என் மலர்
உள்ளூர் செய்திகள்
- குளிர்சாதன வசதி அல்லாத இருக்கைக்கு ரூ.1400 முதல் ரூ.1800 வரை வசூலிக்கிறார்கள்.
- தென் மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கும் பிற பகுதிகளில் இயக்கக்கூடிய ஆம்னி பஸ்களிலும் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சென்னை:
பண்டிகை காலம் என்றாலே ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாக உள்ளது. எத்தனை முறை அரசு எச்சரித்தாலும் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் பொது மக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதில் உறுதியாக உள்ளனர்.
தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர் பயணம் அதிகரிப்பதால் அதன் தேவையை கருத்தில் கொண்டு கட்டணங்களை 3 மடங்கு உயர்த்தி விட்டனர்.
சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு சென்னையில் இருந்து செல்லக்கூடிய அனைத்து ரெயில்களிலும் இடங்கள் நிரம்பி விட்டன.
காத்திருப்போர் பட்டியல் அதிகமாக இருந்ததால் முன்பதிவையும் நிறுத்தி விட்டனர். அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில்களிலும் இடங்கள் நிரம்பிவிட்டன. இதனால் மக்கள் அரசு மற்றும் ஆம்னி பஸ்களை நாடி செல்கிறார்கள்.
சொந்த ஊர் சொல்வதற்காக வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் பொதுமக்கள் பெருமளவில் முன்பதிவு செய்து வருகிறார்கள். இதை அறிந்த ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் தங்களது இணையதளத்தில் அதிக கட்டணங்களை வசூலிக்கின்றனர். சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமாக ஏ.சி. இருக்கைக்கு ரூ.600 முதல் ரூ.900 ரூபாய் வசூலிக்கப்படும்.
ஆனால் இப்போது ரூ.2000 முதல் ரூ.3000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட ஆம்னி பஸ்சில் இந்த கட்டணம் ரூ.3989 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி அல்லாத இருக்கைக்கு ரூ.1400 முதல் ரூ.1800 வரை வசூலிக்கிறார்கள்.
ஏ.சி. படுக்கை வசதிக்கு மதுரைக்கு ரூ.2000 முதல் ரூ.3200 வரை வசூலிக்கிறார்கள். ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.2000 முதல் கட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஏ.சி. படுக்கை வசதி கட்டணம் ரூ.3500. ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.2,700 கட்டணம் தற்போது நிர்ணயித்து உள்ளனர்.
இதே போல நாகர்கோவிலுக்கு குளிர்சாதன வசதி இல்லாத இருக்கைக்கு ரூ.2460 கட்டணம் அதிகபட்சமாக வசூலிக்கிறார்கள். ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.3363 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்தக் கட்டணம் தீபாவளி நெருங்கும் நேரத்தில் இன்னும் அதன் தேவையை பொருத்து உயர்த்தி கொள்வார்கள். அதிக கட்டணம் வசூலிப்பதால் நடுத்தர மக்கள் குடும்பமாக பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதே போல தென் மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கும் பிற பகுதிகளில் இயக்கக்கூடிய ஆம்னி பஸ்களிலும் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்த போதிலும் தனியார் பஸ் ஆபரேட்டர்கள் வெளிப்படையாக தங்களது இணையதளத்தில் கூடுதல் கட்டணத்தை அறிவித்து முன்பதிவு செய்கிறார்கள். அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற கூடுதல் கட்டணம் வசூலிப்பதும் அரசு எச்சரிப்பதும் வாடிக்கையாக உள்ளது. ஆனால் இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று பொதுமக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.
எனவே பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் மீது அரசு சரியான நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு உதவிட வேண்டும். விசேஷ நாட்களை பயன்படுத்தி இதுபோன்ற கட்டண கொள்ளையில் ஈடுபடுவது எந்த விதத்தில் நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் கேட்கிறார்கள்.
மேலும் கூடுதலாக சிறப்பு ரெயில்களை இயக்கினால் ஆம்னி பஸ்களின் பயன்பாடு குறையும். கட்டணத்தையும் குறைக்க வழியுண்டு. எனவே தென் மாவட்டங்களுக்கு பகல் நேர ரெயில்களை கூடுதலாக இயக்க வேண்டும். முன்பதிவு இல்லாத ரெயில் சேவையை அதிகரித்தால் ஏழை, நடுத்தர மக்கள் பயணம் செய்ய உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.
- ஜனநாயகத்தை காக்க சர்வாதிகாரத்தை ஒழிக்க எல்லோரும் ஒன்று சேர வேண்டும்.
- அ.தி.மு.க. மாபெரும் கூட்டணியை அமைக்கும்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க., தமிழகத்தின் மக்கள் உரிமையை பெற்றுத்தரக்கூடிய கட்சி. கரூர் சம்பவத்துக்கு சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்டால் மு.க.ஸ்டாலினுக்கு என்ன தயக்கம். த.வெ.க., தொண்டர்களை பொய் வழக்குகளை போட்டு மிரட்டுகிற செயல்களில் மு.க.ஸ்டாலின், காவல்துறை ஈடுபட்டு வருகிறது. இந்த வண்டி வெகுகாலம் ஓடாது.
த.வெ.க., தொண்டர்களை கொடுமைப்படுத்தும் செயலில் ஈடுபட்டால் அதற்கு அ.தி.மு.க., குரல் கொடுக்கும். கோவையில் ரூ.1635 கோடியில் பெரிய பாலத்தை தொடங்கி வைத்துள்ளனர். 4 ஆண்டு காலத்துக்கு முன்னரே வேலை எல்லாம் முடிந்து விட்டது.
4 ஆண்டுகளாக இறங்குதளம் அமைக்கும் வேலையும், பெயிண்ட் அடிக்கும் வேலையும் தான் செய்திருக்கிறார்கள். இந்த பாலத்தை கொண்டு வந்தது அ.தி.மு.க., என்று மக்கள் அறிவார்கள். வழக்கம் போல மு.க.ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி, தான் செய்தது போல காட்டுவது வேடிக்கை, நகைச்சுவை.
ஜனநாயகத்தை காக்க சர்வாதிகாரத்தை ஒழிக்க எல்லோரும் ஒன்று சேர வேண்டும். மு.க.ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார்.
அ.தி.மு.க. மாபெரும் கூட்டணியை அமைக்கும். அ.தி.மு.க. கூட்டத்தில் த.வெ.க.வினர் வந்தது கூட்டணிக்கு பிள்ளையார் சுழி என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். அதில் இருந்து நீங்களே புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 6 ஆயிரம் கனஅடியாக வந்தது.
இதையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று கனமழை பெய்து உள்ளது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- நேற்றும் தங்கம் புதிய உச்சத்தை தொட்டு இருந்தது.
- தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது.
சென்னை:
தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த மாதம் (செப்டம்பர்) 23-ந்தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை தாண்டிய நிலையில், தொடர்ந்து உயர்ந்து வந்து நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.91 ஆயிரம் என்ற நிலையையும் கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை உயர்வை கண்டது. காலையில் கிராமுக்கு ரூ.15-ம், சவரனுக்கு ரூ.120-ம், பிற்பகலில் கிராமுக்கு ரூ.25-ம், சவரனுக்கு ரூ.200-ம் அதிகரித்திருந்தது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 385-க்கும், ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 425-க்கும், ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. நேற்றும் தங்கம் புதிய உச்சத்தை தொட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 165 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 11,260 ரூபாய்க்கும்சவரனுக்கு 1.320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.90,080-க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில், இன்று கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 180 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
09-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,400
08-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,080
07-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,600
06-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,000
05-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
09-10-2025- ஒரு கிராம் ரூ.177
08-10-2025- ஒரு கிராம் ரூ.170
07-10-2025- ஒரு கிராம் ரூ.167
06-10-2025- ஒரு கிராம் ரூ.167
05-10-2025- ஒரு கிராம் ரூ.165
- தங்கத்தை விட அரிதானதும், விலை உயர்ந்ததுமாக இருந்தாலும், பிளாட்டினம் நகைகளின் பிரகாசம் தனித்தன்மை பெறுகிறது.
- சமீப காலங்களில் டங்ஸ்டன் ஆண்கள் மோதிரங்களுக்கு அதிகம் தேர்வு செய்யப்படுகிறது.
சென்னை:
ஆபரணங்கள் என்றால் நம் நினைவில் முதலில் தோன்றுவது தங்கமே. தமிழர் மரபிலும், இந்திய கலாசாரத்திலும் தங்கம் செல்வச்சின்னமாகவும், முதலீட்டாகவும், குடும்ப மரபின் அடையாளமாகவும் இடம்பிடித்துள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தங்கம் விலை நாள்தோறும் உயர்ந்து கொண்டிருப்பதால், சாதாரண மக்களுக்கு தங்க நகைகள் எட்டாக்கனியாகி விட்டன.
கடந்த 1970-ம் ஆண்டு ரூ.3.32க்கு விற்ற ஒரு கிராம் தங்கம் விலை தற்போது ரூ.11 ஆயிரத்து 500-ஐ தொட்டு இருக்கிறது. அதனால் ஏழை-எளிய மக்களால் தங்கத்தை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
எனவே விஞ்ஞானிகள் தங்கத்திற்கு மாற்றான விலை குறைவான ஒரு உலோகத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இது தொடர்பாக 4 உலகளவிலான ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டு உள்ளன. அதில் உள்ள தகவல்களில் 5 மாற்று உலோகங்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன.
அதன் விவரம் வருமாறு:-
பிளாட்டினம்:- தங்கத்தை விட அரிதானதும், விலை உயர்ந்ததுமாக இருந்தாலும், பிளாட்டினம் நகைகளின் பிரகாசம் தனித்தன்மை பெறுகிறது. தோலில் ஒவ்வாமை ஏற்படுத்தாது, நீடித்த தன்மை அதிகம். ஆனால் இது தங்கத்தை விட விலை உயர்வாக இருந்தாலும், மக்களுக்கு முதலீடாகவும் இருக்கும்.
பல்லேடியம்:- பிளாட்டினத்துடன் ஒருமித்த பண்புகள் கொண்டது. வெள்ளை நிறத்தோற்றம், எடை குறைவாக இருப்பதால் மோதிரங்கள், சங்கிலிகள் போன்றவற்றுக்கு ஏற்றது.
டைட்டானியம்:- இது மிகவும் இலகுவானாலும், வலிமை மிகுந்தது. ஒவ்வாமை ஏற்படாததால், நகைகளில் அதிகம் பயன்படுத்தலாம்.
டங்ஸ்டன்:- மிக வலுவானது; கீறல் எளிதில் வராது. சமீப காலங்களில் ஆண்கள் மோதிரங்களுக்கு அதிகம் தேர்வு செய்யப்படுகிறது.
வெள்ளி:- எளிமையான விலை காரணமாக பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், விரைவில் கருமை படர்வது ஒரு சவால்.
அதேபோல் தங்கத்தின் சிறப்பே அது பொன்னிறமாக மின்னுவதுதான். எனவே 'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்', டைட்டானியம் போன்ற மலிவு உலோகங்களுக்கு தங்க நிறம் தரும் டைட்டானியம் நைட்ரேட் பூச்சு போட்டு, உண்மையான தங்கம் போல தோற்றமளிக்க முடியும். வெள்ளி தங்கக்கலவையை நானோ அளவில் வடிவமைத்து, தேவையான வண்ணத்தையும், பிரகாசத்தையும் உருவாக்கலாம். இதனால், கலைரீதியான பல நிற ஆபரணங்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.
தோலில் ஒவ்வாமை ஏற்படுத்தாத டைட்டானியம், நையோபியம் போன்ற உலோகங்களை அடிப்படையாகக் கொண்டு நகைகள் தயாரிக்கலாம்.. இது தவிர ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்படும் தங்கம் தொடர்பான முயற்சிகளும் நடந்து வருகின்றன. இது உண்மையான தங்கத்துடன் வேறுபாடு இல்லாமல் இருந்தாலும், உற்பத்தி செலவு அதிகமுள்ளதால், வணிக ரீதியில் இன்னும் அமல்படுத்தவில்லை.
இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளன.
தங்கம் என்பது நம் பாரம்பரியம், நம்பிக்கை, முதலீடு ஆகியவற்றின் சின்னமாக இருப்பதால் அதை முற்றிலும் மாற்றுவது சாத்தியமில்லை. ஆனால், தினசரி அணிவதற்கான ஆபரணங்களில் டைட்டானியம், பல்லேடியம், பிளாட்டினம், டங்ஸ்டன் போன்ற உலோகங்களும், தங்கம் போல் தோற்றமளிக்கும் பூச்சுகளும் வருங்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கும். எனவே வருங்காலத்தில் நம்முடைய நகைக்கடைகளில் தங்கம் மட்டுமல்லாது, விஞ்ஞானிகள் பரிந்துரைக்கும் புதிய உலோகங்களும் பிரகாசமாக காட்சி அளிக்க போகிறது. எனவே தங்கம் இல்லாவிட்டாலும், அதற்கு இணையான வேறு ஆபரணங்களும் சந்தைக்கு வர இருக்கின்றன.
- கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம் ரூ.53 கோடி செலவில், 184 கடைகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது.
- உணவகங்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம் அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை, வில்லிவாக்கம், சிவசக்தி நகரில் வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம் கட்டப்பட்டு உள்ளது. இதனை அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம் ரூ.53 கோடி செலவில், 184 கடைகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது. உணவகங்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம் அமைக்கப்பட்டு உள்ளது.
11-ந்தேதி (நாளை) மாலை 6 மணிக்கு கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, வெற்றி அழகன் எம்.எல்.ஏ., சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர்-முதன்மைச் செயலாளர் பிரகாஷ், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் சுப்பையன், முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கமிஷனர் க.வீ.முரளிதரன், மாநகராட்சி மத்திய வட்டார துணை கமிஷனர் கவுசிக் உள்பட பலர் பங்கேற்றனர்.
- அவசர கதியில், எந்த ஒரு அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூர் சம்பவம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் வன்முறை தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். சிறிது நேரத்தில் அந்த பதிவை அகற்றிவிட்டார். ஆனால், இந்த பதிவின் அடிப்படையில் அவர் மீது சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆதவ் அர்ஜூனா மனு தாக்கல் செய்துள்ளார். அதில், எக்ஸ் தளத்தில் போடப்பட்ட பதிவை உடனடியாக நீக்கி விட்டேன். அந்த பதிவு போட்டதில் எனக்கு எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. ஆனால், எனக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரை முழுமையாக கவனிக்காமல், அவசர கதியில், எந்த ஒரு அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை ரத்து செய்யவேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த வழக்கை ரத்து செய்யவேண்டும்'' என்று கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
- சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பாக தேர்தல் கமிஷனுக்கு விண்ணப்பிக்கலாம்.
- சுயேச்சை பட்டியலில் இடம் பெற்றுள்ள சின்னங்களில் ஒன்றை த.வெ.க. தேர்வு செய்ய உள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில், மக்கள் சந்திப்பை முன்னெடுத்து வந்த த.வெ.க.வுக்கு கரூர் நிகழ்வு தீரா வலியை ஏற்படுத்தி விட்டது. அந்த சோக நிகழ்வில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக த.வெ.க. மீண்டு வருகிறது.
விரைவில் கருர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்க உள்ளார். இதற்காக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. போலீசார் அனுமதி கொடுக்கும் தேதி, நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்க உள்ளார்.
கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குகள் பாய்ந்துள்ளதால் முன்ஜாமீன் நடவடிக்கைகளும் தொடங்கி உள்ளது. மறுபக்கம் கட்சிப்பணிகளை தொடங்க மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் உத்தரவிட்டு இருக்கிறார். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்சி பணியாற்ற வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்களே இருக்கும் நிலையில், த.வெ.க.வுக்கு தேர்தல் சின்னம் பெறுவதற்கான நடவடிக்கையில் விஜய் இறங்கியுள்ளார். இதற்கான ஆலோசனை நடந்த வேளையில்தான் கரூர் துயர சம்பவம் அக்கட்சி நடவடிக்கைகளை புரட்டி போட்டு விட்டது. தற்போது மீண்டும் இந்த பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பொது சின்னம் பெறுவதற்கு சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பாக தேர்தல் கமிஷனுக்கு விண்ணப்பிக்கலாம். எனவே த.வெ.க. இந்த மாதம் கடைசி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் தேர்தல் கமிஷனிடம் சின்னம் தொடர்பாக விண்ணப்பிக்க உள்ளது.
த.வெ.க. முதலில் ஆட்டோ சின்னத்தை குறி வைத்திருந்தது. ஆனால் அந்த சின்னம் கேரளாவில் ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. எனவே சுயேச்சை பட்டியலில் இடம் பெற்றுள்ள சின்னங்களில் ஒன்றை த.வெ.க. தேர்வு செய்ய உள்ளது. பரிசீலனைக்காக 3 சின்னங்களை தேர்தல் கமிஷனுக்கு அனுப்ப வேண்டும், அதில் ஒன்றை விருப்ப தேர்வாக கொடுக்கலாம். அந்தவகையில் விசில், உலக உருண்டை, மைக், பேட் இதில் ஒன்றை த.வெ.க. தேர்வு செய்ய இருக்கிறது.
இதற்கிடையே கட்சியின் கட்டமைப்புகளை மேம்படுத்த 2-ம் கட்ட தலைவர்களை நியமிக்கும் பணியில் விஜய் தீவிரமாகியுள்ளார். விஜயின் இந்த நடவடிக்கை சோர்வாகி இருக்கும் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைய இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
- கூட்டத்தில் சிலர் த.வெ.க. கொடியுடன் கலந்து கொண்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
- இதனால் கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
சென்னை:
சென்னை சத்தியமூர்த்தி பவனில், முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலத்தின் 129-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அதன்பின், செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேகமான வளர்ச்சி பணிகளை முன்னெடுத்து வருகிறார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொழில்கள் தொடங்குவதற்கான அனுமதி வழங்குவதில் தாமதம் செய்கிறார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டம் அல்ல எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகம் கோப்புகளுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கூட்டத்தில் த.வெ.க. கொடியுடன் சிலர் கலந்து கொண்டதாகவும், இதனால் கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.
அவர் காண்பது கூட்டணி கனவு. அது பகல் கனவாகத்தான் இருக்கும். காங்கிரஸ் கூட்டத்திலும் த.வெ.க. கொடி பறக்கத்தான் செய்கிறது. அதற்காக நாங்களும் கூட்டணி கனவு காண முடியுமா? என தெரிவித்தார்.
- புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
- தபாங் டெல்லி அணியை பெங்கால் வாரியர்ஸ் அணி வீழ்த்தியது.
சென்னை:
12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று இரவு நடந்த முதல் ஆட்டத்தில் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 37-36 என்ற புள்ளிக்கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 41-39 என்ற புள்ளிக்கணக்கில் யுபி யோதாஸ் அணியை வீழ்த்தியது.
- ஆணவம் தெறிக்கும் திமுக அமைச்சரின் இந்தப் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
- எங்கள் பிள்ளைகளுக்கு ஒருநாள் கல்வி தேவையில்லை என முடிவு செய்வதற்குத் திமுக அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?
அரசுப் பள்ளியில் முகாம் நடைபெறுவதால் ஒரு நாளில் ஒன்றும் ஆகிவிடாது என்று அமைச்சர் துரைமுருகன் பேசியதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
திமுக தலைவர்களின் ஆணவம் அழிவிற்கான அறிகுறி!
திமுக அரசின் "உங்களுடன் ஸ்டாலின்" என்ற விளம்பர நாடகத்திற்காக அரசுப்பள்ளிகளின் வகுப்பறைகள் பறிக்கப்பட்டு, பிள்ளைகள் கொளுத்தும் வெயிலில் வெளியே அமர வைக்கப்படுவது குறித்து நாம் பல முறை கண்டித்துள்ளோம்.
இந்நிலையில் இதுகுறித்த பத்திரிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கு, "ஒரு நாளில் அப்படி ஒன்றும் பாடம் நடக்கப்போவதில்லை, ஒரு நாளில் பிள்ளைகளின் படிப்பிற்கு எந்த இடையூறும் வரப்போவதில்லை" எனக் கூறி அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனையும் மாணவர்களின் கற்றல் திறனையும் ஒருசேர அவமானப்படுத்தியுள்ளார் திமுக அமைச்சர் துரைமுருகன் அவர்கள். ஆணவம் தெறிக்கும் திமுக அமைச்சரின் இந்தப் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
அரசுப்பள்ளிகள் ஒருநாள் செயல்படவில்லை எனில் ஒன்றும் குடிமுழுகிப் போகாது என்ற தொனியில் ஒரு அரசு அமைச்சர் பொதுவெளியில் பேசுகிறார் என்றால், ஏழை எளிய பிள்ளைகளின் கல்வியின் மீது திமுகவினருக்கு எத்தனை அலட்சியம் இருக்க வேண்டும்? எங்கள் பிள்ளைகளுக்கு ஒருநாள் கல்வி தேவையில்லை என முடிவு செய்வதற்குத் திமுக அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?
ஒன்றுக்கும் உதவாத ஆளும் அரசின் விளம்பரங்களுக்காக அரசுப்பள்ளிகளை ஒருநாள் முடக்கும் திமுக அரசு, பலர் குடியைக் கெடுக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு ஒரு மணி நேரம் கூட விடுமுறை கொடுப்பதில்லையே ஏன்? இந்த டாஸ்மாக் மாடல் அரசுக்கு மது விற்பதைத் தவிர வேறு எதிலும் நாட்டமில்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? இந்த லட்சணத்தில் இவர்களுக்குக் "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்ற விளம்பரம் வேறு!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கரூரில் என்ன பூதமா உள்ளது? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
- கரூரில் விஜய் உயிருக்கு ஆபத்து உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர்,"கரூரில் என்ன பூதமா உள்ளது" என கேள்வி எழுப்பினார்.
கரூரில் விஜய் உயிருக்க ஆபத்து உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய நிலையில் அண்ணாமலை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
விஜய் கரூர் வருவதற்கு போலீசின் அனுமதி எதற்கு? யார் வேண்டுமானாலும் கரூர் வரலாம். கரூர் மக்கள் ரொம்ப அன்பானவர்கள். கரூரில் என்ன பூதமா உள்ளது
அதிமுகவும்- தவெகவும் வெவ்வேறு பாதையில் உள்ள கட்சிகள், பொறுத்திருந்து பார்ப்போம். விசிகவினர் திருமாவளவன் கண்முன்னரே ஒருவரை அடித்ததற்கு இதுவரை ஒரு எப்ஐஆர் கூட பதியப்படவில்லை.
விசிக தொண்டர்கள் நடந்து கொள்ளும் விதத்திற்கு திருமாவளவன் தான் பொறுப்பு. ஆதவ் அர்ஜூனாவை கட்சியை விட்டு அனுப்பிவிட்டு ஏன் இன்னும் திருமாவளவன் அவருடன் நட்பு பாராட்டுகிறார்?
ஆதவ் அர்ஜூனாவை தவெகவுக்கு அனுப்பி வைத்துவிட்டு திருமாவளவன் பாஜக மீது குறை கூறுவதா? கோவையில் பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் வைத்தததை வரவேற்கிறோம்.
ஆனால், எம்ஜிஆர், இரட்டைமலை சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை ஏன் வைக்கவில்லை?
இவ்வாறு அவர் கூறினார்.






