என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நேற்று முன்தினம் மதியம் அசைவ உணவு பரிமாறப்பட்டது.
    • சம்பவம் குறித்து சாம்பவர்வடகரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    சுரண்டை:

    தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரம் நகர பஞ்சாயத்து பகுதியில் அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் என்ற பெயரில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு உடல் நலம் இல்லாத முதியவர்கள், குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள் என மொத்தம் 59 பேர் உள்ளனர்.

    இவர்களுக்கு நேற்று முன்தினம் மதியம் அசைவ உணவு பரிமாறப்பட்டது. அதை சாப்பிட்ட பலருக்கும் திடீரென்று வாந்தி, பேதி ஏற்பட்டது. இதையடுத்து அவர்களில் செங்கோட்டையைச் சேர்ந்த சங்கர் கணேஷ் (வயது 42), சொக்கம்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி முருகம்மாள் (60), செங்கோட்டையைச் சேர்ந்த அம்பிகா (40) ஆகிய 3 பேர் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    நேற்று காலையில் கோவில்பட்டி செல்வராஜ் (70), மதுரை விஜயா (66), மும்தாஜ் (52), சாந்தி (60), கோமதி (70), கடையநல்லூர் மீனாட்சி சுந்தரம் (64), பேச்சியம்மாள் (48), சுகுமார் (72), தனலட்சுமி (70) ஆகியோருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

    அவர்களும் சிகிச்சைக்காக அதே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி சங்கர்கணேஷ், முருகம்மாள், அம்பிகா ஆகிய 3 பேர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து முதியோர் இல்லத்திற்கு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், உதவி கலெக்டர் லாவண்யா, மாவட்ட சுகாதார துறை அதிகாரி கோவிந்தன், உணவு பாதுகாப்பு அதிகாரி புஷ்பராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் பாபு, இன்ஸ்பெக்டர் கவிதா, தென்காசி தாசில்தார் மணிகண்டன், மண்டல துணை தாசில்தார் சண்முகநாதன் உள்பட அரசு அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உணவு, குடிநீர் போன்றவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். சமையல் அறையில் உள்ள உணவு தயாரிக்க வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வுக்கு பின் அதிகாரிகள் கூறுகையில், 'பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த இல்லத்தில் சம்பவத்தன்று அசைவ உணவு பரிமாறப்பட்டு உள்ளது. அந்த அசைவ உணவின் மாதிரிகள், குடிநீரும் ஆய்வுக்காக எடுக்கப்பட்டு உள்ளது. அதன் முடிவுக்காக காத்திருக்கிறோம்' என்றனர்.

    இந்த சம்பவத்தையடுத்து அந்த இல்லத்தில் இருந்த மற்ற 48 பேர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அருகில் உள்ள அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து அந்த இல்லத்திற்கு உதவி கலெக்டர் லாவண்யா முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை பழனிநாடார் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் குறித்து சாம்பவர்வடகரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனலட்சுமி என்ற மூதாட்டி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதனால் உணவு ஒவ்வாமையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • எழும்பூர்-புதுச்சேரி இடையிலான பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் பயணிகள் ரெயில் ஆகஸ்டு 3-ந் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக சென்னை கடற்கரை சென்றடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் எழும்பூர்-புதுச்சேரி இடையிலான பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எழும்பூரிலிருந்து புறப்பட்டு புதுச்சேரி செல்லும் பயணிகள் ரெயில் ஆகஸ்டு 4-ந் தேதி வரை சென்னை கடற்கரையிலிருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி செல்லும். இந்த ரெயில் சென்னை பூங்கா மற்றும் கோட்டை ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். இதே போல, புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் பயணிகள் ரெயில் ஆகஸ்டு 3-ந் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக சென்னை கடற்கரை சென்றடையும்.

    அதே போல, வருகிற 19-ந் தேதி முதல் ஆகஸ்டு 17-ந் தேதி வரை சென்னை எழும்பூருக்கு வரும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16102), மதுரை தேஜஸ் ரெயில் (22672), மன்னார்குடி மன்னை ரெயில் (16108), செந்தூர் அதிவிரைவு ரெயில் (20606), குருவாயூர் ரெயில் (16128) ஆகிய ரெயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.

    மறுமார்க்கமாக, 20-ந் தேதி முதல் ஆகஸ்டு 18-ந் தேதி வரை எழும்பூரிலிருந்து கொல்லம் (16101), மதுரை (22671), மன்னார்குடி (16107), திருச்செந்தூர் (20605) மற்றும் குருவாயூருக்கு (16128) செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • த.வெ.க. தலைவர் விஜய் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார்.
    • முதலிடத்தை பெற்ற மாணவிகளுக்கு வைரக் கம்மல் பரிசாக வழங்கப்பட்டது.

    சென்னை:

    த.வெ.க. தலைவர் விஜய் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார்.

    2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 2 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது. கடந்த மாதம் 30-ந் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், கடந்த 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. முதலிடத்தை பெற்ற மாணவிகளுக்கு வைரக் கம்மல் பரிசாக வழங்கப்பட்டது.

    தொகுதிவாரியாக 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் 3-ம் கட்ட பரிசளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. த.வெ.க. தலைவர் விஜய் இன்று 3-ம் கட்டமாக பரிசு வழங்குகிறார்.

    தமிழ்நாடு, புதுச்சேரியில் 51 சட்டசபை தொகுதிகள் வாரியாக மாணவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

    • எரிந்த விமானம் பீனிக்ஸ் பறவையாய் மீண்டெழ முடியாது.
    • நாம் மீண்டெழலாம் தவறுகளிலிருந்து என பதிவிட்டுள்ளார்.

    சென்னை:

    அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    கருப்புப் பெட்டி தேடுவார்கள்

    விமானம் விபத்தானால்

    ஒரு விமானமே

    கருப்புப் பெட்டியாய்க்

    கருகிக் கிடக்கையில்

    எந்தக் கருப்புப் பெட்டியை

    இனிமேல் தேடுவது?

    பறிகொடுத்தோர்

    பெருமூச்சுகள்

    கரும்புகையாய்...

    தீப்பிடித்த கனவுகளின்

    சாம்பல்களை

    அள்ளி இறைக்கிறது

    ஆமதாபாத் காற்று

    அவரவர் அன்னைமாரும்

    கண்டறிய முடியாதே

    அடையாளம் தெரியாத

    சடலங்களை

    புஷ்பக விமானம்

    சிறகு கட்டிய

    பாடையாகியது எங்ஙனம்?

    கடைசி நிமிடத்தின்

    கதறல் கேட்டிருந்தால்

    தேவதைகள் இறந்திருக்கும்;

    மரணம் முதன்முதலாய்

    அழுதிருக்கும்

    எரிந்த விமானம்

    பீனிக்ஸ் பறவையாய்

    மீண்டெழ முடியாது

    நாம் மீண்டெழலாம்

    தவறுகளிலிருந்து' என பதிவிட்டுள்ளார்.

    • ராமாபுரம் டி.எல்.எப் அருகே மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்தது.
    • இந்த விபத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது.

    இதில் பூந்தமல்லி-போரூர் இடையே ரெயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்நிலையில், சென்னை போரூர் டி.எல்.எப் - எல் அண்ட் டி அருகே மெட்ரோ ரெயில் பணியின்போது இரண்டு மெட்ரோ தூண்களுக்கு இடையே தண்டவாள டிராக் சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

    மெட்ரோ தூண்கள் விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
    • காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் (காட்வீக்) புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்துள்ள நிலையில், இதுவரை 204 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதில் மிகுந்த வருத்தம்.

    துயரப்படும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 6 முறை ஆட்சிக்கு வந்துள்ளோம். 7 வது முறையும் தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வருவார்.
    • தமிழகத்தில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறப்போகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணைகளை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    கேள்வி : தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கூறியதற்கு?

    பதில் : திட்டங்கள் அத்தனையும் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் ஒவ்வொரு துறையிலும் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சண்முகம் இதை கூறினாரா? என்று எனக்குத் தெரியவில்லை. அவர் கூட்டணியில் அதிக இடங்கள் வேண்டும் என கூறியுள்ளார். அது அவரின் உரிமை. 7 ஆண்டு காலமாக ஒரு தூசி கூடப்படாமல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணியை பார்த்து வருகிறார்.

    இந்தியாவில் வலதுசாரிகள் ஒரு பக்கமும் இடதுசாரிகள் ஒரு பக்கமும் உள்ளனர். தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையில் ஜனநாயக கூட்டணி மிக சிறப்பாக உள்ளது. மக்களுக்கான கூட்டணி இது. எந்த பிரச்சனையும் இல்லை. எந்த திட்டங்கள் எனக்கூறினால் அதனையும் நிறைவேற்றித் தர எங்களது முதல்வர் தயாராக உள்ளார்.

    கேள்வி : தி.மு.க. கூட்டணியில் இருந்து முக்கிய கட்சிகள் விலக உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியது பற்றி?

    பதில் : அது பகல் கனவு. யாரும் போக மாட்டார்கள். கண்கள் தெரியும் போதே தண்ணீர் இல்லாத பாறை கிணற்றில் எப்படி விழுவார்கள். தண்ணீர் இருந்தால் குதிக்கலாம். தண்ணீர் இல்லாமல் எப்படி குதிக்க முடியும்.

    இந்தியாவில் தலைசிறந்த அரசாக தலைசிறந்த மாநிலமாக தலை சிறந்த முதலமைச்சராக தமிழ்நாட்டில் திட்டங்கள் வளர்ச்சியிலிருந்து எல்லோரிடத்திலும் முதன்மையான அரசாங்கம் எல்லாத்துறைகளும் உயர்ந்துள்ளது.

    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 100க்கு 100 சதவீதம் வந்துள்ளது என்றால் படிப்பதற்கு ஆர்வமாக வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் போகாத பள்ளிக்கூடங்களிலும் மாணவர்கள் நிரம்பி வழிகின்றனர். கல்லூரிக்கு சென்றால் பணம், பள்ளிகளில் காலை உணவு, மதிய உணவு உள்ளது. படிப்பதற்கு இலவசம், கல்லூரி வரை இலவசம் எல்லாமே இலவசம். ஆனால் இதனை இலவசம் என கூற மாட்டேன். கட்டணமில்லா கல்வி பெறுவதற்கு முதலமைச்சர் வலியுறுத்தி வருகிறார்.

    கேள்வி : ஆட்சி, அதிகாரத்தில் பங்கு குறித்து?

    பதில் : ஆட்சியில் யாரும் இதுவரை பங்கு கேட்டது இல்லை. கடந்த 6 முறை ஆட்சிக்கு வந்துள்ளோம். 7 வது முறையும் தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வருவார்.

    தமிழகத்தில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறப்போகிறது.

    கேள்வி : கூட்டணி கட்சிகள் அதிக இடங்கள் கேட்பது குறித்து?

    பதில் : நான் சாப்பிட வேண்டும் என்றால் எனக்கு மூன்று புரோட்டாக்கள் வைத்தால் சாப்பிட முடியாது. 2 அல்லது 3 இட்லிகள் தான் சாப்பிட முடியும். அவரவர் தகுதிக்கு ஏற்றாற் போல் கடந்த காலங்களில் எந்தெந்த இயக்கங்களுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதோ அந்த அடிப்படையில் முதலமைச்சர் முடிவு செய்து வழங்குவார். எந்தக் கூட்டணியும் எங்களை விட்டு போகாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • கள் மது வகையில் வராது. அது தமிழர்களின் பாரம்பரிய உணவு.

    திருச்செந்தூர்:

    நாம் தமிழர் கட்சி, தமிழ்நாடு கள் இயக்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் தமிழ்நாட்டில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

    கள் ஒரு போதைப்பொருள் அல்ல. கள்ளை, மரங்களில் இருந்து இறக்கி விற்பனை செய்ய பிற மாநிலங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்திலும் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கம் பல ஆண்டுகளாக போராடி வருகிறது.

    மதுபானங்களை தமிழ்நாடு அரசே டாஸ்மாக் நிறுவனம் மூலம் விற்பனை செய்யும் நிலையில் பனை மரத்தில் உற்பத்தியாகும் கள்ளை மட்டும் இறக்க, விற்க தடைவிதிப்பதா என இந்த அமைப்புகள் நீண்ட காலமாக கூறி வருகின்றன. அவ்வப்போது கள் இறக்கும் போராட்டமும் முன்னெடுக்கப்படுகிறது.

    இந்நிலையில் தமிழக பனையேறிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு கள் இயக்கம் ஆகியவற்றின் சார்பில், கள் விற்க அரசு அனுமதிக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் கள் விடுதலை மாநாடு நடந்தது.

    அதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ரஷ்யாவில் வோட்கா போல், தமிழனின் தேசிய பானம் கள். அதை கள் என சொல்லாமல், பனஞ்சாறு, மூலிகைசாறு எனவும் சொல்லலாம். ஒருநாள் நானே பனை மரம் ஏறி, கள் இறக்கும் போராட்டத்தை நடத்துவேன் என்றார்.

    அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், வருகிற 15-ந் தேதி, உழவர் பாசறை சார்பில் கள் எங்கள் உணவு! கள் எங்கள் உரிமை! என்ற முழுக்கத்தோடு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பெரியதாழை, குலசேகரன்பட்டினத்தில் கள் இறக்கும் போராட்டம் நடக்க உள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியினர் கூறும்போது,

    தமிழகத்தில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை நீக்க, பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. மருத்துவ குணம் கொண்ட, ஏராளமான ஊட்டச்சத்து கள்ளில் உள்ளது. கள் மது வகையில் வராது. அது தமிழர்களின் பாரம்பரிய உணவு என்ற கொள்கையுடன், கள் விடுதலை போராட்டத்தில், சீமான் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். சட்டசபை தேர்தலில், ஒட்டுமொத்த பனை விவசாயிகளின் ஓட்டுகளை கவர, சில அறிவிப்புகளையும், சீமான் வெளியிட உள்ளார். வருகிற 15-ந்தேதி, அவர் பனை மரத்தில் ஏறி, கள் இறக்க உள்ளார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்நிலையில் சீமான் பனை மரத்தில் ஏறி, பயிற்சி எடுக்க உள்ளார். பனை மரத்தில் ஏற வேண்டாம் என, அவரது கட்சியினர் கூறியபோதும், அவர் பனை ஏறுவதில் உறுதியாக உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் பனை ஏறுவதற்கு தகுந்த மரங்களை தேடும் பணியில், போராட்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே சீமான் நேரடியாக களமிறங்கும் இந்த போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள், மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், அனைத்து பாசறைகளின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தோர் பெருந்திரளாக கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • மாநில அரசு கொடுக்க கூடிய ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கும், மத்திய அரசு திரும்ப ஒரு ரூபாய் கொடுக்கிறது.
    • தி.மு.க. தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கவில்லை.

    கோவை:

    தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் மாநில தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான அண்ணாமலை இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகி விட்டது. பிரதமர் மோடி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியை மக்கள் அனைவரும் படிக்க வேண்டும். அப்போது தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோமா என்பது தெரியவரும். எனவே மக்கள் எங்களின் வாக்குறுதியை எடுத்து படிக்க வேண்டும்.

    2014 மற்றும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல்களின் போது கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் பா.ஜ.க நிறைவேற்றி உள்ளது. தற்போது 3-வது முறையாக ஆட்சி நடந்து வருகிறது. 3-வது முறையாக ஆட்சி நடத்தி வரும் பிரதமர் மோடி அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை செய்துள்ளது. கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையுமே நாங்கள் நிறைவேற்றி உள்ளோம்.

    மாநில அரசு கொடுக்க கூடிய ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கும், மத்திய அரசு திரும்ப ஒரு ரூபாய் கொடுக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகி விட்டது. 511 தேர்தல் வாக்குறுதிகளில் 50 வாக்குறுதிகள் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. எங்களை போன்று தி.மு.க.வில் யாராவது இதுபோன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி நாங்கள் 4 ஆண்டுகள் ஆட்சி நடத்தி உள்ளோம். நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம் என தெரிவிக்க முடியுமா?.

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கவில்லை. பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. இந்தியாவில் 100 சதவீத மக்களுக்கும் சிலிண்டர் கொடுத்துள்ளோம். எங்கள் தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் குறைப்பதாக எங்கேயும் சொல்லவில்லை. ஆனால் நாங்கள் குறைத்துள்ளோம். எங்களது பா.ஜ.க ஆளும் மாநிலங்களிலும் குறைக்கப்பட்டுள்ளது.

    கோவை விமான நிலைய விரிவாக்க பணியில் இங்குள்ளவர்களுக்கு ஆர்வம் இருக்க வேண்டும். விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலத்தை இன்னும் அரசு முழுமையாக கொடுக்கவில்லை. இதற்கு காரணம் இங்குள்ளவர்கள் தான்.

    இந்தியா முழுவதும் பயன்பெறும் விஸ்வகர்மா திட்டத்தை தமிழகத்தில் பயன்படுத்தாமல் அதற்கு வேறு ஒரு பெயர் வைத்து கொண்டு வந்தனர். அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது. அதேபோன்று பிரதமரின் மருந்தகம் இருக்க கூடிய சூழ்நிலையில் தமிழகத்தில் முதல்வரின் மருந்தகம் என்ற திட்டத்தை கொண்டு வந்தனர். ஆனால் அந்த திட்டமும் தோல்வியடையும் நிலையில் தான் உள்ளது. மத்திய அரசின் திட்டங்களை முடக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க. அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என பிரதமருக்கு நீங்கள் கடிதம் எழுதியுள்ளீர்களா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அண்ணாமலை பதில் அளித்து பேசும் போது, நான் எந்த கடிதமும் எழுதவில்லை. நான் என்னுடைய வேலையை பார்த்து கொண்டிருக்கிறேன். 2026-ல் கூட்டணி ஆட்சி என நான் சொல்ல மாட்டேன். நான் பா.ஜ.க. ஆட்சி என்று தான் சொல்வேன். தேர்தலின் போது கூட்டணியில் உள்ளவர்கள் அனைவரும் இணைந்து பேசி எவ்வளவு இடங்களில் போட்டியிடுவது என்பதை முடிவு செய்வார்கள். என்னை பொறுத்தவரை 2026-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று தான் நான் சொல்வேன்.

    நான் பா.ஜ.கவின் தொண்டன். உயிர் உள்ளவரை இந்த கட்சி வளர்ச்சிக்காக பாடுபடுவேன். மற்ற கட்சி வளர்ப்பதற்காக நான் இல்லை. கட்சி எடுக்கும் முடிவுக்கு தொண்டனாக நான் கட்டுப்படுவேன். எங்கு வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமோ அங்கு வாயை மூடிக்கொண்டு இருக்கிறேன். எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய அரசின் எந்த திட்டங்களுக்கும் முழு நிதி மாநில அரசுக்கு வந்து சேர்வதில்லை.
    • டெல்லிக்கு தலையாட்டி பொம்மையாக அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    சேலம்:

    அமித்ஷா மதுரைக்கு வந்தபோது தி.மு.க. ஆட்சியில் குறை சொல்லி ஆத்திரத்தை கொட்டித் தீர்த்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

    * அறிவிப்பு மட்டுமே வெளியிட்டு செயல்படுத்தாமல் உள்ளதாக தி.மு.க. அரசை குற்றம்சாட்டியுள்ளார்.

    * 10 ஆண்டுகளுக்கு முன் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையின் நிலை என்ன?

    * 2 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடித்திருக்கலாம்.

    * எய்ம்ஸ் மருத்துவமனையை பத்தாண்டுகளாக கட்டுவதற்கு அது மருத்துவமனையா அல்லது விண்வெளி ஆராய்ச்சி நிலையமா?

    * மதுரை வந்த அமித்ஷா எய்ம்ஸ் நிலை குறித்து நேரில் போய் பார்த்தாரா?

    * பிரதமர் பெயரில் உள்ள திட்டங்களுக்கே மாநில அரசு தான் கூடுதல் நிதி கொடுக்கிறது.

    * 11 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்திற்கு அளித்த சிறப்பு திட்டம் என்ன?

    * மத்திய அரசின் எந்த திட்டங்களுக்கும் முழு நிதி மாநில அரசுக்கு வந்து சேர்வதில்லை.

    * சட்டையில் இருந்தால் தான் அகப்பையில் வரும்... எனவே எந்த சாதனையையும் மத்திய அரசால் சொல்ல முடியவில்லை.

    * அன்றைய பொருளாதாரம், விலைவாசி நிலை என்ன? தற்போதைய நிலை என்ன?

    * மதுரையின் தொன்மையை நிராகரிக்கும் வகையில் பேசியிருக்கிறார் மத்திய அமைச்சர் ஒருவர்.

    * ஏராளமான தரவுகளுடன் கொடுக்கப்பட்ட கீழடி ஆய்வறிக்கையை திருத்த வேண்டும் என்று மத்திய அரசு சொல்கிறது.

    * கீழடி அறிவியல் ஆய்வில் எழுதப்பட்ட அறிக்கையை போதவில்லை என கூறுகிறார் மத்திய அமைச்சர் செகாவத்.

    * தமிழர்களின் தொன்மையை அழிக்கவும், மறைக்கவும் மத்திய அரசு முயற்சிக்கிறது.

    * தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோன போது எடப்பாடி பழனிசாமி வாய் திறந்து கேள்வி கேட்டாரா?

    * டெல்லிக்கு தலையாட்டி பொம்மையாக அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

    • சேலத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைப்பவர் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி.
    • சேலம் செவ்வாப்பேட்டை தினசரி சந்தை ரூ.9 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

    சேலத்தில் நடைபெற்ற விழாவில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து அவர் கூறியதாவது:

    * சேலத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைப்பவர் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி.

    * தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் ஆட்சியர்களில் ஒருவர்.

    * சேலத்திற்கு தி.மு.க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

    * சேலத்தில் 9 உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    * சேலத்தில் ரூ.548 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    * கடந்த 4 ஆண்டுகளில் சேலத்திற்கு ரூ.7600 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    * சேலம் மாவட்டத்தில் மட்டும 56 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகள்

    * சேலத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் சாலைகள் சீரமைக்கப்படும்.

    * சேலம் செவ்வாப்பேட்டை தினசரி சந்தை ரூ.9 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

    * சங்ககிரி நகராட்சியில் புதிய வணிக வளாகம் கட்டப்படும். மேட்டூர் நரசிங்கபுரத்தில் புதிய நகராட்சி கட்டடங்கள் கட்டப்படும்.

    * ஆத்தூரில் ரூ.5 கோடியில் புதிய குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும். தாரமங்கலம், எடப்பாடி, ஆத்தூர் பகுதிகளில் புதிய குடிநீர்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

    * தலைவாசல் இழுப்பநத்தம் வேளாண் விற்பனை மையம் ரூ.10 கோடியில் தரம் உயர்த்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் நெற்களஞ்சியமாக இருப்பதற்கு உயிர்நாடி காவிரிதான் காரணம்.
    • நெல் கொள்முதல் விலை உயர்வால் 10 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

    சேலத்தில் நடைபெற்ற விழாவில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து அவர் கூறியதாவது:

    * தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் நெற்களஞ்சியமாக இருப்பதற்கு உயிர்நாடி காவிரிதான்.

    * 4 ஆண்டுகளாக குறித்த நேரத்தில் மேட்டூர் அணையை திறந்து வைத்துள்ளோம்.

    * தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் நெற்களஞ்சியமாக இருப்பதற்கு உயிர்நாடி காவிரிதான் காரணம்.

    * அணையிலிருந்து பொங்கிவரும் காவிரி போல் உங்களை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சி பொங்குகிறது.

    * விவசாயிகள் நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 பெறுவார்கள்.

    * சன்ன ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.2,547-க்கு கொள்முதல் செய்யப்படும்.

    * சாதாரண நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.131 உயர்வு, சன்னரகம் ரூ.156 உயர்த்தப்படும்.

    * நெல் கொள்முதல் விலை உயர்வால் 10 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×