என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
    • 69 முருகன் கோவில்களின் திருப்பணிகளை முடித்து குட முழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது.

    பழனி:

    தமிழ் கடவுளான முருகபெருமானின் 3-ம் படை வீடான பழனியில் இன்று இந்து சமய அற நிலையத்துறை சார்பில் முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கியது.

    பழனியில் உள்ள பழனி யாண்டவர் கலைக்கல்லூரியில் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை முன்னிட்டு மாநாட்டு கொடியை ரத்தின கிரி தவத்திரு பாலமுருகன் அடிமை சுவாமிகள் ஏற்றி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கை அமைச்சர்கள் இ.பெரியசாமி, சேகர்பாபு, அர.சக்கரபாணி ஆகியோர் திறந்து வைத்தனர்.

    மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத் துலக முத்தமிழ் முருகன் மாநாடு மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

    செயல்பாபு என்று என்னால் அழைக்கப்படும் சேகர்பாபு அறநிலையத் துறை அமைச்சராக வந்த பிறகு இந்த துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாக எல்லோருடைய பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. கோவிலை கவனித்துக் கொள்ளுங்கள் என்று நான் அறநிலையத்துறையை அவரிடம் கொடுத்தேன். ஆனால் கோவிலிலேயே குடியிருக்கும் ஒருவர் உங்களுக்கு அமைச்சராக கிடைத்து உள்ளார்.

    நாள் தோறும் ஆன்மிக பெரியவர்கள், அறநிலையத்துறையையும், அமைச்சர் பி.கே.சேகர்பாபுவையும் பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

    இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. திட்டங்கள் செயல்படுத் தப்படுகிறது.

    நானும் பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளேன். அந்த வரிசையில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் ஆட்சி காலத்தில் நடந்த மக்கள் பணிகளை பார்த்து, குன்றக்குடி அடிகளாரும், திருமுருக கிருபானந்தவாரி யாரும் பாராட்டினார்கள்.

    இன்றைய ஆட்சியை நீங்கள் எல்லோரும் பாராட்டிக் கொண்டு இருக்கிறீர்கள். அதோட அடையாளம்தான் பழனியில் நீங்கள் எல்லோரும் கூடி இருப்பது.


    அந்த வகையில் பக்தர்கள் உள்பட அனைவரும் விரும்பும் ஆட்சியாக கழக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்ட உடனே அறநிலையத்துறை சார்பாக செய்யப்பட்டு வரும் பணிகளின் பட்டியலை தரச்சொல்லி அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்டேன். அதில் அவர் குறிப்பிட்டிருந்த பணிகளில் சிலவற்றை இங்கே குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    பழனி, திருத்தணி, திருச்செந்தூர், மருதமலை, குமாரவயலூர், சிறுவாபுரி, காந்தல் ஆகிய 7 முருகன் திருக்கோவில்களில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு வருகிற பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் பக்தர்கள் நலனை மனதில் வைத்து கோவிலில் வளர்ச்சி பணிகளை தொடங்கி இருக்கிறோம்.

    வளர்ச்சி திட்ட பணிகளுக்காக 58.77 ஏக்கர் நிலங்களை ரூ.58 கோடியே 54 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கி கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    அறுபடை வீடு முருகன் திருக்கோவில்களில் ரூ.789 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் 251 பணிகள் நடைபெற்று வருகிறது. அறுபடை வீடு அல்லாத முருகன் திருக்கோவில்களில் ரூ.277 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் 588 பணிகள் நடைபெற்று வருகிறது.

    69 முருகன் கோவில்களின் திருப்பணிகளை முடித்து குட முழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி கோவில் சார்பில் நடத்தும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் 4 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு கட்டணமில்லா காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு மதிய உணவும் வழங்கப்பட உள்ளது.

    பழனி திருக்கோவிலுக்கு தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் திருவிழாக்களுக்கு பாத யாத்திரை வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பழனி தண்டாயுதபாணி கோவில் திருக்கோவிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்று துறை நிலையிலான ஓய்வூதியம் வாங்குகிற 258 ஓய்வூதியர்களுக்கு நபர் ஒருவருக்கு ஓய்வூதியம் ரூ.3000 வழங்கப்பட்டு வந்ததை ரூ.4000 ஆக உயர்த்தியும், 54 குடும்ப ஓய்வூதியர்களுக்கு ரூ.1500 வழங்கப்பட்டதை 2000 ரூபாயாக உயர்த்தியும் வழங்கி வருகிறோம்.


    2024-ம் ஆண்டு அறுபடை வீடு ஆன்மீக சுற்றுப் பயணத்துக்காக 1000 பக்தர்கள் அழைத்து செல்லப்படுவாார்கள் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இதுநாள் வரை 813 நபர்கள் பயன் அடைந்துள்ளனர்.

    எல்லா திருக்கோவில்களிலும் பக்தர்களுக்கு கட்டண மில்லா முடி காணிக்கை செலுத்தும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முடி காணிக்கை பணியாளர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

    தவில், நாதசுவர கல்லூரி, அர்ச்சகர் மற்றும் வேதஆகம பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ஊக்கத் தொகையாக ரூ.3000 வழங்கப்பட்டு வந்ததை 24.11.2023 முதல் ரூ.4000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

    பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியம் அடிப்படையில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணிபுரிந்த 13 பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    இந்த திருக்கோவில்களில் பணிபுரிந்து பணி காலத்தில் மறைவு எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 8 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    இதுவரை திருக்கோவில்களில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் பணி புரிந்து வந்த 1298 பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். 111 பணியாளர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    திருக்கோவில் பணியாளர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்குதல, ஊக்கத் தொகை உயர்வு செய்தல், தினக்கூலி மற்றும் தொகுப்பூ தியத்தில் பணிபுரிந்த 1298 பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டது. ஓய்வூதியாரர்களுக்கு தொகை உயர்வும் வழங்கப்பட்டு இருக்கிறது. இப்படி வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.

    ஏதோ திடீரென்று பழனியில் மாநாடு நடத்தவில்லை. இப்படிப்பட்ட பணிகளை செய்து கொண்டுதான் பழனியில் இந்த மாநாட்டை இந்து சமய அறநிலையத்துறை நடத்துகிறது.

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கைகள் இருக்கும். அதில் உயர்வு தாழ்வு இல்லை. அந்த நம்பிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு எப்போதும் தடையாக இருந்தது இல்லை. அது மட்டுமல்ல அனைவரது நம்பிக்கைக்கும் நன்மை செய்து தரக்கூடிய அரசாகவும் செயல்பட்டு வருகிறது.

    திராவிட மாடல் என்பது எல்லாருக்கும் எல்லாம் என்ற கருத்தியலை அடிப்படையாக கொண்டது. அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என்று விளக்கிக் கொண்டு வருகிறோம். அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறையையும் மிக சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறோம்.

    தி.மு.க.வின் தாய் அமைப்பான நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான் பழுத்த ஆத்திகரான அன்றைய முதலமைச்சர் பனகல் அரசால் இந்து சமய அறநிலைய பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. பண்பாட்டு சின்னங்களான கோவில்கள் முறையாக பாதுகாக்கப்பட வேண்டும். முறையாக செயல்படும் என்ற நோக்கத்துடன் அந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.

    இன்று சீரோடும் சிறப்போடும் கோவில்கள் இயக்க அடித்தளம் அமைத்தது அந்த சட்டம்தான். கடந்த 3 ஆண்டு காலத்தில் 1355 திருகோவில்களில் குடமுழுக்கு விழாக்கள், ரூ.3776 கோடியில் 8436 திருக்கோவில்களில் திருப்பணிகள், ரூ.50 கோடியில் கிராமப்புற ஆதிராவிடர் கோவில்களில் திருப்பணிகள் நடத்தி இருக்கிறோம். ரூ.62 கோடியே 76 லட்சம் ரூபாயில் 27 திருக்கோவில்களில் ராஜ கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.80 கோடியே 50 லட்சத்தில் பழனி, இடும்பன்மலை, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் கோவில்களில் கம்பிவட ஊர்திகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ரூ.5577 கோடி மதிப்புடைய 6140 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 756 திருக்கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. தினந்தோறும் 82 ஆயிரம் பேர் உணவு உண்டு வருகிறார்கள்.

    கோவில் சொத்துக்களை அளவிடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 507 ஏக்கர் நிலங்கள் நவீன ரோபர் கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு 64522 கற்கள் நடப்பட்டு உள்ளன.

    4189 ஏக்கர் நிலம் மீண்டும் கோவில் பெயரில் பட்டா செய்யப்பட்டுள்ளது. இப்போது நான் சொன்னதெல்லாம் மிகவும் குறைவு.

    நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளை இந்து சமய அறநிலையத் துறை மூலமாக ஒரு புத்தகமாகவே போடப்பட்டு இருக்கிறது. அதில் இருக்கும் சிலவற்றை தான் நான் இப்போது சொல்லி இருக்கிறேன். அந்த புத்தகத்தை நீங்கள் எல்லோரும் வாங்கி படிக்க வேண்டும். ஊடக துறையை சேர்ந்த நண்பர்களும் இந்த சாதனையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

    அந்த சானைகளுக்கு மகுடம் வைத்தது போல பழனியில் நடக்கும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் மட்டுமல்ல தமிழ்நாடு ஆன்மிக வரலாற்றிலேயே மிக சிறப்பான இடத்தை பெறும்.

    நீதியரசர்கள், மகாசன்னி தானங்கள், ஆன்மிக பெரியவர்கள், சமய சொற்பொழிவாளர்கள், தமிழ் இலக்கிய அறிஞர்கள், புலவர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்கள், இசைக் கலைஞர்கள், நாட்டிய கலைஞர்கள், பாடகர்கள் என பல்துறை அறிஞர்கள் பழனியில் சங்கமிக்கிற இந்த மாநாட்டுக்கு எனது வாழ்த்துக்கள்.

    ஆலய வழிபாடுகளில் தமிழ்மொழி முதன்மை பெற வேண்டும். திருக்கோவில் கருவறைக்குள் மனிதருக்கு இடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவ வேண்டும். அன்பால் உயிர்கள் ஒன்றாகும், அறத்தால் உலகம் நன்றாகும்.

    மாநாட்டில் தர்மபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலா மணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞானபாலய சுவாமிகள், சிரவை ஆதீனம் குமரகுரு பரசு வாமிகள, ரத்தினபுரி பாலமுருகனடிமை சுவாமிகள் ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.

    இலங்கை கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டைமான், லண்டன் துணை மேயர் பரம்நந்தா, மலேசிய முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்றை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் மொ.நா.பூங்கொடி, கூடுதல் ஆணையர் இரா.சுகுமார், உயர்நீதி மன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், சுரேஷ்குமார், வேல்முருகன், புகழேந்தி, சிவஞானம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    மாநாட்டில் முருகனின் சிறப்புகளை விளக்கும் வகையில் கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் வேல், சிவலிங்கம், அறுபடை வீடுகளில் உள்ள முருகனின் திருக்காட்சிகள், மெய்நிகர் காட்சிகள், முப்பரிமண பாடலங்கம், சிறப்பு புகைப்பட கண்காட்சி, ஆய்வரங்கங்கள் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

    கல்தூண் வடிவம் போன்று இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் அனைத்தையும் சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியை சேர்ந்த சிற்பகலைஞர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக உருவாக்கி அழகு படுத்தினர்.

    கண்காட்சியில் முருகனின் பல்வேறு திருப்பெயர்கள், முருகன் பெயரில் உள்ள பெண்களுக்கான தமிழ் பெயர்கள், தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள முருகனின் கோவில்கள் குறித்த விவரங்கள், முருகனின் படைக்கலங்கள் உள்ளிட்ட அரிய தகவல்கள் வண்ண ஓவியங்களுடன் இடம்பெற்றுள்ளன.

    மாநாட்டின் நிறைவு விழாவில் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் நக்கீரர், போகர், அருணகிரிநாதர், குமரகுருபரர், பாம்பன் சுவாமிகள். அண்ணாமலை ரெட்டியார், முருகம்மையார், பாலதேவராயர், திருமுருக கிருபானந்த வாரியார், தேனூர் வரகவி சொக்கலிங்கனார், கந்தபுராணக் கச்சியப்பர், பகழிக்கூத்தர், சிதம்பர சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், மாம்பழக் கவிச்சிங்க நாவலர் என 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது.

    மாநாட்டின் இரண்டு நாட்களும் ஆன்மிக சொற்பொழிவுகள், கருத்தரங்கம், இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் இம்மாநாடு முத்தாய்ப்பாக அமைவதோடு, தமிழ் கடவுளாம் முருக பெருமானின் பெருமைகளை மென் மேலும் பறைசாற்றி, உலகெங்கும் உள்ள முருக பக்தர்கள் பெருமையும், பேருவகையும் கொள்ளச் செய்யும் வகையில் இன்றும், நாளையும் சிறப்பாக நடைபெறும்.

    • தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக உள்ளது.
    • அரசு ஆஸ்பத்தி ரிகளில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. காலநிலை மாற்றத்தால் பரவலாக மழை பெய்து வருவதால் சளி, இருமல், கை-கால் வலியுடன், காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.

    ஒரு சிலருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.

    கடந்த ஆண்டை ஒப்பிடும் போது பெரிய அளவில் டெங்கு பாதிப்பு தமிழகத்தில் இல்லை என்றாலும் வருகின்ற பருவமழை காலத்தில் டெங்கு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என சுகாதாரத்துறை கருதுகிறது. அதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழகம் முழுவதும் தொடங்கி கண்காணிக்கப்படுகிறது.

    இதுகுறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக உள்ளது. 30 முதல் 50 பேர் வரை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். பரவலாக டெங்கு பாதிப்பு இருந்தாலும் உயிரிழப்பு பெரிய அளவில் இல்லை. காய்ச்சல், உடல் சோர்வு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இல்லை. ராஜீவ்காந்தி, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்தி ரிகளில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.


    ஆனால் டெங்கு பாதிப்பு குறிப்பிடும் படியாக இல்லை என்று மருத்துவ மனை முதல்வர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி பொது மருத்துவத் துறை தலைவர் சந்திரசேகர் கூறியதாவது:-

    வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் தான் அதிகளவில் வருகிறார்கள். டெங்கு காய்ச்சல் 5 நாட்கள் இருந்து பின்னர் படிப்படியாக குறையும். காய்ச்சல் குறைந்து விட்டது என்று அலட்சியமாக இருக்க கூடாது. அந்த நேரத்தில் தான் வாந்தி, வயிற்று வலி போன்றவை ஏற்பட்டு உடலில் தட்டணுக்கள் குறைய தொடங்கும்.

    எனவே தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பு இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சீதோஷ்ண நிலை மாறி மாறி நிலவுவதால் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    டெங்குவை பொறுத்த வரை காய்ச்சல் வந்தவுடன் சிகிச்சை பெற்று கண்காணிப்பில் இருந்தால் பாதிப்பை ஏற்படுத்தாது. பருவமழை காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை தான் டெங்குவின் தாக்கம் அதிகரிக்கும்.

    வீட்டை சுற்றிலும் சுத்தமாக வைத்திருந்தால் டெங்கு பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். பகலில் கடிக்கும் 'ஏடீஎஸ்' கொசுக்கள் தான் டெங்கு காய்ச்சல் உண்டாக்குகிறது. வீடுகளையும், சுற்று புறங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சம்போ செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக மொட்டை கிருஷ்ணன் என்ற வழக்கறிஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • இயக்குநர் நெல்சனிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பிரபல ரவுடிகளான சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதில் சம்போ செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கிருஷ்ணகுமார் என்கிற மொட்டை கிருஷ்ணன் என்ற வழக்கறிஞரையும் போலீசார் தேடி வருகின்றனர். அவர் மலேசியா தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

    அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த பலரையும் போலீசார் அடுத்தடுத்து விசாரித்து வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க சர்வதேச போலீஸ் உதவியுடன் சம்போ செந்திலுக்கு சென்னை போலீஸ் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். ஏற்கனவே சம்போ செந்திலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    மொட்டை கிருஷ்ணன் தொடர்பாக இயக்குநர் நெல்சனின் மனைவி வழக்கறிஞர் மோனிஷாவிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மொட்டை கிருஷ்ணனும் இயக்குநர் நெல்சனின் மனைவியும் கல்லூரி காலத்தில் இருந்து நண்பர்கள் என்பதால் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    மொட்டை கிருஷ்ணனுடன் இயக்குநர் நெல்சன் மனைவி தொடர்ந்து செல்போனில் பேசிவந்த நிலையில் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி மொட்டை கிருஷ்ணன் குறித்து திரைப்பட இயக்குநர் நெல்சனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    சம்மன் கொடுக்கப்பட்ட நிலையில் அடையாறில் உள்ள நெல்சன் வீட்டிற்கு சென்ற தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மொட்டை கிருஷ்ணன் குறித்து இயக்குநர் நெல்சனிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

    கன்னியாகுமரி:

    பாராளுமன்ற உறுப்பினர் விஜய வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

    இன்று கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க வருகிறேன். உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

    • விஜயகாந்த் பிறந்து 71 ஆண்டுகள் இன்று நிறைவடைவதை ஒட்டி 71 நபர்களுக்கு டாட்டூ போட்டு உலக சாதனை நிகழ்வு நடைபெற உள்ளது.
    • கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் என 71 பேருக்கு டாட்டூ போடுகின்றனர்.

    சென்னை:

    விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. 

    இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

    விஜயகாந்த் பிறந்து 71 ஆண்டுகள் இன்று நிறைவடைவதை ஒட்டி 71 நபர்களுக்கு டாட்டூ போட்டு உலக சாதனை நிகழ்வு நடைபெற உள்ளது.

    71 பேருக்கு 71 நிமிடங்களில் விஜயகாந்த் முகத்தை டாட்டூ போட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட உள்ளது.

    கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் என 71 பேருக்கு 71 டாட்டூ கலைஞர்கள் ஒரே நேரத்தில் 71 நிமிடத்தில் டாட்டூ போடுகின்றனர்.

    டாட்டூ போடும் நிகழ்ச்சியை பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைக்க உள்ளார்.

    • மேட்டூர் அணை இந்தாண்டில் 2-வது முறையாக நிரம்பியது.
    • டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைய தொடங்கியது.

    சேலம்:

    கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வந்ததால் மேட்டூர் அணை கடந்த 30-ந் தேதி நிரம்பியது. பின்னர் நீர்வரத்தை விட அதிகளவில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது.

    இதற்கிடையே நீர்வரத்து மீண்டும் அதிகரித்ததன் காரணமாக மேட்டூர் அணை இந்தாண்டில் 2-வது முறையாக நிரம்பியது. அப்போது அதிகபட்சமாக வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. பின்னர் மீண்டும் நீர்வரத்து குறைந்தது. ஆனாலும் டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைய தொடங்கியது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 118.75 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 467 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 700 கனஅடியும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    • பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    • கழிப்பறைகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

    வடவள்ளி:

    கோவை வடவள்ளி அடுத்த சோமையம்பாளையம் அருகே உள்ள காளம்பாளையத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 2500-த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளது.

    இந்த நிலையில் சென்னையில் உள்ள பள்ளி முதல்வரின் இ மெயிலுக்கு ஒரு குறுந்தகவல் வந்திருந்தது.

    அதில் கோவையில் உள்ள உங்கள் பள்ளியின் வகுப்பறை மற்றும் கழிப்பறைகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் உடனடியாக இந்த சம்பவம் குறித்து கோவையில் உள்ள பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கோவை பள்ளியின் முதன்மை மேலாளர் ஜீவரத்தினம் என்பவர் வடவள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார், மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் தனியார் பள்ளிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தன.

    உடனடியாக போலீசார் மாணவர்களை வகுப்பறைகளை விட்டு வெளியேற்றி விட்டு சோதனை மேற்கொண்டனர். பள்ளியில் உள்ள கழிப்பறைகளிலும் சோதனை செய்தனர்.

    ஆனால் அங்கு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்தே வெடிகுண்டு மிரட்டல் போலி என தெரிய வந்தது.

    இதன் பின்னரே அனைவரும் நிம்மதி அடைந்தனர். பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து பள்ளியின் முதன்மை மேலாளர் ஜீவரத்தினம் அளித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இ-மெயில் வந்த முகவரியை வைத்து, அந்த நபர் யார்? என கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அடிக்கடி டெல்லி சென்று வருகிறார்.
    • தமிழக அரசியல் நிலவரங்கள் பற்றி அவர் விவாதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அடிக்கடி டெல்லி சென்று வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் டெல்லி சென்று திரும்பிய அவர் இன்று காலையில் மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

    சென்னையில் இருந்து இன்று காலை 6.40 மணிக்கு புறப்பட்ட விகாஷா விமானத்தில் டெல்லி சென்றுள்ள கவர்னர் தனிப்பட்ட முறையிலேயே டெல்லி சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் மத்திய மந்திரி அமித்ஷாவை கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    அப்போது தமிழக அரசியல் நிலவரங்கள் பற்றி அவர் விவாதிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு கவர்னர் ஆர்.என்.ரவி நாளை இரவு 8.20 மணிக்கு சென்னை திரும்ப உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 3.50 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் வானில், 80 கி.மீ. உயரே பறக்கக்கூடிய திறன் உடையது.
    • 3 செயற்கை கோள்களையும் பூமியிலிருந்து அதிகபட்சம் 80 கி.மீ. நிலைநிறுத்திவிட்டு ரூமி ராக்கெட் பூமிக்கு திரும்பி விடும்.

    தமிழ்நாட்டைச் சேர்த்த ஸ்டார்ப் நிறுவனமான ஸ்பேஸ் ஸோன் இந்தியா [Space Zone India] மார்ட்டின் குரூப் குழுமத்துடன் இணைத்து மறுபயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் 'மிஷன் ரூமி 2024' திட்டத்தின் கீழ் RHUMI 1 என்ற ராக்கெட்டை உருவாக்கி உள்ளது.


    இதுவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ரீயூசபிள் ஹைப்ரிட் ராக்கெட் ஆகும். ஹைட்ராலிக் மொபைல் லாஞ்ச்பேடில் இருந்து இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டிற்கான ராக்கெட் சென்னை ஈசிஆர் கடற்கரையில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. மிஷன் ரூமி ராக்கெட்டில் உள்ள செயற்கைகோள்கள் சுற்றுச்சூழல் செயல்பாடுகள் பற்றி புரிதலை ஏற்படுத்தும்.

    3.50 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் வானில், 80 கி.மீ. உயரே பறக்கக்கூடிய திறன் உடையது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டால், ஒரே ராக்கெட்டை பயன்படுத்தி, பல முறை செயற்கைக்கோளை ஏவலாம். இதனால் செலவு மிச்சமாகும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.


    3 செயற்கை கோள்களையும் பூமியிலிருந்து அதிகபட்சம் 80 கி.மீ. நிலைநிறுத்திவிட்டு ரூமி ராக்கெட் பூமிக்கு திரும்பி விடும். வழக்கமான செயற்கைகோள்களை குறிப்பிட்ட சுற்றுவட்டப்பாதையில் செலுத்தியவுடன் ராக்கெட்டின் ஆயுட்காலம் முடிந்துவிடும்.

    மிஷன் ரூமி ராக்கெட் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்திய பின் பூமிக்கு திரும்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 3 ஆண்டில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
    • 4181 ஏக்கர் நிலம் மீண்டும் கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * நீதிக்கட்சி ஆட்சியில்தான் இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

    * பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. திமுக ஆட்சியை பக்தர்கள், ஆன்மீகப் பெரியவர்கள் பாராட்டி வருகின்றனர்.

    * கடந்த 3 ஆண்டில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

    * பழனி, இடும்பன் மலை உள்ளிட்ட பகுதிகளில் ரோப் கார் சேவை அமைக்கப்பட்டுள்ளது.

    * அறுபடை வீடுகளுக்கு இதுவரை 813 பக்தர்கள் அரசு சார்பில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

    * 1,355 திருக்கோவில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 8,436 கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    * 756 திருக்கோவில்களில் நாள்தோறும் அன்னதானம் திட்டத்தில் நாளொன்றுக்கு 82,000 பேர் உணவருந்துகின்றனர்.

    * 4181 ஏக்கர் நிலம் மீண்டும் கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    * அறநிலையத்துறை சார்பாக செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களும் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளது.

    * ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும்.

    * கோவில் கருவறையில் சமத்துவம் காட்டப்பட வேண்டும்.

    * அன்பால் உலகம் ஒன்றாகும், அறத்தால் உலகம் நன்றாகும் என்று கூறினார்.

    • அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு வந்த பின்னர் சிறப்பாக செயல்படுகிறது.
    • அறுபடை வீடு சுற்றுலாவிற்கு 813 பேர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * இன்றும் நாளையும் முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் நடைபெறுகிறது.

    * அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு வந்த பின்னர் சிறப்பாக செயல்படுகிறது. அறநிலையத்துறை சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    * 7 முருகன் கோவில்களில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    * அறுபடை வீடு முருகன் கோவில்களில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

    * பழனி கோவிலில் தை பூசம், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நடைபயணம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    * அறுபடை வீடு சுற்றுலாவிற்கு 813 பேர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

    * பல்வேறு திருக்கோவில்களில் பணிகளை மேற்கொண்ட பின்னரே முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படுகிறது.

    * முத்தமிழ் முருகன் மாநாட்டு ஏற்பாடுகளை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செய்துள்ளார்.

    * கோவிலை சிறப்பாக கவனிக்குமாறு சேகர்பாபுவை நியமித்தேன். ஆனால் கோவிலிலேயே குடியிருக்கும் அமைச்சராக உள்ளார்.

    * 69 முருகன் திருக்கோவில்களில் பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

    * அறுபடை வீடுகளில் ரூ.789 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    * அறுபடை வீடுகளுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கூடுதல் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

    * அறுபடை வீடுகள் அல்லாத முருகன் கோவில்களில் ரூ.277 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

    • தங்கத்தின் விலை நேற்று ரூ.53,280-க்கு விற்பனையான
    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,695-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில வாரமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.53,280-க்கு விற்பனையானது.

    இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,695-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ×