என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • வாரணாசியில் இருந்து புறப்பட்ட சபர்மதி பயணிகள் விரைவு ரெயில் [19168] இன்று அதிகாலை கான்பூர் அருகே தடம்புரண்டது.
    • தீயணைப்பு மற்றும் ஆபுலன்ஸ் வாகனங்கள் அங்கு விரைந்துள்ளன

    உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து புறப்பட்ட சபர்மதி பயணிகள் விரைவு ரெயில் [19168] இன்று[ஆகஸ்ட் 17] [சனிக்கிழமை] அதிகாலை கான்பூர் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. வாரணாசியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றுகொண்டிருந்த சபர்மதி விரைவு ரெயில் உ.பியின் கான்பூர் மற்றும் பீம்சென் நிலையத்துக்கு இடையில் தண்டவாளத்தில் இருந்த தடையில் இடித்துள்ளது.

     

    இதில் ரெயிலின் 20 பெட்டிகள் தடம் புறண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்ததை அறிந்து தீயணைப்பு மற்றும் ஆபுலன்ஸ் வாகனங்கள் அங்கு விரைந்துள்ளன. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகளை பேருந்தில் ஏற்றி அருகில் உள்ள ரெயில் நிலையத்துக்கு அழைத்துச்சென்று சிறப்பு ரெயிலில் அதிகாரிகள் அகமதாபாத் அனுப்பிவைத்தனர். 

     

    • மாயமான நர்சை கண்டுபிடித்து தருமாறு அவரது சகோதரி போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிலாஸ்பூர்:

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்தும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் உத்தரபிரதேசத்தில் பணி முடிந்து வீடு திரும்பிய நர்சு ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் திப்திபா கிராமத்தை சேர்ந்த 30 வயதான நர்சு ஒருவர் தனது 11 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவர் உத்தரகாண்ட் மாநிலம் உத்தம்சிங் நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வந்தார்.

    கடந்த 30-ந் தேதி மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு புறப்பட்ட நர்ஸ் மறுநாள் வரை வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் நர்சை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே மாயமான நர்சை கண்டுபிடித்து தருமாறு அவரது சகோதரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் அவர் ருத்ராப்பூரின் இந்திராசவுக் பகுதியில் இ-ரிக்சாவில் ஏறும் காட்சி கடைசியாக சி.சி.டி.வி.யில் பதிவாகி இருந்தது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    இந்நிலையில் கடந்த 8-ந் தேதி அந்த நர்சின் வீட்டில் இருந்து 1½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காலிமனைப்பகுதியில் நர்ஸ் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    அவரது செல்போன் மற்றும் மணிபர்ஸ் ஆகியவை திருட்டு போய் இருந்தது. நர்சின் செல்போன் எண் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில் பரேலியை சேர்ந்த தர்மேந்திரகுமார் என்ற தொழிலாளி அந்த நர்சை கற்பழித்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்ட்டது.

    கடந்த 30-ந் தேதி நர்சு ஆஸ்பத்திரியில் பணி முடிந்து தனியாக வீட்டிற்கு சென்ற போது தர்மேந்திரகுமார் அவரை வழிமறித்து தகராறு செய்துள்ளார். பின்னர் நர்சை தாக்கி புதருக்குள் இழுத்து சென்று கற்பழித்த அவர் நர்சின் கைக்குட்டையாலேயே மூச்சு திணற செய்து கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து ராஜஸ்தானில் பதுங்கி இருந்த தர்மேந்திரகுமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் நர்சிடம் இருந்து அவர் திருடி இருந்த செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான தர்மேந்திரகுமார் போதைக்கு அடிமையானவர் என்றும் அவர் நர்சை கழுத்தை நெரித்து கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • வார்டு பாய் அறுவை சிகிச்சை செய்து அதை வீடியோ எடுத்து தனது வாட்ஸப் ஸ்டேட்டஸாக வைத்துளான்
    • மருத்துவமனையின் இயக்குனர் சஞ்சய் குமாரின் வழிகாட்டுதலின்படியே தான் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டதாக வார்டு பாய் தெரிவித்துள்ளான்.

    உத்தரப் பிரதேசத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பெண்ணுக்கு வார்டு பாய் [மருத்துவமனை ஊழியர்] அறுவை சிகிச்சை செய்யும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தின் ஹர்தயா பகுதியில் இயங்கி வரும் பஸ்தி மல்டி ஸ்பெஷாலிட்டி தனியார் மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    ஆபரேஷன் தேட்டரில் நிர்வாணமாக மயக்க நிலையில் நிலையில் இருந்த பெண்ணுக்கு மருத்துவர்களுடன் சேர்ந்து வார்டு பாய் அறுவை சிகிச்சை செய்து அதை வீடியோ எடுத்து தனது வாட்ஸப் ஸ்டேட்டஸாக வைத்துளான். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    அந்த மருத்துவமனையின் இயக்குனர் சஞ்சய் குமாரின் வழிகாட்டுதலின்படியே தான் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டதாக அந்த வார்டு பாய் தெரிவித்துள்ளான். ஆனால் இதை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தை உரிய முறையில் விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாகப் போலீசும் விசாரணை நடத்தி வருகிறது. பாஜக அரசின் கீழ் மருத்துவ மற்றும் சுகாதார சூழலின் கொடுமையான நிலையை இது காட்டுவதாக அம்மாநில எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.

    • ஒரு ஆண் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • பாஜக தலைவர்கள் அனைத்து தவறான செயல்களையும் செய்ய லைசன்ஸ் பெற்றுள்ளனர்.

    உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள கலிகா ஹவேலி உணவகத்தின் வெளியே பாஜக கோடி பொருத்திய ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காருக்குள் ஒரு ஆண் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சி பகிர்ந்து விமர்சித்துள்ளது.

    அந்த பதிவில், "இது பாரபங்கியின் கலிகா ஹவேலி உணவகம். இந்த குடும்ப உணவகத்திற்கு முன்பு பா.ஜ.க கொடியுடன் கூடிய காரில் நடக்கும் ஆபாசத்தை பாருங்கள். உத்தரபிரதேசத்தில், பாஜக தலைவர்கள் அனைத்து தவறான செயல்களையும் செய்ய லைசன்ஸ் பெற்றுள்ளனர். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், யாராலும் அவர்களை தடுக்க முடியாது. மாநிலத்தின் அசுத்தத்தை சுத்தம் செய்ய, இந்த பாஜக காரர்களை துடைத்தெறிய வேண்டும்" என்று பதிவிடப்பட்டுள்ளது.

    பாஜக கொடி பொருத்தப்பட்ட கார் ரேபரேலி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • ரீல்ஸ் எடுக்க முயலும் போது விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளது.
    • பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    உத்தரபிரதேச மாநிலம் கிராத்பூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் பைக்கில் பயணம் செய்தவாறே ரீல்ஸ் எடுத்த 2 இளைஞர்கள் மீது கார் மோதியதில் இளைஞர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விபத்தில் முந்தாலா கிராமத்தைச் சேர்ந்த சமர் மற்றும் நோமன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    அண்மை காலங்களில் செல்பி மற்றும் ரீல்ஸ் எடுக்க முயலும் போது விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளது. 

    • 6 ஆவது மாடிக்கு சென்று 16 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுத்துள்ளார்.
    • படுகாயம் அடைந்த அப்பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் 6 ஆவது மாடியில் இருந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுக்கும் போது தவறி விழுந்த 16 வயது சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

    11 ஆம் வகுப்பு படிக்கும் இந்த சிறுமி 6 ஆவது மாடிக்கு சென்று இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுத்துள்ளார். அப்போது செல்போன் அவளது கையை விட்டு தவறி விழ, அதை பிடிக்க முயன்றபோது அவர் 6 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

    ஆனால் களிமண் நிறைந்த பூந்தொட்டி மேல் அவள் விழுந்ததால் உயிர் பிழைத்துள்ளார். அவளது வலது காலில் எலும்பு முறிவும், தலையின் சிறிய அளவிலான காயமும் ஏற்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த அப்பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    உயரமான இடங்களில் இருந்து செல்பி மற்றும் ரீல்ஸ் எடுக்க முயலும் போது தவறி விழுந்து பலர் உயிரிழக்கும் நிகழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளது.

    • 6 ஆயிரத்து 400 வண்ண விளக்குகளும், 96 லேசர் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
    • இந்த விளக்குகளில் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் ஆகும்.

    உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்பினரால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் மத்திய பாஜக அரசால் ரூ.18,00 கோடி பொருட்செலவில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவில் உள்ளது. கட்டுமானப் பணிகள் மீதமிருந்த நிலையில் கடந்த கடந்த ஜனவரி 22 ஆம் தேதி அவசர சைவசரமாக கோவிலின் மூல விக்ரகமான பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா பிரமாண்டமான முறையில் நடத்தி முடிக்கப்பட்டது. இது மக்களவைத் தேர்தளுக்காக பாஜக நடத்திய நாடகமென எதிரிக்கட்சிகள் குற்றம்சாட்டின.

    அனைத்தையும் மீறி ராமர் கோவிலில் வழிபாடு செய்ய பக்தர்கள் அதிக அளவில் வந்துகொண்டிருந்த நிலையில் சமீப காலமாக அங்கு நடந்துவரும் சம்பவங்கள் கோவிலை பொலிவிழக்கச் செய்வதாக அமைந்துள்ளது. கடந்த மாதங்களில் சிறிய மழைக்கு கூட தாக்குப் பிடிக்க முடியாதபடி கோவிலின் மேற்கூரை ஒழுகும் புகைப்படங்கள் வைரலாகின.

    கோவிலின் மூத்த அர்ச்சகரும் இதுகுறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து கோவின் பிரதான பாதையாக அமைக்கப்பட்ட ராம பாதை மழையால் சேதமடைந்த வீடியோக்களும் இணையத்தில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகின.ஊழல் செய்யவே பாஜக ராமர் கோவிலை கட்டியுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இந்நிலையில் அடுத்த சர்ச்சையாக அயோத்தி கோவிலுக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த வண்ண விளக்குகளில் 3 ஆயிரத்து 800 விளக்குகள் திருடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 36 லேசர் விளக்குகளும் திருடப்பட்டுள்ளன.

     

    அயோத்தி ராமர் கோவில் செல்லும் வழியில் ஆயிரக்கணக்கான வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 6 ஆயிரத்து 400 வண்ண விளக்குகளும், 96 லேசர் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் பராமரிப்பைத் தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த விளக்குகளில் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் ஆகும்.

     

    கடந்த மார்ச் 19ம் தேதி கணக்கெடுப்பின்போது அனைத்து விளக்குகளும் இருந்த நிலையில் அதன்பின் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பாதிக்கும் மேற்பட்ட விளக்குகள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. திருடப்பட்ட வண்ண விளக்குகளின் மதிப்பு சுமார் 50 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீட்டில் உள்ள தூணில் கட்டப்பட்டிருந்த ஆட்டினையும் வன்புணர்வு செய்துள்ளார்.
    • இதைப் பக்கத்து வீட்டில் உள்ளவர் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்

    உத்தரப் பிரதேசத்தில் வீட்டில் தனியாக இருந்த  பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த  6 வயது சிறுமியை 50 வயது அரசு ஊழியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான அருவருப்பூட்டும் வீடியோ வெளியான நிலையில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் புலாந்சகர் [Bulandshahr] பகுதியில் நேற்று, வீடு ஒன்றில் சிறுமி தனியாக இருப்பதை அறிந்து மாவட்ட ADO [விவசாயத் துறை] அதிகாரியாக உள்ள 50 வயதான கஜேந்திர சிங் என்பவர் மதுபோதையில் அத்துமீறி உள்ளே வந்து சிறுமியை தனது அந்தரங்க உறுப்பை தொடும்படி கட்டாயப்படுத்தி பின் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பின்னர், அந்த வீட்டில் உள்ள தூணில் கட்டப்பட்டிருந்த ஆட்டினையும் வன்புணர்வு செய்துள்ளார்.

    இதைப் பக்கத்து வீட்டில் உள்ளவர் படம் பிடித்து இணையத்தில் வெளியிடவே, அது போலீசார் கவனத்துக்குச் சென்றுள்ளது. எனவே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கிலும், இயற்கைக்கு மாறான பாலியல் உறவில் ஈடுபட்ட வழக்கிலும் அரசு ஊழியரான கஜேந்திர சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமி வன்கொடுமைக்கு ஆளாவதை தடுக்காமல் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த அண்டை வீட்டுக்காரருக்கு கண்டங்கள் குவிந்து வருகிறது

    • அவரது அடிவயிற்றில் உள்ள கூடுதலான சதை உள்ளுறுப்புகளுடன் இணைந்து காணப்பட்டுள்ளது.
    • முழுமையாக வளர்ச்சி பெறாத அந்த கருப் பையுடன் கரு முட்டையை உற்பத்தி செய்யும் ovary இருந்துள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் ஹெர்னியா ஆபரேஷனுக்காக வந்த நபரின் வயிற்றில் கருப் பை இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசம் கோரக்பூரை சேர்ந்த 46 வயதான ராஜ்கிர் மிஸ்திரி [Rajgir Mistri] இரண்டு குழந்தைகளுக்கு அப்பா. கடந்த ஒரு வாரமாகவே கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்ட ராஜ்கிர் மருத்துவமனை சென்றுள்ளார்.

    அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது அடிவயிற்றில் உள்ள சதை உள்ளுறுப்புகளுடன் இணைந்து காணப்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஹெர்னியா எனப்படும் குடலிறக்கத்திற்கான அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.

    அறுவை சிகிச்சையின்போது, அடிவயிற்றில் உள்ள அந்த சதைப் பகுதி உண்மையில் பெண்களுக்கு இருக்கும் கருப் பை [uterus] என்று தெரியவந்துள்ளது. முழுமையாக வளர்ச்சி பெறாத அந்த கருப் பையுடன்  கரு முட்டையை உருவாகும் ovary  இருந்துள்ளது. ஆனால் ராஜ்கிரிடம் பெண் தன்மைக்கான கூறுகள் எதுவும் காணப்படாத நிலையில் இந்த அரிதினும் அரிதான வளர்ச்சியைப் பார்த்து மருத்துவர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

    தற்போது ராஜ்கிரின் கீழ் வயிற்றில் இருந்த  ஓவரி மற்றும் கருப்பையை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இதனையடுத்து ராஜ்கிர் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
    • ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த பின் 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகி பின்னரும், அங்கு வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர் கடந்த வாரம் திங்கட்கிழமை பதவியை ராஜினமா செய்தார். அதன்பின் ஏற்பட்ட வன்முறையில் 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    வன்முறையில் அந்நாட்டில் மைனாரிட்டியாக இருக்கும் இந்துக்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். அவர்களை பாதுகாக்கும்படி குரல் எழுப்பப்பட்டு வருகின்றன. அண்டை நாடான இந்தியா வங்கதேசத்தில் இருந்து தப்பியோடி வரும் நபர்களை ஊடுருவ விடாமல் தடுத்து வருகிறது.

    இந்த நிலையில் வங்கதேச வன்முறை தொடர்பாக இந்தியா சர்வதேச அளவில் இந்த பிரச்சனையை எழுப்ப ணே்டும் என இந்தியா கூட்டணியின் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எந்த சமூகமும் பாதிக்கப்படக் கூடாது. அது மெஜாரிட்டி சமூகம் அல்லது மைனாரிட்டி இந்து, சீக்கியர்கள், புத்தர்கள், எந்த மதப்பிரினரும் என இருந்தாலும் வங்காளதேசத்தில் வன்முறைக்கு பாதிக்கப்படக்கூடாது.

    மனித உரிமை பாதுகாப்பு என்ற வகையில் இந்தியா இந்த பிரச்சனையை சர்வதேச அளவில் வலுவாக எழுப்ப வேண்டும். நமது பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பிற்கு இது முக்கியமான பிரச்சனை.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    முன்னதாக,

    காலத்தின் சோதனைக்கேற்ப சரியோ தவறோ, பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு நாடுகளில் வன்முறைப் புரட்சிகள், ராணுவப் புரட்சிகள், அரசுக்கு எதிரான போராட்டங்கள் அரசுக்கு எதிராக நடந்தேறியுள்ளன என்பதற்கு உலக வரலாறு சாட்சி.

    ஒரு விஷயம் என்னவென்றால், மற்றொரு நாட்டின் அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்தி தனது சொந்த அரசியல் திட்டங்களை நிறைவேற்றும் எந்த சக்தியும் நாட்டை உள்நாட்டிலும் வெளியிலும் பலவீனப்படுத்துகிறது என்பதை வரலாறு கற்பிக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.

    • புகையை கண்ட சக பயணிகள் ரெயிலில் தீ பிடித்ததாக நினைத்து அதிர்ச்சி அடைந்தனர்.
    • ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    உத்தரபிரதேச மாநிலம் பில்பூர் அருகே ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியதை அடுத்து, பீதியில் ஓடும் ரெயிலில் இருந்து பயணிகள் வெளியே குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மொராதாபாத் கோட்டத்தின் கீழ் வரும் பில்பூர் நிலையத்திற்கு அருகே ஹவுரா- அமிர்தசரஸ் மெயிலின் பொதுப் பெட்டியில் இன்று சிலர் தீயை அணைக்கும் கருவியை இயக்கியுள்ளனர்.

    இதனால், அந்த பெட்டி முழுவதும் புகை கிளம்பியுள்ளது. புகையை கண்ட சக பயணிகள் ரெயிலில் தீ பிடித்ததாக நினைத்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து, பயணிகள் சிலர் பீதியில் ஓடும் ரெயிலில் இருந்து குதித்துள்ளனர். இதில், 12 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக வடக்கு ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

    பயணிகள் அவசரகால நிறுத்தத்திற்கான சங்கிலியை இழுத்துவிட்டு குதித்ததால், ரெயில் மெதுவாக செல்லும்போது பயணிகள் பீதியில் ரெயிலில் இருந்து குதித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தலைவர் பிங்கி சவுத்ரி தலைமையில் இந்து ரக்ஷா தல் அமைப்பினர் இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • அங்கு வசித்து வந்த குடுமபங்களைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் உள்ளிட்டோர் மீதும் நடத்தினர்.

    வங்காள தேசத்தில் ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்ற நிலையில் நாட்டில் உள்ள நிலையின்மையை பயன்படுத்தி போராட்டக்காரர்கள் அங்கு சிறுபான்மையினராக உள்ள இந்து மதத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை எதிர்த்து இன்று தலைநகர் டாக்காவில் பெரிய அளவிலான பேரணி நடந்து வருகிறது. அந்நாட்டின் உள்ள இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இடைக்கால அரசின் தலைவராகப் பதவியேற்ற முகமது யூனிசுக்கு தெரிவித்த வாழ்த்துச் செய்தியிலும் பிரதமர் மோடி அதையே வலியுறுத்தியுள்ளார். மேலும் வங்காள தேசத்தில் இருந்து இந்தியாவுக்கும் மக்கள் நுழைய வாய்ப்புள்ளதால் எல்லைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    நிலைமை இப்படியாக இருக்க இதைச் சாதகமாகப் பயன்படுத்தி உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்து ரக்ஷா தல் என்ற தீவிர வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் காசியாபாத் நகரில் உள்ள கவி நகரின் குல்தார் ரயில் நிலையத்தின் அருகே வசித்து வந்த இஸ்லாமியர்களை வங்காளதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்று கூறி அவர்களது குடியிருப்பைச் சூறையாடி கபளீகரம் செய்துள்ளனர். தலைவர் பிங்கி சவுத்ரி தலைமையில் இந்து ரக்ஷா தல் அமைப்பினர் இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

     

    அந்த குடிசைப் பகுதியில் சுமார் 100 - 150 குடும்பங்கள் இருக்கிறது. இரவு 7.30 மணியளவில் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இஸ்லாமியர்களின் கூடாரங்களைப் பிய்த்து எறிந்து அவர்களின் உடைகளையும், உடைமைகளையும் தீவைத்து எரித்துள்ளனர்.  islamiyargalaiலத்திகளால் கடுமையாக தாக்கியுள்ளனர். அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் அவர்கள் பதிவேற்றியுள்ளனர். இதே வாரத்தில் அப்பகுதியில் அந்த அமைப்பினர் நடத்தும் இரண்டாவது தாக்குதல் இது.  

     தாக்குதல் குறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், 'திடீரென்று 30க்கும் மேற்பட்டவர்கள் இங்கு வந்து இஸ்லாமிய குடும்பத்தினரை தேடி தாக்குதல் நடத்தினர். அந்த குடுமபங்களைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் உள்ளிட்டோர் மீதும் நடத்தினர். நாங்கள் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை. நாங்கள் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று சொல்லியும், அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர். அடிப்பதுடன் நிற்காமல் உடைமைகளுக்கு தீயும் வைத்தனர். எல்லாமே சேதமடைந்த பிறகுதான் காவல்துறையினர் வந்தனர்' என்று தெரிவித்தனர்.

    தற்போது நடந்த தாக்குதலைத் தொடர்ந்து அவ்வமைப்பின் தலைவர் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். பலர் தலைமறைவாகியுள்ளனர். இந்து ரக்ஷா தல் தலைவர் பிங்கி சவுத்ரி இந்த தாக்குதலுக்கு தாங்கள் முழுமையாக பொறுப்பேற்பதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

    ×