என் மலர்
உத்தரப் பிரதேசம்
- முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவரில் 203 ரன்கள் குவித்தது.
- லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட் வீழ்த்தினார்.
லக்னோ:
ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் இன்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்துள்ளது. மிட்செல் மார்ஷ் 60 ரன்னும், மார்க்ரம் 53 ரன்னும் அடித்தனர்.
மும்பை அணி சார்பில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.
இந்நிலையில், ஐ.பி.எல். வரலாற்றில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் கேப்டன் என்ற புதிய சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்துள்ளார்.
- ஜனாதிபதி ஒப்புதல் பெற்று சட்டமாவதற்கு முன்பே ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
- வக்பு வாரியத்தை நில மாஃபியா என யோகி ஆதித்யநாத் வர்ணித்தார்.
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே நேற்று நள்ளிரவில் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேறியது.
இந்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் வழக்குத் தொடர உள்ளதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் வக்பு மசோதா அடுத்தாக ஜனாதிபதி ஒப்புதல் பெற்று சட்டமாவதற்கு முன்பே உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு சட்டவிரோத வக்பு சொத்துக்களை கையகப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய அம்மாநில எதிர்க்க்காட்சியான சமாஜ்வாதி கட்சி எம்.பி. கோபால் யாதவ், இந்த மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது. இதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல வேண்டும். இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.
அதற்குள் சட்டவிரோத சொத்துக்களை கையகப்படுத்த உத்தரப் பிரதேச முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுவிட்டார்.
இந்த மசோதாவை எதிர்ந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்கிறது, நிற்கும் என தெரிவித்துள்ளார். முன்னதாக வக்பு வாரியத்தை நில மாஃபியா என யோகி ஆதித்யநாத் வர்ணித்தது குறிப்பிடத்தக்கது.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
- கொண்டாட்டத்தின் போது ஒருவர் மாரடைப்பால் இறப்பது இது முதல் முறையல்ல.
25-வது திருமண ஆண்டு வெள்ளி விழாவில் மனைவியுடன் நடனமாடிய கணவர் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் உத்தரபிரதே மாநிலம் பரேலியில் நடந்துள்ளது.
ஷூ வியாபாரியான வாசிம் சர்வத் (50) மற்றும் அவரது மனைவி ஃபரா ஆகியோர் தங்கள் திருமணத்தின் வெள்ளி விழாவையொட்டி பரேலியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த கொண்டாட்டத்தில் இருதரப்பை சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வெள்ளி விழாவைக் கொண்டாடும் வகையில் ஒரு திரைப்பட பாடலுக்கு தம்பதியினர் நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வாசிம் சரிந்து விழுந்தார். இதனால் பதற்றமடைந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் வெள்ளிவிழா கொண்டாட்டத்தில் கூடியிருந்தவர்களுக்கு இந்த செய்தி பேரிடியாக விழுந்தது.
கொண்டாட்டத்தில் தம்பதியினர் நடனம் ஆடி, பாடி, பின்னர் இருவரும் சேர்ந்து கேக் வெட்ட திட்டமிட்டிருந்தனர். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
வாசிம் திடீர் மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்படுகிறது. கொண்டாட்டத்தின் போது ஒருவர் மாரடைப்பால் இறப்பது இது முதல் முறையல்ல. இப்போதெல்லாம், நடக்கும்போதோ அல்லது நிற்கும்போதோ மாரடைப்பால் உயிரை இழக்கும் சம்பவங்கள் நடைபெறுகிறது.
- திருமணத்துக்கு பிறகும் அவர்களுக்கு இடையே நட்பு நீடித்தது.
- மனைவியிடம் 2 குழந்தைகள் உள்ளனர். இனிமேலும் இந்த காதல் தேவையா எனக்கூறி கண்டித்தார்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் சந்த்கபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பப்லு. இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
ராதிகாவுக்கு ஏற்கனவே தனது கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் காதல் இருந்து வந்தது. திருமணத்துக்கு பிறகும் அவர்களுக்கு இடையே நட்பு நீடித்தது. பப்லு வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். இந்தச் சமயத்தைப் பயன்படுத்தி காதலர்கள் இருவரும் ரகசியமாக அடிக்கடி சந்தித்து வந்தனர். இந்த விஷயம் அரசல் புரசலாக உறவினர்களுக்கு தெரியவந்தது. இது பற்றி அவர்கள் பப்லுவிடம் தெரிவித்தனர். அவரும் மனைவியிடம் 2 குழந்தைகள் உள்ளனர். இனிமேலும் இந்த காதல் தேவையா? எனக்கூறி கண்டித்தார். ஆனால் ராதிகாவோ காதலனை தன்னால் மறக்க முடியவில்லை என தெரிவித்தார்.
இதனால் வேறு வழியின்றி, காதலனுடன் சேர்த்து வைக்க முடிவு செய்தார். தனது விருப்பத்தை அவர் மனைவி மற்றும் கிராம மக்களிடம் கூறினார். முதலில் இதற்கு எதிர்ப்பு கிளம்பினாலும் பின்னர் அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். காதலர்களும் இதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து, கோர்ட்டில் வைத்து ராதிகாவுக்கும், காதலனுக்கும் பப்லு திருமணம் செய்து வைத்தார். பின்னர் அங்குள்ள ஒரு கோவிலில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், உறவினர்கள் கண் முன் ராதிகாவும், காதலனும் மாலை மாற்றிக்கொண்டனர்.
திருமணம் முடிந்ததும் பப்லு தனது மனைவியிடம் 2 குழந்தைகளையும் தான் வளர்க்க விரும்புவதாக தெரிவித்தார். இதற்கு ராதிகாவும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து 8 ஆண்டு தன்னுடன் குடும்பம் நடத்திய மனைவியை பப்லு காதலனுடன் அனுப்பி வைத்து விட்டு 2 குழந்தைகளை தன்னுடன் அழைத்துச் சென்றார்.
இந்நிலையில், காதலனுடன் சென்ற ராதிகாவை அவரது புதிய மாமியார் திருப்பி அனுப்பியுள்ளார். ராதிகா தனது முதல் கணவருடன் பெற்ற இரு குழந்தைகளுக்காக வருத்தப்படுவதாகவும், அவர்கள் தங்கள் தாயின் அன்பைப் பெறுவதை உறுதிசெய்ய விரும்புவதாகவும் கூறி ராதிகாவை திருப்பி அனுப்பினார்.
இதையடுத்து, வீட்டுக்கு வந்த ராதிகாவை ஏற்றுக்கொண்ட பப்லு, இனிமேல் அவளுக்கு என்ன நடந்தாலும் அதற்கு நான்தான் பொறுப்பு என தெரிவித்தார்.
- அவர்களுக்கு கோமாதாவுக்கு சேவை செய்வது பற்றி என்ன தெரியும்?.
- தங்கள் செயல்களின் துர்நாற்றத்தை அவர்கள் பார்ப்பதில்லை.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆளும் பாஜக கட்சிக்கும், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதிக்கும் இடையில் கருத்து மோதல் வலுத்துள்ளது.
சமீபத்தில் தனது சொந்த தொகுதியான கன்னோஜில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ், கன்னோஜ் தொகுதி எப்போதும் சகோதரத்துவத்தின் நறுமணத்தை பரப்பியுள்ளது. கன்னோஜ் மக்கள், இந்த பாஜக துர்நாற்றத்தை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அவர்கள் (பாஜக) துர்நாற்றத்தை விரும்புகிறார்கள், அதனால் தான் அவர்கள் பசுத் தொழுவங்களை கட்டுகிறார்கள்.
ஆனால், எங்களுக்கு வாசனை திரவியம் பிடிக்கும், அதனால் தான் நாங்கள் இங்கு ஒரு வாசனை திரவிய பூங்காவைக் கட்டினோம் என்று தெரிவித்தார்.
முன்னதாக தங்கள் அரசாங்கத்தால் கட்டப்பட்ட வாசனை திரவிய பூங்காயும், தற்போது பாஜக அரசால் அதிகளவில் கட்டப்பட்டுவரும் பசுத்தொழுவங்களையும் ஒப்பிட்டு அவர் இவ்வாறு பேசியிருந்தார்.

இந்நிலையில் யோகி ஆதித்யநாத் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் இதற்கு பதிலடி கொடுத்தார்.
அவர் கூறியதாவது, சமாஜ்வாதியினர் பசுவின் சாணம் நாற்றமடிப்பதாக கூறுகிறார்கள். உண்மை என்னவென்றால் பசுவதை செய்வோருடன் அவர்கள் பசுக்களை கொடுத்து வந்தனர்.
பசுக்கடத்தல், பசுவதை செய்வோருக்கும் சமாஜ்வாதியினருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நாங்கள் பசுவதை செய்வோர் மீது நடவடிக்கை எடுத்ததால் தற்போது சமாஜ்வாதியினர் எங்களை கேள்வி கேட்கிறார்கள். அவர்களுக்கு கோமாதாவுக்கு சேவை செய்வது பற்றி என்ன தெரியும்?.
அவர்களுக்கு பசுவின் சாணம் நாற்றமடிகிறது. ஆனால் தங்கள் செயல்களின் துர்நாற்றத்தை அவர்கள் பார்ப்பதில்லை. அதனால்தான் கோமாதாவுக்கு சேவை செய்வதை அவர்களின் தலைவர் (அகிலேஷ் யாதவ்) நாற்றமாக நினைக்கிறார் என்று தெரிவித்தார்.
- கட்சி இந்தப் பதவியைக் கொடுத்ததால் இங்குப் பணி செய்து வருகிறேன்.
- அரசியல் எனக்கு முழுநேர வேலை அல்ல என தெரிவித்தார்.
லக்னோ:
சமீபத்தில் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். காரியாலயத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அப்போது, விரைவில் பிரதமர் பதவியில் இருந்து விலக உள்ளார் என தகவல் வெளியானது.
இதற்கிடையே, பிரதமர் மோடிக்குப் பிறகு அமித்ஷா அல்லது உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இருவரில் ஒருவர் பிரதமர் பதவியை ஏற்க உள்ளனர் என செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், உத்தரப் பிரதேச முதல் மந்திரியான யோகி ஆதித்யநாத் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான் இப்போது மாநில முதல் மந்திரியாக இருக்கிறேன். இதுவும்கூட கட்சி தான் என்னை உத்தரப் பிரதேச மக்களுக்காக இந்த பொறுப்பை வழங்கியுள்ளது.
அரசியல் எனக்கு முழுநேர வேலை அல்ல. நான் ஒருபோதும் என்னை முழு நேர அரசியல்வாதியாகக் கருதியது இல்லை. கட்சி இந்தப் பதவியைக் கொடுத்ததால் இங்குப் பணி செய்து வருகிறேன். ஆனால் உண்மையில் நான் ஒரு யோகி. இங்கு இருக்கும் வரை இந்த வேலையை செய்வேன். ஆனால் இந்த வேலையும் ஒரு கட்டத்தில் முடிந்துவிடும்.

நான் முதல் மந்திரியாக இருக்கவே கட்சி தான் காரணம். தலைமையுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தால் நான் இங்கே தொடர்ந்து முதல் மந்திரியாக இருக்கமுடியுமா?
தேர்தலில் யாரைக் களமிறக்கலாம் என்பதைக் கட்சியின் பாராளுமன்ற குழு தான் முடிவு செய்யும். எல்லா விவாதமும் அங்கு தான் நடக்கும்.
பல்வேறு விஷயங்களை ஆலோசனை செய்தே வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார். எனவே சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லக் கூடாது. ஆனால், வேண்டும் என்றே இதுபோல பேசுபவர்களை நம்மால் எதுவும் செய்ய முடியாது என தெரிவித்தார்.
- உ.பி.யில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளைக் கற்பிக்கிறோம்
- வெறுப்பு குறித்து யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்.
தேசிய கல்விக்கொள்கையில் இடம்பெற்ற மும்மொழிக் கொள்கையை இந்து திணிப்பு என தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதனால் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2000 கோடி வரையிலான கல்வி நிதியை மத்திய அரசு தர மறுத்துவிட்டது.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் மொழியை வைத்து குறுகிய அரசியல் செய்வதாக பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுப்பது குறித்து யோகி ஆதித்யநாத் விமர்சித்திருந்த நிலையில் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் மீண்டும் அதே விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அவர் கூறியதாவது, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மொழி சர்ச்சையை குறுகிய அரசியல் நலன்களுக்காக உருவாக்குகிறார்கள். இதன்மூலம் அவர்கள் தங்கள் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம், ஆனால் இளைஞர்களின் வேலைவாய்ப்பைத் தடுக்கிறார்கள்.

உ.பி.யில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளைக் கற்பிக்கிறோம், அதனால் உ.பி. சிறியதாகிவிட்டதா?. மாறாக உத்தர பிரதேசத்தில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன"
முன்னதாக யோகி ஆதித்யநாத்தின் முந்தைய விமர்சனத்துக்கு பதிலளித்திருந்த முதல்வர் ஸ்டாலின், "எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மொழி திணிப்பையும் ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம். வாக்கு வங்கி அரசியலுக்காக பேசவில்லை, இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம். வெறுப்பு குறித்து யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) விரைவுச் சாலைக்காக நிலத்தை கையகப்படுத்தியது.
- உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்விற்கு பரிந்துரைத்து
212 கி.மீ நீளமுள்ள டெல்லி-டேராடூன் விரைவுச் சாலைப் பணியை முடிக்க அப்பகுதியில் அமைந்துள்ள இடத்தில 1,600 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள வீடு தடையாக உள்ளது.
1998 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச வீட்டுவசதி வாரியம் தனது நிலத்தை கையகப்படுத்த முயற்சித்ததை எதிர்த்து வீர்சென் சரோஹா என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகினார். உயர்நீதிமன்றம் வீர்சென் சரோஹாவிற்கு சாதகமாக தீர்ப்பளித்தது.
இப்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) விரைவுச் சாலைக்காக அவரது நிலத்தை கையகப்படுத்தியதால், வீர்சென் சரோஹாவின் பேரன் லக்ஷயவீர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்விற்கு பரிந்துரைத்து. ஏப்ரல் 16 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த விரைவுச் சாலை கட்டி முடிக்கப்பட்டவுடன், டெல்லிக்கும் டேராடூனுக்கும் இடையிலான பயண நேரம் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கணவனை கொலை செய்து பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவரது காதலன் ஷாகில் கைது செய்யப்பட்டனர்.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த சவுரவ் சுக்லா என்பவரை அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவரது காதலன் ஷாகிலுடன் சேர்ந்து கொலை செய்து பிளாஸ்டிக் டிரம்மில் சிமெண்ட் கலவையை நிரப்பி அடைத்து வைத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவரது காதலன் ஷாகில் கைது செய்யப்பட்டனர்.
தண்ணீர் நிரப்பி வைக்கப்படும் பிளாஸ்டிக் டிரம்மில் கணவனை கொலை செய்து அடைத்து வைத்த சம்பவத்தால் அப்பகுதியில் டிரம் விற்பனை சரிந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அக்கம் பக்கத்தினரின் கிண்டலுக்கு உள்ளாவோம் என புதிய டிரம் வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டுவதால், மாதம் 60 டிரம் வரை விற்பனையான நிலையில் தற்போது 15 டிரம் விற்பனையாவதே சவாலாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
- விபத்து ஏற்படுத்திய லம்போர்கினி கார் பறிமுதல்
- கார் மோதியதில் காயமபட்ட 2 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் லாம்போர்கினி ஸ்போர்ட்ஸ் காரில் வந்த நபர் 2 பேரை மோதிவிட்டு, "இங்கு யாராவது இறந்தார்களா என்ன? என்று அலட்சியமாக கேட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, விபத்து ஏற்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டு, காரை ஓட்டிய தீபக் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கைதான தீபக்கிற்கு சூரஜ்பூரில் உள்ள நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
நொய்டாவின் செக்டார் 94 இல், கட்டுமானத்தில் உள்ள ஒரு வளாகத்தை ஒட்டிய நடைபாதையில் ஒரு சிவப்பு லாம்போர்கினி கார் இரண்டு தொழிலாளர்கள் மீது மோதியது. பின் மரத்தில் மோதி கார் நின்றது.
விபத்துக்கு பின்பு எடுக்கப்பட்ட வீடியோவில், "விபத்துக்குள்ளான சிவப்பு நிற லாம்போர்கினி ஸ்போர்ட்ஸ் காரை நோக்கி கட்டுமான தொழிலாளர்கள் ஓடுகின்றனர். காரை ஓட்டிய நபரிடம் அந்த தொழிலார்கள்களில் ஒருவர், "இந்த விபத்தில் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் தெரியுமா?" என்று கேட்க, அதற்கு காரை ஓட்டியவர், 'இங்கே யாராவது இறந்தார்களா?' என்று அலட்சியமாக பதில் கூறினார்.
கார் மோதியதில் காயமடைந்த 2 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அவர்களது உயிருக்கு ஆபத்தில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
- நமது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பிற்கும் இன்று மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
- அதிக அளவில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருப்பதை இதற்கு முன்னதாக பார்த்து இருக்கிறீர்களா?.
ரம்ஜான் பண்டிகையை சுதந்திரமாக கொண்டாட பாஜக தலைமையிலான அரசு தடைகளை ஏற்படுத்துவதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-
நமது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பிற்கும் இன்று மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நான் இதை சொல்லக்கூடாது என்றாலும், முழுப்பொறுப்புடன் செல்கிறேன். பாஜக நாட்டை அரசியலமைப்பின்படி நடத்தவில்லை.
நீங்கள் பல வருடங்களாக ரம்ஜான் பண்டிகையை பார்த்து இருப்பீர்கள். இதுபோன்று அதிக அளவில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருப்பதை இதற்கு முன்னதாக பார்த்து இருக்கிறீர்களா?. போலீசார் காரணங்கள் ஏதுமின்றி என்னுடைய பாதுகாப்பு வாகனங்களை (Convoy) வேண்டுமென்றே அரைமணி நேரம் நிறுத்தி வைத்தனர்.
நான் ஏன் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறேன் என்று கேட்டபோது, எந்த அதிகாரியிடமும் பதில் இல்லை. இதை நான் என்னவென்று அழைப்பது? சர்வாதிகாரமா? அறிவிக்கப்படாத அவசரநிலையா? அல்லது பிற சமூகங்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருக்க எங்களை மிரட்டும் முயற்சியா?
இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
- இருதரப்பு புகார்களின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மிரட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோண்டா:
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த சவுரவ் சுக்லா என்பவரை அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவரது காதலன் ஷாகிலுடன் சேர்ந்து கொலை செய்து தண்ணீர் நிரப்பி வைக்கப்படும் பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்து வைத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கணவருடன் தகராறில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை, அதிகமாக பேசினால் மீரட் படுகொலை போன்றே உன்னையும் வெட்டி டிரம்மில் அடைத்து விடுவேன் என மிரட்டி உள்ளார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள கோண்டா பகுதியை சேர்ந்தவர் என்ஜினீயர் தர்மேந்திர குஷ்வாஹா. இவரும், பஸ்தி மாவட்டத்தை சேர்ந்த மாயா மவுரியா என்பவரும் காதலித்து கடந்த 2016-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவருக்கு ஒரு மகள் உள்ளார்.
என்ஜினீயர் தர்மேந்திர குஷ்வாஹா தனது மனைவி பெயரில் நிலத்தை வாங்கி வீடு கட்டுவதற்கான ஒப்பந்ததை தனது உறவினரான நீரஜ் மவுரியாவிடம் கொடுத்தார். அதன்பிறகு மாயாமவுரியா, நீரஜூடன் நெருங்கி பழகினார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இருவரும் நெருக்கமாக இருப்பதை தர்மேந்திர குஷ்வாஹா பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் மனைவியிடம் கேட்டபோது, அவரும் நீரஜூம் சேர்ந்த தர்மேந்திர குஷ்வாஹாவை தாக்கி உள்ளனர். மேலும் மாயா வீட்டில் இருந்து நகை, பணத்துடன் தலைமறைவானார். இதுதொடர்பாக குஷ்வாஹா போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாயா வீட்டுக்கு வந்தார். அப்போது தர்மேந்திர குஷ்வாஹா மற்றும் அவரது தாய் ஆகியோரை மாயா மவுரியாவும், நீரஜூம் சேர்ந்து தாக்கி உள்ளனர்.
மேலும் தர்மேந்திர குஷ்வாஹாவை பார்த்து, நீ அதிகமாக பேசினால், மீரட் படுகொலை போல உன்னையும் வெட்டி டிரம்மில் அடைத்துவிடுவேன் என மாயா மிரட்டி உள்ளார்.
இதற்கிடையே தனது கணவர் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாகவும், அவர் தன்னை நான்குமுறை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தியதாகவும் மாயா கூறினார்.
இருதரப்பு புகார்களின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாயா தர்மேந்திர குஷ்வாஹாவை மிரட்டிய சி.சி.டி.வி. வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






