என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 153 ரன்கள் இலக்கு நிர்ணயம்
    X

    ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 153 ரன்கள் இலக்கு நிர்ணயம்

    • 19-வது லீக் போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதுதியுள்ளது.
    • ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடைபெறும் 19-வது லீக் போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதியுள்ளது.

    இரவு 7.30 மணிக்கு ஐதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

    இதில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது.

    அதிகபட்சமாக நிதீஷ் குமார் ரெட்டி- 31, ஹென்ரிச் க்ளாசன்- 27, கம்மின்ஸ்- 22, அபிஷேக் ஷர்மா- 18 ரன்களும் எடுத்தனர்.

    குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சில் சிராஜ்- 4, பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஆட்டத்தின் முடிவில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 153 ரன்களை சன்ரைசர்ஸ் ஐதராபாத் இலக்காக நிர்ணயித்துள்ளது.

    Next Story
    ×