த மூல மந்திரம் இருக்கும். இதை பல்வேறு வகைகளில் பாபா தன் பக்தர்களுக்கு உணர்த்தி இருக்கிறார்.
    அதை காணலாம்....

    * யார் எனது திரு நாமத்தை தினமும் இடைவிடாமல் ஜெபிக்கிறாரோ அவர் நிச்சயம் முக்திப்பேறு அடைவார்.

    *ஆடம்பரங்களையும் வெளித் தோற்றங் களையும் கண்டு நான் ஏமாறுவதே இல்லை. என் நாமத்தை மனதுக்குள் ஆத்மார்த்தமாக உச்சரித்துக்கொண்டே இருப்பவர்தான் எனது உண்மையான பக்தனாக இருக்க முடியும். அத்தகையவர்களின் உள்ளங் களில்தான் நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

    * யார் என்னுடய நாமத்தை நம்பிக்கை யோடு சொல்லி வருகிறோரோ அவருக்கு நான் விரும்பியதை எல்லாம் அளிக்கிறேன். இதன் காரணமாக அவருக்கு என் மேல் உண்டான பக்தி பல்கிப் பெருகும்.

    * சாய் சாய் என்ற திருநாமம் கலியுகத்தின் மாயையைக்கலைக்கும். அதர்மங்களை எரிக்கும். பேச்சாலும், செயல்களாலும் செய்யப்படும் பாவங்கள் என் முன்பு சொல்லப் படும் சாய் சாய்  என்ற மந்திரத்தால் பறந்தோடி விடும்.

    * உங்களுடைய புத்திசாலித்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு எப்போதும் சாய் சாய் என்று என்னையே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அப்படி வைத்துக் கொண்டால் இந்த உலகின் தேவை யற்ற பந்தபாசப்பிடிகளில் இருந்து நீங்கள் விடு விக்கப்படுவீர்கள்.

    * யாருடைய பாவங்கள் எல்லாம் மறக்கப் படுகிறதோ அந்த அதிர்ஷ்டசாலிகளே என் திருநாமத்தை சொல்லி வணங்கும்  அரிய பாக்கியத்தை பெறுவார்கள்.

    * நீ எந்த காரியத்தை செய்தாலும் அல்லது செய்து கொண்டு இருந்தாலும் எதை செய்தாலும் என்னையே நினைவில் நிறுத்தி என் நாமத்தை சொல்லிக் கொண்டே செய். என் நாமம் எந்த அளவுக்கு உச்சரிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு அந்த வேலையை நான் மிக எளிதாக வெற்றி அடையும்படி செய்வேன்.

    * நீங்கள் என்னை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் நான் உங்களை நோக்கி பல அடிகள் எடுத்து வைப்பேன். உங் கள் மனதில் தோன்றும் ஆழமான எண் ணங்களையும் நான் அறிவேன். ஒவ்வொரு நிமிடமும் நான் கவனித்துக் கொண்டு இருக்கிறேன். என் நாமத்தை உச்சரித்தால் அருகில் இருந்து உங்களை காப்பாற்றிக் கொண்டே இருப்பேன்.

    * ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய் என்ற என் நாமத்தை உச்சரிப்பதால் உனக்கு வேறு எந்தவித சிந்தனையும் தோன்றாது. வேறு எந்த துன்பங்களும் வராது. என் நாமத்தை மனதுக்குள் ஒருமித்த உணர்வுடன் சொல்லச் சொல்ல உண்மைகள் தானாக வெளிவரும்.

    * என் பக்தன் என்னிடம் மட்டுமின்றி எல்லா ஜீவன்களிலும் நான் இருப்பதாக உணரவேண்டும். அப்படி உணர்ந்து  என் நாமத்தை உச்சரிக்கும்போது எல்லா வற்றிலும் என்னை குருவாக நீ காண முடியும். நாளடைவில் அவன் நானாக ஆகி விடுவான்.

    *பக்தா உன் எண்ணங்கள், குறிக்கோள் கள் அனைத்திலும் என் நாமத்தை சேர்த்துக் கொள். உனக்கு மிக உயரிய நிலை விரை வில் கிடைக்கும்.

    * ஒருவன் முழு மனதுடன் என் நாமத்தை உச்சரித்தால் அவனது உடல், ஆத்மா இரண்டை பற்றியும் எந்தவித கவலையும் கொள்ள வேண்டியது இல்லை. என்னைப் பற்றிய பேச்சுகளையே கேட்டு என்னையே நினைத்து என் நாமத்தையே அவன் உச்சரித்தால் என்னோடு கலந்து விடுவான்.

    * இடைவிடாமல் என் நாமத்தை உச் சரித்துக் கொண்டிருப்பவர்கள் அவர்களது லட்சியத்தை தங்கு தடையின்றி மிக எளிதாக சென்று அடைவார்கள்.

    * நான் மிகப்பெரிய உபசாரங்களை எனக்கு செய்யுங்கள் என்று என் பக்தர்களிடம் ஒரு போதும்  எதிர்பார்க்கவில்லை. ஆடம்பரமான வழிபாடுகள் எனக்கு வேண்டாம். ஆத்மார்த் தமாக உள்ளம் ததும்ப சாய் சாய் என்று சொன்னாலே போதும்.

    * ஒருவன் தனது சுமைகளை என் மீது இறக்கி விட்டு எனது நாமத்தை நினைத்துக் கொண்டே இருந்தால் நான் அவனு டைய எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்கிறேன்.

    இப்படி மூல மந்திரத்தின் மகிமையை சாய் பாபா தனது பக்தர்களுக்கு பல தடவை உணர்த்தி உள்ளார். அதனால்தான் பாபா பக்தர்கள் இடையே சாய்ராம் சாய்ராம் என்று சொல்வது வழக்கத்துக்கு வந்தது.

    பாபாவின் திருநாமத்தை தினமும் இடைவிடாமல் உச்சரிக்கும் வழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பாபாவிடம் நெருங்கிப் பழகிய பலரும் குறிப்புகள் எழுதி வைத்துள்ளனர். பாபாவின் மூல மந்திரத்தை உச்சரிக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டால் அவரது உருவத்தை நினைவுக்கு கொண்டு வந்து நிலை நிறுத்துவது மிக எளிதாக மாறும்.

    இந்த மூல மந்திரம் மட்டுமல்ல இன்னும் பல மந்திரங்கள் பாபாவின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் மக்கள் மத்தியில் உள்ளது. பாபா அஷ்டோத்தர சதநாமாவளி, சீரடி சாய்நாதர் கவசம், பாபா 108 போற்றி, பாபா சாலீசா என்று ஏராளமான மந்திரங்கள் இருக்கின்றன.

    சீரடி சாய்பாபாவின் காயத்ரி மந்திரத்தை சமீப காலமாக நிறைய பேர் இடைவிடாமல் உச்சரிக்கும் வழக்கத்தை மேற்கொண்டு உள்ளனர். இதோ அந்த காயத்ரி மந்திரம்....
    ஓம் ஷீரடி ஸாயி நிவாஸாய வித்மஹே
    ஸர்வ தேவாய தீமஹி
    தந்தோ ஸர்வப்ரசோதயாத்
    ஓம் ஷிரடி வாசாய வித்மஹே
    சச்சிதானந்தாய தீமஹி
    தந்தோ சாய் ப்ரசோதயாத்
    இந்த மந்திரம் தவிர சாய்நாதர் திரு வடியை போற்றும் ஒரு மந்திரமும் பக்தர்கள் மத்தியில் வழக்கத்தில் உள்ளது. அதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
    சாயி நாதர் திருவடியே!
    சம்பத் அளிக்கும் திருவடியே!
    நேயம் மிகுந்த திருவடியே!
    நினைத்ததை அளிக்கும் திருவடியே!
    தெய்வ பாபா திருவடியே!
    தீரம் அளிக்கும் திருவடியே!
    உயர்வை அளிக்கும் திருவடியே!
    ஓம் சாய்ராம்!
    இந்த மந்திரங்கள் போல பாபாவின் முதன்மை பக்தராக திகழ்ந்த தாஸ்கணு மகராஜ் 1918-ல் எழுதிய “ஸ்ரீ சாய்நாத ஸ்தவன மஞ்சரி” எனும் நூலும் பக்தர்கள் மத்தியில் மிகப்பெரிய தகவல் சுரங்கமாக உள்ளது. அதன் தொடக்கத்தில் தாஸ்கணு பாபாவை பற்றி பாடும்போது...
    என்றும் உள்ளவனே, உன்னை
    நான் எப்படி புகழ்வேன்?
    ஆதியந்தம் அற்றவனே, உன்னை
    நான் எப்படி வணங்குவேன்?
    உன்னை போற்றிப் பாட முயன்று
    பல குரல்கள் தோற்றன
    ஸ்ரீ சாய்நாதா உன்னை நான்
    சாஷ்டாங்கமாக வணங்குகிறேன்
    என்று பாடினார்.

    இவை தவிர இதே போன்று சமீப காலமாக சாய்பாபாவின் திருநாமத்தை மேம்படுத்தும் வகையில் எத்தனையோ மகத்தான மந்திரங்கள் வந்து விட்டன. நாடு முழுவதும் எண்ணற்றவர்கள் பாபா 108 போற்றி எழுதி புழக்கத்தில் விட்டுள்ளனர். அவை எல்லாமே பாபா பக்தர்களிடம் மிக சிறந்த மந்திரங்களாக பரவி உள்ளன.

    அதுபோல ஸ்ரீசாய் பாபாவின் 11 நாமாவளி கள் புகழ் பெற்றவை.

    1. ஓம் சமார்த்த சத்குரு ஸ்ரீ சாயிநாதாய நமஹ
    2.ஓம் குருதேவ தத்தாத்ரேயாய சாயிநாதாய நமஹ
    3. ஓம் விஷ்வப் பிரணாய சாயிநாதாய நமஹ
    4. ஓம் விக்னநிவாராகாய சாயிநாதாய நமஹ
    5. ஓம் ரோக நிவாராகாய சாயிநாதாய நமஹ
    6. ஓம் மஹாபய நிவாராகாய சாயிநாதாய நமஹ
    7. ஓம் சாபவிமோச்சகாய சாயிநாதாய நமஹ
    8. ஓம் அபயப் பிரதாய சாயிநாதாய நமஹ
    9. ஓம் சகல தேவத ஸ்வரூபாய சாயிநாதாய நமஹ
    10. ஓம் சாரங்கதா வாத்சலாய சாயிநாதாய நமஹ
    11. ஓம் ஆயுள் ஆரோக்ய ஐசுவரிய பிரதாய சாயிநாதாய நமஹ

    இப்படி பல்வேறு மந்திரங்கள் இருந்தாலும் பாபாவின் மூல மந்திரமான ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய் என்ற மந்திரம் நிகரற்ற மந்திரமாக உலகம் முழுக்க  கோடிக்கணக்கான பக்தர்களின் மனதுக்குள் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. தினமும் பாபா படம் முன்பு அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்ல சொல்ல  உங்களுக்குள்ளும் மாற்றம் வருவது நிச்சயம்.

    இந்த மந்திரம் மட்டுமல்ல பாபாவின் உருவப் படமும் மாற்றத்தை தரும்.
    Next Story
    ×