என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தி.மு.க. வலிமையாக இருப்பதாக அண்ணாமலை எங்கேயும் கூறவில்லை. அவரது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது.
    • ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரனை சந்திக்க தயாராக இருக்கிறேன்.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தற்போதைய சூழலில் நான் பதவி விலக வேண்டிய அவசியமில்லை

    * அ.தி.மு.க.வை உடைக்க வேண்டிய அவசியம் பா.ஜ.க.விற்கு கிடையாது.

    * அ.தி.மு.க.வில் தற்போதைய சூழலில் எந்த பிளவும் இல்லை.

    * தி.மு.க. வலிமையாக இருப்பதாக அண்ணாமலை எங்கேயும் கூறவில்லை. அவரது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது.

    * ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரனை சந்திக்க தயாராக இருக்கிறேன்.

    * உள்துறை அமைச்சர் அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்தது சாதாரணமானது.

    * அமித்ஷா- செங்கோட்டையன் சந்திப்பு பற்றிய தகவல் முழுமையாக எனக்கு தெரியாது.

    * அமித்ஷா- செங்கோட்டையன் சந்திப்பால் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.

    * 2026-ம் ஆண்டு தேர்தலுக்கு பின் யார் ICU-வில் இருக்கிறார்கள் என்பது தெரியும் என்றார். 

    • அரசாங்கம் நீங்கள் நல்லா குடியுங்கள், அதை வைத்துதான் ரூ.1,000 கொடுக்க முடியும் என சொல்கிறது.
    • எல்லாரும் குடிங்க, குடிங்க என்று சொல்கிறார்கள், ஆனால் ராமதாஸ் தான் படிங்க, படிங்க என சொல்கிறேன்.

    செய்யூர்:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், மீண்டும் கிராமங்களை நோக்கி மருத்துவர் அய்யா என்கிற தலைப்பில் நேற்று முதல் திண்ணை பிரசாரம் மேற்கொண்டார். முதல்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேட்டில் நடைபெற்ற கிராம அளவிலான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அரசாங்கம் நீங்கள் நல்லா குடியுங்கள், அதை வைத்துதான் ரூ.1,000 கொடுக்க முடியும் என சொல்கிறது.

    ஆனால், நாங்கள் ஒரு சொட்டு மது இருக்கக்கூடாது என்று பேசி வருகிறோம், இளம் தலைமுறையினர் கஞ்சாவுக்கு அடிமையாகின்றனர். கஞ்சாவுக்கு அடிமையானால் மீள முடியாது.

    எல்லாரும் குடிங்க, குடிங்க என்று சொல்கிறார்கள், ஆனால் ராமதாஸ் தான் படிங்க, படிங்க என சொல்கிறேன்.

    உங்களுடைய குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள், அதற்காக தான் நான் பல போராட்டங்களை நடத்தி உள்ளேன். நான் எந்த பதவிக்கும் போக விரும்பவில்லை, என் வாழ்நாள் முழுவதும் எந்த பதவிக்கும் போக மாட்டேன் என சத்தியம் செய்து மற்றவர்களை எல்லாம் பெரிய பெரிய பதவிக்கு அனுப்பி அழகு பார்த்துள்ளேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி, மாநில செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், செங்கல்பட்டு மாவட்டச்செயலாளர் சாந்த மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த ஆன்மீக பயணத்திற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்று கொள்ளலாம்.
    • www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட பக்தர்கள் கட்டணமில்லா பயணமாக ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவத் கோவில்களுக்கும், அறுபடை வீடுகளுக்கும், ராமேசுவரத்திலிருந்து காசிக்கும் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். மேலும் மானசரோவர் மற்றும் முக்திநாத் போன்ற புனித தலங்களுக்கு ஆன்மீக பயணம் சென்று வருபவர்களுக்கு வழங்கப்படும் அரசு மானியமும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆன்மிகப் பயணங்களின் மூலம் இதுவரை 7,998 பக்தர்கள் பயன் பெற்றுள்ளனர்.

    அந்தவகையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலிலிருந்து காசி விஸ்வநாதசாமி கோவிலுக்கு இவ்வாண்டு ரூ.1.50 கோடி அரசு நிதியில் 600 பக்தர்கள் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இதற்காக இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களிலிருந்து மண்டலத்திற்கு 30 பக்தர்கள் வீதம் 600 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இந்த ஆன்மீக பயணத்திற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் அக்டோபர் 22-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • வரதராஜபுரம், பனிமலர் மருத்துவக் கல்லூரி, பெங்களூரு டிரங்க் ரோடு.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (12.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    பாலவாக்கம்: காமராஜர் சாலை மற்றும் மெயின் ரோடு, கரீம் நகர், மகாத்மா காந்தி நகர், சங்கம் காலனி 1 மற்றும் 2வது தெரு, கந்தசாமி நகர் 1 முதல் 7வது தெரு.

    பூந்தமல்லி: வரதராஜபுரம், பனிமலர் மருத்துவக் கல்லூரி, பெங்களூரு டிரங்க் ரோடு, பனிமலர் பொறியியல் கல்லூரி, நசரத்பேட்டை, மேப்பூர், மலையம்பாக்கம், அகரமேல்.

    திருமங்கலம்: மெட்ரோ சோன், சத்திய சாய் நகர், பாடிகுப்பம் மெயின் ரோடு, டிஎன்எச்பி குவார்ட்டர்ஸ், பழைய பென், கோல்டன் ஜூபிலி பிளாட்ஸ், பாலாஜி நகர், காமராஜ் நகர், பெரியார் நகர், விஜிஎன், அம்பேத்கர் நகர், மேத்தா ராயல் பார்க், ரெயில் நகர், மாட வீதிகள், சிவன் கோவில் தெரு, சீனிவாசன் நகர், 100 அடி சாலை, நியூ காலனி மற்றும் மேட்டுக்குளம்.

    எழும்பூர்: ஈவிகே சம்பத் சாலை, ஜெர்மையா சாலை, ரிதர்டன் சாலை மற்றும் சந்து, சர்ச் லேன், பாலர் கல்வி நிலையம், சிஎம்டிஏ, மெரினா டவர், வெனல்ஸ் சாலை, பிசிஓ சாலை, விபி ஹைல், பிக்னிக் ஹோட்டல், வால்டாக்ஸ் சாலை, பார்க் டவுன், வரதராஜன் தெரு, சந்தோஷ் நகர், பிரகின்பாட் சாலை, எச். சிங்கர் தெரு, சுப்பையா தெரு, பேரக்ஸ் சாலை, சைடன்ஹாம்ஸ் சாலை, கற்பூர முதலி தெரு, திருவேங்கடம் தெரு, மாட்டுக்கரை வீர பத்திரன் தெரு, காட்டூர் சடையப்பன் தெரு, முத்து கிராமணி தெரு, சர்ச் சாலை, ஜெரேமியா சாலை.

    • அதிமுக கட்சி விவகாரத்தில் தலையிட நான் தயாராக இல்லை.
    • விஜய் சுற்றுப்பயணத்தை சனிக்கிழமை வைத்தால் என்ன?, வெள்ளிக்கிழமை வைத்தால் நமக்கென்ன?.

    வேலூர்:

    வேலூர், காட்பாடி காந்திநகரில் தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி: தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி ஆனது குறித்து...

    பதில்: தமிழர் என்பது மட்டும் அல்ல, அவர் எனக்கு வேண்டிய நண்பர். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கேள்வி: எம்.ஜி.ஆர். காலத்தில் அ.தி.மு.க.வை பார்த்தவர் நீங்கள். அ.தி.மு.க.வின் தற்போதைய நிலை குறித்து...

    பதில்: அ.தி.மு.க. நிலை குறித்து நான் என்ன சொல்வது. அது அவர்கள் கட்சி. அந்த கட்சி விவகாரத்தில் தலையிட நான் தயாராக இல்லை.

    கேள்வி: தாமிரபரணி ஆற்றை தி.மு.க. தலைமுழுகி விட்டதாக நயினார் நாகேந்திரன் பேசி இருக்கிறாரே?.

    பதில்: நயினார் பாவம். புது பதவிக்கு வந்து வேகமாக இருக்கிறார். அவர் சட்டசபையில் எப்படி செயல்படுகிறார் என எங்களுக்கு தெரியும்.

    கேள்வி: த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் குறித்து...

    பதில்: நடிகர் விஜய் முதலில் வெளியே வரட்டும் பார்க்கலாம். அவர் சுற்றுப்பயணத்தை சனிக்கிழமை வைத்தால் என்ன?, வெள்ளிக்கிழமை வைத்தால் நமக்கென்ன?.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
    • சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டு இருக்கிறது.
    • மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் ‘மகிழ் முற்றம்' குழுத்திட்டத்தை பள்ளிகளில் முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பள்ளிகளில் அமைதியான சூழலை ஏற்படுத்தவும், மாணவர்கள் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கவும் மேற்கொள்ளப்பட வேண்டிய சில வழிமுறைகள் குறித்து, பள்ளிகளுக்கு, கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சாதி அல்லது வகுப்புவாத எண்ணங்களை மாணவர்களிடையே ஏற்படுத்த முயற்சிப்பதாக ஆசிரியர் மீது பெறப்படும் புகார்கள் குறித்து முதன்மைக்கல்வி அலுவலர் உடனடியாக விசாரணை மேற்கொள்வதோடு, சம்பந்தப்பட்ட ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும்.

    மாணவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கக்கூடிய கல்வி உதவித் தொகை விவரங்கள் ரகசியமாக பராமரிக்கப்படுவது மிக மிக அவசியம். இந்த விவரங்களை பொதுவெளியில் தெரியும் வகையில் காட்சிப்படுத்தக்கூடாது. மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் 'மகிழ் முற்றம்' குழுத்திட்டத்தை பள்ளிகளில் முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும்.

    பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டு இருக்கிறது. இருப்பினும் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது தெரியவந்தால், அதை தலைமை ஆசிரியரோ, ஆசிரியரோ பறிமுதல் செய்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். பள்ளிகளில் திருக்குறள் அறநெறி வகுப்புகளை தவறாமல் நடத்த வேண்டும். 'மாணவர் மனசு' புகார் பெட்டியை வாரம் ஒரு முறை பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், தலைமை ஆசிரியர் முன்னிலையில் திறந்து, அதில் உள்ள தபால்களின் எண்ணிக்கையை பதிவு செய்து, அதுகுறித்து விசாரணை செய்து மாவட்டக்கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் சமர்ப்பிக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • செங்கல்பட்டு அருகே சூனாம்பேடு பகுதியில் திண்ணை பிரசாரத்தில் ராமதாஸ் ஈடுபட்டார்.
    • 100க்கும் மேற்பட்ட பெண்களிடையே ராமதாஸ் உரையாற்றினார்.

    பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று திண்ணை பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

    உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் அன்புமணி நடைபயணத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ராமதாஸ் திண்ணை பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

    அதன்படி, செங்கல்பட்டு அருகே சூனாம்பேடு பகுதியில் திண்ணை பிரசாரத்தில் ராமதாஸ் ஈடுபட்டார். 100க்கும் மேற்பட்ட பெண்களிடையே ராமதாஸ் உரையாற்றினார்.

    இந்த பிரச்சார கூட்டத்தில் மாநில வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், ராமதாஸ் நியமித்த மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

    • உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.
    • பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நாளை (11.09.2025) திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-4ல் ராமநாதபுரம் முதல் தெரு நடுநிலைப்பள்ளி எதிரில் உள்ள சமுதாயக் கூடம், மணலி மண்டலம் (மண்டலம்-2), வார்டு-16ல் ஆண்டார்குப்பம் பள்ளி மைதானம், தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), வார்டு-35ல் கொடுங்கையூர், எம்.ஆர்.நகரில் உள்ள முத்துகுமாரசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இராயபுரம் மண்டலம் (மண்டலம்-5), வார்டு-54ல் வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஜே.கே.கன்வென்ஷன் ஹால், திரு.வி.க.நகர் மண்டலம் (மண்டலம்-6),

    வார்டு-69ல் அகரம் பார்த்தசாரதி தெருவில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானம், அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-93ல் முகப்பேர், நந்தினி லட்சுமணன் தெருவில் உள்ள ஏ.எஸ்.என். மஹால், அண்ணாநகர் மண்டலம் (மண்டலம் – 8), வார்டு-94ல் வில்லிவாக்கம், எம்.டி.எச். சாலையில் உள்ள டி.கே.ஏ. திருமண மண்டபம், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்–9), வார்டு-111ல் ஆயிரம் விளக்கு, மாதிரி பள்ளிச் சாலையில் உள்ள சமுதாயக் கூடம், கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம் – 10), வார்டு-127ல் கோயம்பேடு,

    காளியம்மாள் கோயில் தெரு, சென்னை குடிநீர் வாரிய வளாகத்தில் உள்ள பேட்டரி மூன்று சக்கர வாகன நிறுத்துமிடம், அடையாறு மண்டலம் (மண்டலம் – 13), வார்டு-170ல் கோட்டூர் இரயில் நிலையம் அருகிலுள்ள ஹாக்கி விளையாட்டு மைதானம், பெருங்குடி மண்டலம் (மண்டலம் – 14), வார்டு-189ல் பள்ளிக்கரணை, ஐஐடி காலனி 3வது பிரதான சாலையில் உள்ள ஐஐடி சமுதாயக் கூடம், சோழிங்கநல்லூர் மண்டலம் (மண்டலம் – 15), வார்டு-199ல் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

    இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தினாரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருத்துகள் இயக்கிட திட்டம்.

    வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    12/09/2025 (வெள்ளிக்கிழமை) 13/09/2025 (சனிக்கிழமை) மற்றும் 14/09/2025 (ஞாயிறுக் கிழமை முகூர்த்தம்) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினாரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை. திருச்சி கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி நாகர்கோவில் கன்னியாகுமரி தூத்துக்குடி, கோயம்புத்தூர். சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 12/09/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 355 பேருந்துகளும், 13/09/2025 (சணிக்கிழமை) 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளங்கண்ணி ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 12/09/2025 வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் 13/09/2025 சனிக்கிழமை அன்று 55 பேருத்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மாதாவரத்திலிருத்து 12/09/2025 மற்றும் 13/09/2025 ஆகிய நாட்களில் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருத்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 5,230 பயணிகளும் சனிக்கிழமை 3.276 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 9,040 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

    இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மறுநாள் (12.9.2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    பாலவாக்கம்: காமராஜர் சாலை மற்றும் பிரதான சாலை, கரீம் நகர், மகாத்மா காந்தி நகர், சங்கம் காலனி 1 மற்றும் 2வது தெரு, கந்தசாமி நகர் 1 முதல் 7வது தெரு.

    பூவிருந்தவல்லி: வரதராஜபுரம், பனிமலர் மெடிக்கல் காலேஜ், பெங்களூர் டிரன்க் சாலை மற்றும் இன்ஜினியரிங் காலேஜ், நசரத்பேட்டை, மேப்பூர், மலையம்பாக்கம், அகரமேல்.

    திருமங்கலம்: மெட்ரோஜோன் பிளாட், வி.ஆர் மால், சத்தியசாய் நகர், பாடிகுப்பம் பிரதான சாலை, வி.ஜி.என் குடியிருப்பு, பழையபென், கோல்டன்ஜூபிலி அப்பார்ட்மென்ட், பாலாஜி நகர், காமராஜ் நகர், பெரியார் நகர், அம்பேத்கர் நகர், மேத்தாராயல் பார்க், இரயில் நகர், 100அடி சாலை, சீனிவாசன் நகர், சிவன்கோயில் தெரு, மாடவீதிகள், நியூகாலனி, டிமேட்டுகுலம்.

    எழும்பூர்: ஈ.வி.கே. சம்பத் சாலை, ஜெர்மய்யா தெரு, ரிதெர்டன் சாலை மற்றும் சந்து, சர்ச் சந்து, பாலர் கல்வி நிலையம், சிஎம்டிஎ மெரினா டவர், வேனல்ஸ் சாலை, பிசிஒ சாலை, விபி ஹால், பிக்னிக் ஹோட்டல், வால்டாக்ஸ், பூங்கா நகர் வரதராஜன் தெரு, சந்தோஷ் நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, கங்கு ரெட்டி சாலை, ஆராமுதன் கார்டன், பிரதாபட் சாலை, ஹட்கின்சன் சாலை, சிங்கர் தெரு, சுப்பய்யா தெரு, பேரக்ஸ் சாலை. சைடனாம்ஸ் சாலை, கற்பூர முதலி தெரு, திருவேங்கடம் தெரு, மாட்டுக்கார வீரபத்ரன் தெரு, காட்டூர் சடையப்பன் தெரு, முத்து கிராமனி தெரு, ஜெர்மையா சாலை.

    • அதிமுக இரண்டாகவும் இல்லை, மூன்றாகவும் இல்லை, ஒன்றாகத்தான் இருக்கிறது.
    • அதிமுகவை பொறுத்தவரை கொள்கை வேறு கூட்டணி வேறு.

    கோவை மாவட்டம், வால்பாறையில் நடந்த இன்று அதிமுகு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் எனும் பிரச்சார பயணத்தை மேற்கொண்டார்.

    அப்போது பேசிய அவர்," ஐசியுவில் வென்டிலேட்டர் உதவியுடன் நோயாளி சிகிச்சையில் இருப்பது போல், திமுக ஆட்சியில் இருக்கிறது. அதிமுக ஒரே அணியாக இருக்கிறது" என்றார்.

    மேலும் பேசிய அவர் கூறியதாவது:-

    அதிமுக இரண்டாகவும் இல்லை, மூன்றாகவும் இல்லை, ஒன்றாகத்தான் இருக்கிறது; அதிமுகவின் ஒற்றுமையை 2026 சட்டமன்ற தேர்தலில் நிரூபிப்போம்.

    அதிமுக கூட்டணி மக்களை நம்பி இருக்கிறது; யார் ஆள வேண்டுமென மக்களே முடிவு செய்கிறார்கள்.

    தொண்டர்களின் செல்வாக்கு திமுகவில் குறைந்துவிட்டதால், ஒவ்வொரு வீடாக சென்று கெஞ்சி உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வரும் அவல நிலை திமுகுவுக்குத்தான் இருக்கிறது. அதனால், திமுகதான் ஐசியுவில் இருக்கிறது.

    அதிமுகவை பொறுத்தவரை கொள்கை வேறு கூட்டணி வேறு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×