search icon
என் மலர்tooltip icon

    மடகாஸ்கர்

    • உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 50 சதவீதம் தமிழ்நாடு பயன்படுத்துகிறது.
    • சின்னஞ்சிறு தொழில்கள் உருவாகின்றன. பெரிய தொழிற்சாலைகள் அமைவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

    ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பல காரணிகள் அடிப்படையாக அமைந்தாலும் சில முக்கியமான காரணிகள் அவசியமாக தேவைப்படுகின்றன.

    அரசியல், பொருளாதாரம், சமூகம், தொழில்கள், தொழில்நுட்பம், என பல காரணிகள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

    பல ஆண்டுகளாக தரிசு நிலங்களாகவும், தொழில் வளர்ச்சியற்ற பகுதியாகவும், கருதப்பட்ட தென் தமிழகம், தற்போது நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் மேம்பாட்டுக்கும் உறுதுணையாய் அமைகிறது. கடந்த சில ஆண்டுகளாக, தென் தமிழகத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    குறிப்பாக, மின்சார தேவைக்கு அதிகமாக பயன்படும் கூடங்குளம் அணுமின் நிலையம், விஜயநாராயணம் ஐ என் எஸ் கட்டபொம்மன், உடன்குடி அனல் மின் நிலையம், குலசேகரப்பட்டணம் ஐ.எஸ்.ஆர்.ஓ ஸ்பேஸ் போர்ட் போன்றவை தென் தமிழக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    இந்திய அரசும் சோவியத் அரசும் இணைந்து உருவாக்கிய அணுமின் நிலையம் கூடங்குளம் அணுமின் நிலையம். 1988-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ம் நாள் இந்த அணுமின் நிலையம் உற்பத்திக்கான உடன்படிக்கை கையெழுத்தானது. அப்போதைய இந்திய பிரதம மந்திரி ராஜீவ் காந்தி மற்றும் சோவியத் நாட்டின் தலைமை பொறுப்பில் இருந்த மிக்ஹைல் கோர்பச்சேவ் ஆகியோர் இணைந்து இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்கள்.

    இந்தியாவில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் மிகப்பெரியது திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அமைந்துள்ள அணு மின் நிலையம் ஆகும்.


    இந்து அணுமின் நிலையத்தின் கட்டுமான பணிகள் 2002-ம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கப்பட்டாலும் பல்வேறு எதிர்ப்புகளால் இதன் கட்டுமான பணிகள் நிறைவேற தாமதமானது. இருந்த போதும் 2013-ம் ஆண்டு அக்டோபர் 22ஆம் நாள் யூனிட் 1 ஆரம்பிக்கப்பட்டு ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

    ரஷிய நாட்டோடு இணைந்து தொடங்கப்பட்ட இந்த அணுமின் நிலையம் 2015-ம் ஆண்டு யூனிட் 2 செயல்பட ஆரம்பித்தது. 2017ஆம் ஆண்டு யூனிட் 3மற்றும் யூனிட் 4 மின் உற்பத்தி அலகுகள் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் செயல்பட ஆரம்பித்தன. தற்போது யூனிட் 5 மின் உற்பத்தி அலகு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. 2026-ம் ஆண்டு டிசம்பர் மாதம் யூனிட்-5 மின் உற்பத்தி அலகு செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 60 ஆண்டுகள் தடையில்லா மின்சாரத்தை வழங்கும் வசதி கூடங்குளம் அணு மின் நிலையம் மூலம வழங்கப்படுகிறது.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 50 சதவீதம் தமிழ்நாடு பயன்படுத்துகிறது. 35 சதவீத மின்சாரம் அருகில் உள்ள மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள 15% மின்சாரம் மத்திய அரசு தேவைகளுக்காகவும், அவசர தேவைகளுக்காகவும் பயன்படுத்தும் விதத்தில் மின்சார பங்கீடு செய்யப்படுகிறது. இதேபோல் யூனிட் 6 மின் உற்பத்தி கட்டுமான பணிகள் 2027-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவு பெற உள்ளது.

    ஐ என் எஸ் கட்டபொம்மன்: திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் என்னும் ஊரில் சுமார் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் ஐஎன்எஸ் கட்டபொம்மன் என்னும் பெயர் கொண்ட விஎல்எப் ட்ரான்ஸ்மிஷன் ஃபெசிலிட்டி இந்திய கப்பற்படையால் உருவாக்கப்பட்டுள்ளது.

    1984-ஆம் ஆண்டு ஐஎன்எஸ் கட்டபொம்மன் என்னும் அமைப்பின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டாலும் 1996-ம் ஆண்டு அக்டோபர் 20-ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட ஆரம்பித்தது. இந்திய தேசிய சுதந்திரத்திற்காக பாடுபட்ட மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பெயரில் இது அமைக்கப்பட்டுள்ளது.

    ரஷியாவுக்கு அடுத்ததாக இந்தியாவில் தொடங்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பு இது ஆகும்.

    உடன்குடி அனல் மின் நிலையம்: 2012-ஆம் ஆண்டு உடன்குடி பவர் கார்ப்பரேஷன் என்னும் அமைப்பு தொடங்கப்பட்டது. பின்னர் 2018-ம் ஆண்டு இந்த அனல் மின்சார உற்பத்தி திட்டம் நடைமுறைப்படுத்துவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.

    நெல்லை கவிநேசன்

    நெல்லை கவிநேசன்

    2019-ம் ஆண்டு பணிகள் நடைபெறும் போதே ஏற்பட்ட மழை வெள்ளத்தால் கட்டுமான பணிகள் தாமதமானது. தற்போது மிக வேகமாக இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

    நிலக்கரியின் துணையோடு இயங்க வசதியாக இந்த குலசேகரபட்டினம் அனல் மின் நிலையம் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் கடற்கரையில் நிலக்கரியை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த அனல் மின் நிலையம் தமிழ்நாட்டின் மின்சார தேவையை பூர்த்தி செய்யவும் ரெயில்வே போக்குவரத்தை ஏற்படுத்தவும், மேம்படுத்தப்பட்ட சாலை வசதிகளை உருவாக்கவும் மிகவும் உதவியாய் அமைகிறது.

    இந்தியாவில் ஐ.எஸ்.ஆர்.ஓ. எனப்படும் இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷன் இரண்டாவதாக உருவாக்கிய ஸ்பேஸ் போர்ட் ஆகும். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சுமார் 2350 ஏக்கர் நிலத்தில் இந்த ஸ்பேஸ் போர்ட் உருவாக்கப்படுகிறது.

    ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஸ்பேஸ் சென்டர் 1971-ம் ஆண்டு இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷன் ஆல் உருவாக்கப்பட்டது.


    நாட்டின் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட இந்த அமைப்பு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான செயல் திட்டங்களை வகுத்து வங்காள விரிகுடாவில் சிறந்த பாதுகாப்பை உருவாக்கியது.

    கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ம் நாள் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பாதுகாப்பை அதிகப்படுத்த தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள குலசேகரப்பட்டினம், மாதவன் குறிச்சி, பள்ளக்குறிச்சி, படுக்கப்பத்து போன்ற கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 2,223 ஏக்கர் பரப்பளவில் ஐ.எஸ்.ஆர்.ஓ. தொடங்க அடிக்கல் நாட்டினார்.

    ரேடார் லாஞ்சஸ் மற்றும் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் ஆகிய வசதிகளோடு ஐ.எஸ்.ஆர்.ஓ. புதிதாக ரோகினி சவுண்டிங் ராக்கெட் ஆர் ஹெச் 200 என்னும் புதிய பாதுகாப்பு வசதியை உருவாக்கியுள்ளது.

    ஸ்பேஸ் போர்ட் என அழைக்கப்படும் முதல் விமானம் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதிஅனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    ஐ.எஸ்.ஆர்.ஓ. என அழைக்கப்படும் இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷன் சாட்டிலைட்களை உருவாக்கி அதனை விண்ணுக்கு அனுப்பி இந்த மண்ணுலகம் செழித்து வாழ பல்வேறு வகையில் உதவி வருகிறது.

    ஐ.எஸ்.ஆர்.ஓ. தொழில்நுட்பம் தற்போது குறிப்பாக வேளாண்மை வளர்ச்சிக்கு மிகவும் உதவியாய் அமைகிறது.

    வானிலை முன்னறிவிப்பின் மூலம் வேளாண் பயிர்களை சரியான காலத்தில் பயிரிடவும் அதன் மூலம் அதிக பலன் பெறவும் உதவுகிறது. கோதுமை, சணல், பருத்தி, நெல், கரும்பு, பயறு வகைகள் போன்ற பல்வேறு பயிர்கள் பயிரிட உதவும் சரியான காலத்தை திட்டமிட்டு முன்கூட்டியே வேளாண் விவசாயிகளுக்கு கணித்துச் சொல்லுகிறது.

    ரெயில்வே துறையிலும் கடந்த சில ஆண்டுகளாக ஸ்பேஸ் டெக்னாலஜி பெருமளவில் உதவி வருகிறது. ரெயில் தண்டவாளங்களில் ஏற்படும் தடைகளை முன்கூட்டியே கணித்து அறிவிக்கிறது. ஆளில்லா லெவல் கிராஸிங் விபத்துகளைத் தடுப்பதற்கு இது உதவுகிறது.

    சாட்டிலைட் இமேஜிங் மூலம் வெளிநாட்டவர்களுடைய ஆக்கிரமிப்பை தடுக்கவும் நமது இந்திய நாட்டின் எல்லைகளை கண்காணித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தவும் இது உதவுகிறது. இன்று நாம் அனுபவிக்கும் பல்வேறு வசதிகள் ஐ.எஸ்.ஆர்.ஓ. அனுப்பிய சேட்டிலைட் மூலம் தான் நமக்கு கிடைத்திருக்கிறது.

    இன்டர்நெட் வசதிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உடனுக்குடன் பார்க்கும் வசதி, செல்போன் இயங்கும் வசதி, போன்ற மனித உலகிற்கு பயன் தரும் வசதிகள் இன்டர்நெட் மூலம் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    டெலி எஜுகேஷன், டெலி ஹெல்த் கேர், லேண்ட் அண்ட் வாட்டர் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட், இண்டராக்டிவ் அட்வைசரி சர்வீசஸ், டெல பிஷ்ஷரி, இ கவர்னன்ஸ் சர்வீசஸ், வெதர் சர்வீசஸ், டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் சப்போர்ட், ரிமோட் சன்சிங் அப்ளிகேஷன்ஸ் போன்ற பல்வேறு சேவைகளை சேட்டிலைட் மூலம் பெறுவதற்கு ஐ.எஸ்.ஆர்.ஓ. துணை நிற்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் பாதுகாப்புக்கு அடித்தளமாக ஐ.எஸ்.ஆர்.ஓ. அமைகிறது. கடல் வழியிலும், வான் வெளியிலும், பாதுகாப்பை பலப்படுத்த குலசேகரப்பட்டினத்தில் இந்த ஐ.எஸ்.ஆர்.ஓ. நிறுவப்பட்டுள்ளது.

    இதன் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகமாக உருவாக்கப்படுகிறது. ஐ.எஸ்.ஆர்.ஒ.வை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டு நகர்ப்புறத்திற்கு ஈடாக அந்த பகுதி வளர்ச்சி பெறுகிறது. போக்குவரத்து வசதிகள் அதிகப்படுத்தப்படுகின்றன.

    இசிஆர் என அழைக்கப்படும் ஈஸ்ட் கோஸ்ட் ரோடு கிழக்கு கடற்கரை சாலையில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை அமைக்கப்படும். இதனால் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப் பட்டு குறைந்த பயண நேரத்தில் பயணம் செய்யும் வசதி உருவாக்கப்படும்.

    அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் பல்வேறு வேலை வாய்ப்புகள் உருவாவதால், குலசேகரப்பட்டினம் சுற்றியுள்ள பகுதிகள் வளர்ச்சி பெற்று வருகின்றன. நிலங்களின் விலைமதிப்பு அதிகமாகின்றது. சின்னஞ்சிறு தொழில்கள் உருவாகின்றன. பெரிய தொழிற்சாலைகள் அமைவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

    தொடர்புக்கு: nellaikavinesan25@gmail.com

    Cell:94438 72528

    • தலைநகர் அன்டனானரிவோவில் பரியா மைதானம் அமைந்துள்ளது.
    • மைதானத்தில் சுமார் 50,000 பார்வையாளர்கள் திரண்டிருந்தனர்.

    அன்டனானரிவோ:

    மடகாஸ்கர் நாட்டின் தலைநகர் அன்டனானரிவோவில் பரியா மைதானம் அமைந்துள்ளது. அங்கு நேற்று விளையாட்டு போட்டி ஒன்றின் தொடக்க விழா நடைபெற்றது. இதைக் காண சுமார் 50,000 பார்வையாளர்கள் திரண்டிருந்தனர்.

    அப்போது, மைதானத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர் என்றும், 80 பேர் வரை காயம் அடைந்துள்ளனர் என்றும், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சே தெரிவித்துள்ளார்.

    கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

    மைதானத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×