என் மலர்
தெலுங்கானா
- அப்பெண்ணுக்கு உதவ யாரும் முன்வரவில்லை.
- கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தெலுங்கானாவில் சாலையில் வைத்து, கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது கணவரால் கொடூரமாக தாக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.
ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த 32 வயதான முகமது பஸ்ரத், தனது 22 வயது மனைவி ஷபானா பர்வீனை குடும்பத்தகராறு காரணமாக கோண்டாபூரில் உள்ள நெடுஞ்சாலையில் வைத்து கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி சரமாரியாக தாக்கியுள்ளார்.
தற்போது வெளியாகி உள்ள சிசிடிவி வீடியோவில், பஸ்ரத் தனது மனைவியை நோக்கி ஓடி வந்து தரையில் தள்ளுவதைக் காண முடிந்தது. இதனால் மனைவி நிலைகுலைந்து கீழே விழுகிறார்.
அதன் பின் அவர் தனது மனைவியை செங்கற்களால் கொலைவெறியுடன் கொடூரமாக தாக்குவது பதிவாகியுள்ளது. அப்பெண்ணுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. தாக்குதலுக்கு பின் கணவர் தனது பைக்கில் அவ்விடத்தை விட்டுச் சென்றார் .
தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அந்தப் பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் அங்கு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குடும்பத்தகராறு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதுவரை, பஸ்ரத் கைது செய்யப்பட்டதாக எந்த தகவலும் இல்லை. இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
- ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது.
- குஜராத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சிராஜ் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ஐதராபாத்:
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 19-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. குஜராத் சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய குஜராத் அணி 16.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து 3வது வெற்றியைப் பதிவு செய்தது.
இந்நிலையில், ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் முகமது சிராஜ் 4 ஓவர் வீசி 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். மேலும், இந்தப் போட்டியின் மூலம் ஐ.பி.எல். தொடரில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையையும் படைத்திருக்கிறார்.
மேலும், 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் தனது சிறந்த பந்துவீச்சையும் சிராஜ் பதிவுசெய்திருக்கிறார்.
- முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 152 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய குஜராத் 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஐதராபாத்:
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 19-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. நிதிஷ்குமார் ரெட்டி 31 ரன்னும், கிளாசன் 27 ரன்னும், கம்மின்ஸ் 22 ரன்னும் எடுத்தனர்.
குஜராத் சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கியது. சுப்மன் கில் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 61 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 49 ரன்னில் அவுட்டானார்.
ரதர்போர்டு 16 பந்தில் 35 ரன்கள் குவித்தார்.
இறுதியில், குஜராத் அணி 16.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து 3வது வெற்றியைப் பதிவு செய்தது. நடப்பு தொடரில் ஐதராபாத் அணி பெறும் 4வது தோல்வி இதுவாகும்.
- 19-வது லீக் போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதுதியுள்ளது.
- ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடைபெறும் 19-வது லீக் போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதியுள்ளது.
இரவு 7.30 மணிக்கு ஐதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
இதில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக நிதீஷ் குமார் ரெட்டி- 31, ஹென்ரிச் க்ளாசன்- 27, கம்மின்ஸ்- 22, அபிஷேக் ஷர்மா- 18 ரன்களும் எடுத்தனர்.
குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சில் சிராஜ்- 4, பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஆட்டத்தின் முடிவில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 153 ரன்களை சன்ரைசர்ஸ் ஐதராபாத் இலக்காக நிர்ணயித்துள்ளது.
- 19-வது லீக் போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதுகிறது.
- ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடைபெறும் 19-வது லீக் போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதுகிறது.
இரவு 7.30 மணிக்கு ஐதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸை சந்திக்கிறது.
இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இதனால், ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.
'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறி வைத்துள்ள குஜராத்தின் வீறுநடைக்கு ஐதராபாத் முட்டுக்கட்டை போடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
- சிறுமியை வெகு நேரமாக நோட்டம் விட்ட 20 வயது சக பயணி சிறுமியை பின்தொடர்ந்து கழிவறைக்கு சென்றான்.
- சிறுமியின் தந்தை அந்த இளைஞனை பிடித்து அவனின் செல்போனை ஆராய்ந்ததில் அதில் சிறுமியை அவன் வன்கொடுமை செய்யும் வீடியோ பதிவுகள் இருந்துள்ளன.
தெலுங்கானாவில் ஓடும் ரெயில் கழிவறையில் வைத்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் பீகாரைச் சேர்ந்தவர் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமி ஒடிசாவைச் சேர்ந்தவர் என்றும் ரயில்வே காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி தனது குடும்பத்தினருடன் ஏப்ரல் 2 ஆம் தேதி ஒடிசாவிலிருந்து ரெயிலிலில் சென்றுகொண்டிருந்தார். ஏப்ரல் 3 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் தெலுங்கானாவில் ரெயில் வந்துகொண்டுருந்தபோது சிறுமி கழிவறைக்கு சென்றுள்ளார்.
அப்போது சிறுமியை வெகு நேரமாக நோட்டம் விட்ட 20 வயது சக பயணி சிறுமியை பின்தொடர்ந்து கழிவறைக்கு சென்று உள்ளே வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதனை சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள்.
சிறுமியின் தந்தை அந்த இளைஞனை பிடித்து அவனின் செல்போனை ஆராய்ந்ததில் அதில் சிறுமியை அவன் வன்கொடுமை செய்யும் வீடியோ பதிவுகள் இருந்துள்ளன.
இதைத்தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட இளைஞனிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
- கழுத்து வலியால் அவதிப்படுவதாக கண்டக்டர் பயணிகளிடம் புழம்பி வருகிறார்.
- பஸ் பயணிகள் அவருக்கு போக்குவரத்து கழக பணிமனையில் வேறு பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தெலுங்கானா மாநிலம், சந்திரயாங் பேட்டையை சேர்ந்தவர் அமீன் அகமது அன்சாரி. இவரது தந்தை கச்சேகுடா போக்குவரத்து பணிமனையில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
கடந்த 2021-ம் ஆண்டு உடல்நிலை குறைவு காரணமாக இறந்தார். கருணை அடிப்படையில் அமீன் அகமது அன்சாரிக்கு கண்டக்டர் வேலை வழங்கப்பட்டது.
அமீன் அகமது அன்சாரி 7 அடி உயரம் உள்ளார். 6 அடி உயரம் கொண்ட பஸ்சில் அமீன் அகமது அன்சாரிக்கு கண்டக்டர் வேலை வழங்கப்பட்டதால் தினமும் சுமார் 10 மணி நேரம் தலை குனிந்த படி வேலை செய்து வருகிறார். இதனை பார்க்கும் பஸ் பயணிகள் அவர் மீது பரிதாபம் கொண்டனர்.
இதனால் அவருக்கு கழுத்து, முதுகு வலி மற்றும் தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது.
இதனால் அடிக்கடி டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்று வருகிறார். கழுத்து வலியால் அவதிப்படுவதாக கண்டக்டர் பயணிகளிடம் புழம்பி வருகிறார்.
இதுகுறித்து பஸ் பயணிகள் அவருக்கு போக்குவரத்து கழக பணிமனையில் வேறு பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதன் பேரில் அவருக்கு போக்குவரத்து பணிமனையில் வேறு வேலை வழங்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
- கழிப்பறை பூட்டப்பட்டு இருந்ததால் தனது உறவினர் ஒருவருடன் அருகில் உள்ள மலைக்குச் சென்றார்.
- கோவிலில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்யும் ஒருவர் தனது நண்பர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.
தெலுங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது உறவினர் ஒருவருடன் ஊர் கொண்டாபேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம் செய்ய சென்றார்.
தரிசனம் முடிந்து மாலை கோவிலில் நடந்த பஜனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இரவு 11.30 மணி அளவில் கோவில் அருகில் உள்ள கழிப்பறைக்கு சென்றார்.
கழிப்பறை பூட்டப்பட்டு இருந்ததால் தனது உறவினர் ஒருவருடன் அருகில் உள்ள மலைக்குச் சென்றார்.
அப்போது கோவிலில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்யும் ஒருவர் தனது நண்பர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். மலையில் மது குடித்து கொண்டு இருந்த அவரது நண்பர்கள் 6 பேர் வந்து இளம்பெண்ணை மடக்கினர்.
இளம்பெண்ணின் உறவினரின் கை, கால்களை கட்டி போட்டனர். பின்னர் அவர்கள் 7 பேரும் சேர்ந்து மது அருந்தியபடி விடிய விடிய இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் தப்பிச் சென்றனர்.
அதிகாலை இளம்பெண் மற்றும் உறவினர் தப்பி வந்து மெஹபூபா நகர் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சாமி தரிசனத்திற்குப் பிறகு, அவர்கள் கோயிலிலேயே தங்க முடிவு செய்தனர்.
- அவரை பிடித்து புதர்களுக்குள் இழுத்துச் சென்றனர்.
தெலுங்கானாவில் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்னூல் மாவட்டத்தில் உர்கொண்டபேட்டாவில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்ற 30 வயது பெண் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று நள்ளிரவில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
நேற்று இரவு அந்தப் பெண் தனது உறவினருடன் கோயிலுக்கு தரிசனம் செய்யச் சென்றார். தரிசனத்திற்குப் பிறகு, அவர்கள் கோயிலிலேயே தங்க முடிவு செய்தனர்.
நள்ளிரவில், அந்தப் பெண் கோயிலுக்கு அருகிலுள்ள புதர்களுக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவரை பிடித்து புதர்களுக்குள் இழுத்துச் சென்றனர். சத்தம் கேட்டு உறவினர் அவளைக் காப்பாற்ற முயன்றபோது, அவர் தாக்கப்பட்டு ஒரு மரத்தில் கட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர், அந்த நபர்கள் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். சம்பவத்திற்குப் பிறகு, உர்கொண்டா போலீசார் விசாரணையைத் தொடங்கி ஆறு பேரைக் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் எட்டு பேர் ஈடுபட்டதாகவும், இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ஒரு லட்டு சுமார் 20 கிராம் எடை கொண்டதாக உள்ளது.
- லட்டுகள் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் விசேஷமானது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின பெண்கள் கர்ப்பிணி பெண்களுக்கான பிரத்யேக லட்டு தயார் செய்து வருகின்றனர்.
இந்த லட்டுகள் ஆதிவாசி கூட்டுறவு சங்கத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு கர்ப்பிணி பெண்களை பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஒரு லட்டு சுமார் 20 கிராம் எடை கொண்டதாக உள்ளது. செம்பருத்தி பூக்கள், வெல்லம், திராட்சை நல்லெண்ணெய் ஆகியவற்றை கொண்டு இந்த லட்டுகள் தயார் செய்யப்படுகிறது.
சத்தான இந்த லட்டுகள் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் விசேஷமானது என்பதால் தெலுங்கானாவில் அதிகளவில் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மாதந்தோறும் 20 குவிண்டால் லட்டுகள் தயார் செய்யப்படுகின்றன.
இந்த லட்டு தயாரிக்கும் பழங்குடியின பெண்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆதிவாசி மகிளா சங்கத் தலைவர் குமராம் பகுபாய் கூறுகையில்:-
பிரதமர் மோடியின் பாராட்டு மகிழ்ச்சியை தருகிறது. எதிர்காலத்தில் அதிக ஆர்வத்துடன் கர்ப்பிணிகளுக்கான லட்டு தயாரிக்கும் தொழிலை விரிவுபடுத்த கடுமையாக உழைப்போம் என்றார்.
- சூரியதேவ் என்ற இளைஞர் 2 பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து வந்துள்ளார்.
- இந்த திருமணத்தில் 500க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
தெலுங்கானாவில் பழங்குடி இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஆசிபாபாத் மாவட்டம் கும்னூர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான சூரியதேவ், ராஜ் கோண்ட் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். இவர் லால் தேவி மற்றும் ஜல்கர் தேவி என்ற 2 பெண்களை ஒரே நேரத்தில் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், தனது 2 காதலிகளையும் ஒரே மேடையில் வைத்து சூரியதேவ் திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தில் 500க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். சூரியதேவின் திருமண வீடியோ இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
- லக்னோ அணி 16.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
- ஐ.பி.எல். தொடரில் ஷர்துல் தாக்குர் 100 விக்கெட் எடுத்தோர் பட்டியலில் இணைந்துள்ளார்.
ஐதராபாத்:
ஐ.பி.எல். 2025 தொடரின் 7-வது லீக் போட்டி ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது. டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார்.
லக்னோ அணி சார்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து ஆடிய லக்னோ அணி 16.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. 4 விக்கெட் வீழ்த்திய ஷர்துல் தாக்குருக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
ஷர்துல் தாக்குர் ஐ.பி.எல். தொடரில் 100 விக்கெட்களை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். அத்துடன், நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஊதா நிற தொப்பியையும் தன்வசப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில், ஆட்ட நாயகன் விருது பெற்றபோது ஷர்துல் தாக்குர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஐ.பி.எல்லில் எந்த அணியாலும் எடுக்கப்படுவேன் என நம்பவில்லை. ஐ.பி.எல் சமயத்தில் என்ன செய்யலாம் என திட்டமிட்டு கவுண்ட்டி கிரிக்கெட்டில் ஆட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். அதன்பிறகுதான் ரஞ்சி டிராபியில் ஆடிக்கொண்டிருந்தபோது ஜாகீர்கானிடமிருந்து அழைப்பு வந்தது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி என்னைத்தான் முதலில் அணுகியது. அதனால் நான் அதை ஏற்றுக்கொண்டேன்.
கிரிக்கெட்ல நல்ல நாட்களும் இருக்கும், கெட்ட நாட்களும் இருக்கும். அதையெல்லாம் கடந்துதான் போகணும். ஸ்கோர்ஷீட்டில் இருப்பது எப்பவும் நல்லதுதான், ஆனா ஆட்டத்தை வெல்வது எனக்கு முக்கியம்.
நான் ஏதாவது ஒரு விஷயத்தைச் செய்துகிட்டே இருக்கேன். விக்கெட் பத்தியோ, ரன் பத்தியோ நான் அதிகம் பார்க்கல. மேட்ச் வின்னிங் பெர்பார்மென்சை மட்டுமே காட்ட விரும்புகிறேன்.
பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான வகையில் பிட்ச் தயார் செய்யப்படுவது பந்துவீச்சாலர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
அவங்க பவுலர்களை ரொம்பவே தாக்குறாங்க. அதனால அவங்களை ஏன் கடுமையாக தாக்கக்கூடாது? கூட்டா அவங்களை எதிர்த்துப் போராடுவதுதான் திட்டம். ஆரம்பத்துலயே விக்கெட் எடுத்தா நல்லா விளையாடுவோம்னு நினைத்தோம் என தெரிவித்தார்.






