என் மலர்
ராஜஸ்தான்
- மொத்தம் 90 நாட்கள் அவர் அங்கு தங்கியிருந்தார்.
- முக்கியமான தகவல்களைச் சேகரிக்க ஏதுவாக இது அமைந்தது.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சார்பாக உளவு பார்த்த குற்றச்சாட்டில் ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காசிம் என்ற நபரை டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு கைது செய்தது.
ராஜஸ்தானின் மேவாட் பகுதியில் உள்ள டீக் பகுதியில் காசிம் கைது செய்யப்பட்டார்.
அதிகாரிகள் அளித்த தகவலின்படி, காசிம், ஆகஸ்ட் 2024 இல் ஒரு முறையும், மார்ச் 2025 இல் மீண்டும் ஒரு முறையும் பாகிஸ்தானுக்குச் சென்றார்.
மொத்தம் 90 நாட்கள் அவர் அங்கு தங்கியிருந்தார். இந்த பயணத்தின்போது, அவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ முகவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளிடமிருந்து உளவுப் பயிற்சி பெற்றார்.
மேலும் விசாரணையில் காசிம் இந்திய சிம் கார்டுகளை பாகிஸ்தானுக்கு அனுப்பி வருவது தெரியவந்தது.
பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் வாட்ஸ்அப் மூலம் இந்தியர்களைத் தொடர்பு கொண்டு ராணுவம் மற்றும் அரசாங்கத்தின் முக்கியமான தகவல்களைச் சேகரிக்க ஏதுவாக இது அமைந்தது என்று போலீசார் தெரிவித்தனர்
- பர்மால் என்ற ஒரு மன்னன் இருந்தான். அவனுடைய வேலைக்காரியின் மகளை தான் அக்பருக்கு திருமணம் செய்து வைத்தான்.
- புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம், எதிர்கால சவால்களுக்கு புதிய தலைமுறையினரை தயார்படுத்துவோம்.
இந்து இளவரசி ஜோதா பாய் மற்றும் முகலாயப் பேரரசர் அக்பரின் திருமணம் என்று ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பகடே கூறியுள்ளார்.
உதய்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பகடே, "ஜோதாவும் அக்பரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு படம் கூட எடுக்கப்பட்டது.
வரலாற்றுப் புத்தகங்களும் அதையே சொல்கின்றன. ஆனால் அது ஒரு பொய். அக்பர்நாமாவில் இருவரும் திருமணம் செய்து கொண்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. பர்மால் என்ற ஒரு மன்னன் இருந்தான். அவனுடைய வேலைக்காரியின் மகளை தான் அக்பருக்கு திருமணம் செய்து வைத்தான்.
ஆங்கிலேயர்கள் நமது மாவீரர்களின் வரலாற்றை மாற்றி எழுதினர். அவர்கள் வரலாற்றை சரியாக எழுதவில்லை. முதலில் எல்லோரும் அதை ஏற்றுக்கொண்டனர். பின்னர், இந்தியர்கள் வரலாற்றை எழுதினர். அந்த வரலாற்றிலும் ஆங்கிலேயர்களும் செல்வாக்கு செலுத்தினர். வரலாற்றில், பெரும்பாலானவை அக்பரைப் பற்றி தான் உள்ளது. மகாராணா பிரதாப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம், எதிர்கால சவால்களுக்கு புதிய தலைமுறையினரை தயார்படுத்துவோம். அதனுடன், நமது கலாச்சாரத்தையும் வரலாற்றையும் பாதுகாப்போம்.
1569 ஆம் ஆண்டு அக்பருக்கும் அமர் ஆட்சியாளர் பர்மலின் மகள் ஜோதாவுக்கும் நடந்த திருமணத்தை ஆளுநர் மறுத்துள்ளது விவாதப்பொருளாக மாறியுள்ளது.
- இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டது.
- இந்த அணியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கருண் நாயர் இடம் பிடித்துள்ளார்.
ஜெய்ப்பூர்:
அடுத்த மாதம் நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில்லும், துணை கேப்டனாக ரிஷப் பண்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய டெஸ்ட் அணியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கருண் நாயர் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், டெஸ்ட் அணியில் இடம்பிடித்தது தொடர்பாக கருண் நாயர் கூறியதாவது:
மீண்டும் வந்ததற்கு நன்றி. மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும், அதிர்ஷ்டமாகவும் இருக்கிறேன். நீங்கள் அனைவரும் அறிந்தது போலவே நானும் இதை அறிந்தேன். அழைப்புக்காக ஆவலுடன் காத்திருந்தேன். நெருங்கியவர்களிடமிருந்து நிறைய செய்திகள் வந்தன.
உண்மையிலேயே மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. கடந்த 12-16 மாதங்களாக நான் நன்றாக பேட்டிங் செய்து வருகிறேன். இது எனது செயல்முறைகளை அப்படியே வைத்திருப்பது மற்றும் எனக்கு வேலை செய்த அதே விஷயங்களைச் செய்வது பற்றியது என தெரிவித்தார்.
- டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 206 ரன்கள் எடுத்தது.
ஜெய்ப்பூர்:
ஐ.பி.எல். தொடரின் 66-வது லீக் போட்டி ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயஸ் அய்யர் அரை சதம் கடந்து 53 ரன்னில் அவுட்டானார்.
கடைசி கட்டத்தில் இறங்கிய ஸ்டோய்னிஸ் 16 பந்தில்44 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. கே.எல்.ராகுல் 35 ரன்னும், டூ பிளசிஸ் 23 ரன்னும் எடுத்தனர். கருண் நாயர் 27 பந்தில் 44 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.
சமீர் ரிஸ்வி 22 பந்தில் அரை சதம் கடந்தார்.
இறுதியில், டெல்லி அணி 19.3 ஓவரில் 208 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சமீர் ரிஸ்வி 58 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- டாக்டரின் பரிந்துரைப்படி, ரத்த வங்கியில் இருந்து ‘ஏ பாசிட்டிவ்’ வகை ரத்தம் பெறப்பட்டு, சைனாவுக்கு ஏற்றப்பட்டது.
- சைனாவின் ரத்தவகை ‘பி பாசிட்டிவ்’ என்பதும், ரத்தவகை மாற்றி ஏற்றப்பட்டதால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தை சேர்ந்தவர் சைனா (வயது 23). கர்ப்பிணியாக இருந்த இவர், குறைந்த அளவு ரத்தப்புரதம் (ஹீமோகுளோபின்) காரணமாகவும், காசநோய் காரணமாகவும் உடல் நலம் குன்றி இருந்தார். இதற்காக ஜெய்ப்பூரில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியான சவாய் மான் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அங்கு கர்ப்பிணி சைனாவுக்கு ரத்தப்பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. ரத்தப்பரிசோதனை முடிவில் அவரது ரத்த வகை 'ஏ பாசிட்டிவ்' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
டாக்டரின் பரிந்துரைப்படி, ரத்த வங்கியில் இருந்து 'ஏ பாசிட்டிவ்' வகை ரத்தம் பெறப்பட்டு, சைனாவுக்கு ஏற்றப்பட்டது. பின்னர் திடீரென்று சைனாவுக்கு கடுமையான காய்ச்சல், குளிர், ரத்தக்கசிவு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்ட அவருக்கு, மீண்டும் ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவரது ரத்தவகை 'பி பாசிட்டிவ்' என்று வந்தது.
இதையடுத்து டாக்டர்கள் நடத்திய மறு பரிசோதனையில், சைனாவின் ரத்தவகை 'பி பாசிட்டிவ்' என்பதும், ரத்தவகை மாற்றி ஏற்றப்பட்டதால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது. இதனிடையே உடல்நிலை மிகவும் மோசம் அடைந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சுவாதி ஸ்ரீவத்சவா கூறுகையில், 'நான் அவரை பரிசோதித்து விட்டு, அவருக்கு சில சிகிச்சைகளுக்கு பரிந்துரை செய்தேன். பின்னர் விடுப்பில் இருந்ததால் என்ன நடந்தது என்பது தெரியாது. இருப்பினும் மற்றவர்களிடம் விசாரித்தபோது, அவருக்கு ரத்தவகை மாற்றி ஏற்றப்பட்டது தெரியவந்தது. ஏற்கனவே கடுமையான காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாலும், அவரது வயிற்றில் இருந்த சிசுவும் இறந்துவிட்டதாலும் அவரது உடல் மிகவும் சிக்கலான நிலைக்கு சென்றுவிட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி உயிரிழந்துவிட்டார், என்று கூறினார்.
அதேநேரம் இதுபற்றி சைனாவின் உறவினர் பிரேம் பிரகாஷ் கூறுகையில், ரத்தம் மாற்றி ஏற்றப்பட்டது குறித்து டாக்டர்கள் எங்களிடம் எதுவும் கூறவில்லை. ஆஸ்பத்திரியின் அலட்சியத்தால் நடந்ததுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
இருப்பினும் இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.
- ஒரு பயனர், "பக்கோடாவை ஸ்ரீ-ஓடா என்று மாற்றுவீர்களா?" என வினவியுள்ளார்.
- "பாக்" என்ற வார்த்தை கன்னட வார்த்தையான "paaka" என்பதிலிருந்து வந்தது.
பஹல்காம் தாக்குதல், பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் ஆகியவை நாட்டு மக்களிடம் தேசிய உணர்வை கிளர்த்தியுள்ளது. இதன் விளைவாக பாகிஸ்தான் மீதான மக்களின் கோபம் பல்வேறு வகையில் வெளிப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இனிப்புக் கடை உரிமையாளர்கள், பாரம்பரிய இந்திய இனிப்புப் பெயர்களில் இருந்து "பாக்" என்ற வார்த்தையை நீக்க முடிவு செய்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, மோதி பாக், ஆம் பாக், கோண்ட் பாக் மற்றும் மைசூர் பாக் போன்ற இனிப்புகள் மோதி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ, கோண்ட் ஸ்ரீ மற்றும் மைசூர் ஸ்ரீ என மறுபெயரிடப்பட்டுள்ளன. அதவாது, "பாக்" என்ற பின்னொட்டு "ஸ்ரீ" என்று மாற்றப்பட்டுள்ளன. ஆனால் இது தேவையற்றது என பல நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு பயனர், "பக்கோடாவை ஸ்ரீ-ஓடா என்று மாற்றுவீர்களா?" என வினவியுள்ளார். மற்றொரு பயனர், "பாக்" என்ற வார்த்தை கன்னட வார்த்தையான "paaka" என்பதிலிருந்து வந்தது என்று தெரிவித்தார்.
இதன் பொருள் "இனிப்பு சுவையூட்டி ". இது இந்தி வார்த்தையான "paag" மற்றும் சமஸ்கிருத வார்த்தையான "pagva" ஆகியவற்றுடன் வேர்களைப் பகிர்ந்து கொள்கிறது என்று அந்த பயனர் தெரிவித்தார்.
- ரூ.1,100 கோடி செலவில் ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன.
- கர்னிமாதா கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
பிகானேர்:
இந்தியா முழுவதும் 103 ரெயில் நிலையங்கள் அமிர்த நிலையங்களாக அறிவிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு வசதிகளுடன் ரூ.1,100 கோடி செலவில் இந்த ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இந்த ரெயில் நிலையங்களில் நுழைவு வாசல் மற்றும் வெளியேறும் வாசல் தனித்தனியாக உருவாக்கப்பட்டுள்ளன. வாகனம் நிறுத்தும் வசதி, மின் தூக்கி, பயணிகள் காத்திருக்கும் பகுதி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் சென்னை பரங்கிமலை, சாமல்பட்டி, சிதம்பரம், திருவண்ணாமலை, மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாச்சலம், போளூர், குளித்துறை ஆகிய 9 ரெயில் நிலையங்கள் இந்த திட்டத்தின் கீழ் சீரமைப்பு மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த 103 ரெயில் நிலையங்களையும் பிரதமர் மோடி இன்று ராஜஸ்தானில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதற்காக இன்று காலை அவர் ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்றார். அங்கு வடமேற்கு பகுதியில் உள்ள தார் பாலைவனம் மண்டலத்தில் இருக்கும் பிகானேர் மாவட்டத்திற்கு சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
முதலில் அவர் பாகிஸ்தான் எல்லைக்கு மிக மிக அருகில் உள்ள நல் விமானப்படை தளத்துக்கு சென்றார். இந்த விமானப்படை தளம் பாகிஸ்தான் எல்லையில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் இருக்கிறது. அங்கு அவர் விமானப்படை வீரர்களை சந்தித்து பேசினார்.
இதையடுத்து 10.30 மணிக்கு கர்னிமாதா கோவிலுக்கு சென்று வழிபட்டார். அதன்பிறகு பிகானேர்-மும்பை இடையிலான ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
அதன்பிறகு நாடு முழுவதும் மேம்படுத்தப்பட்டுள்ள 103 ரெயில் நிலையங்களையும் அவர் திறந்து வைத்தார்.
இதையடுத்து பிகானேரில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.26 ஆயிரம் கோடி புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிறகு அந்த மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
- பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
- உள்ளூர் திருமண ஏஜெண்டுகளுடன் சேர்ந்து திருமண மோசடிகளில் ஈடுபடும் நபர்களுடன் அனுராதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ராய்ப்பூர்:
பணம், நகைக்காக அப்பாவி ஆண்கள் மற்றும் மனைவிகளை இழந்த ஆண்களை குறி வைத்து திருமணம் செய்து ஏமாற்றும் பெண்களை அறிந்திருக்கிறோம். கோவையைச் சேர்ந்த மடோனா என்ற பெண் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஓய்வுபெற்ற மற்றும் கணவரை இழந்த அரசு ஊழியர்களை வலையில் வீழ்த்தி திருமணம் செய்து நகை பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பெண் 25 பேரை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த அந்த இளம்பெண்ணின் பெயர் அனுராதா ஹேக்.
இவர் தன்னை ஒரு மணப்பெண்ணாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஆண்களை ஏமாற்றியுள்ளார். திருமணத்திற்காக தீவிரமாக பெண் தேடும் நபர்களை குறிவைத்து திருமணம் செய்து, குறுகிய காலத்திலேயே அவர்களிடம் உள்ள நகை மற்றும் பணத்துடன் ஓட்டம் பிடிப்பதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளார்.
இதற்காக சில திருமண தரகர்களையும் கையில் வைத்திருந்தார். மிகவும் அதிநவீன முறையில் திருமண மோசடியில் ஈடுபட்ட இவர் சிலரை குறிவைத்து, திருமணத்துக்குப் பெண் நகை பணத்தை திருடிக் கொண்டு மாயமாகி உள்ளார்.
ராஜஸ்தானின் சவாய் மாதோப்ப்பூர் பகுதியை சேர்ந்த விஷ்ணு சர்மா எனும் நபர் கடந்த மே 3-ந் தேதி காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதில், "வரன் பார்த்து தரும்படி திருமண ஏஜெண்ட்களான சுனிதா மற்றும் பப்பு மீனா ஆகியோரிடம் ரூ.2 லட்சம் பணம் கொடுத்தேன். அவர்கள் அனுராதாவை மணமகளாக எனக்கு அறிமுகம் செய்தனர். தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 20ம் தேதி உள்ளூரில் உள்ள நீதிமன்றத்தில் பதிவு திருமணம் செய்துகொண்டோம். ஆனால், மே 2ம் தேதியன்று வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்களுடன் தப்பிச் சென்று விட்டார்" என விஷ்ணு சர்மா புகாரளித்துள்ளார்.
இது குறித்த தொடர் விசாரணையில்தான் அனுராதா ஹேக்கின் திருமண மோசடி அம்பலமானது. சர்மாவின் வீட்டிலிருந்து அனுராதா காணாமல் போன பிறகு, போபாலில் கப்பர் என்ற மற்றொரு நபரை அனுராதா திருமணம் செய்து கொண்டு அவரிடமிருந்து ரூ.2 லட்சம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வருங்கால மணமகனாக காட்டிக் கொண்டு அனுராதாவை போலீசார் மடக்கி கைது செய்துள்ளனர்.
அனுராதா ஹேக் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 7 மாதத்தில் 25 பேரை அவர் திருமணம் செய்து பணம், நகைகளை சுருட்டியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் மஹராஜ்கன்ஜ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த அனுராதா, குடும்ப பிரச்சனை காரணமாக கணவரிடம் இருந்து பிரிந்து போபாலில் குடியேறியுள்ளார். அங்கு தான், உள்ளூர் திருமண ஏஜெண்டுகளுடன் சேர்ந்து திருமண மோசடிகளில் ஈடுபடும் நபர்களுடன் அனுராதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏஜெண்டுகள் வாட்ஸ்அப் வாயிலாக மணமகள்களை அறிமுகப்படுத்தி, தங்களது சேவைக்கு லட்சக்கணக்கில் கட்டணம் வசூலித்துள்ளனர். அதன்படி, திருமணம் நடந்தும் ஒரே வாரத்தில் மணமகள் மணமகனை விட்டு ஓடிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதுபற்றி போலீசார் கூறுகையில், "அனுராதா தனது திட்டங்களையும், நடவடிக்கைகளையும் ஒவ்வொரு திருமணத்தின் போதும் திறம்பட செயல்படுத்தியுள்ளார். மணமகளாக தன்னை முன்னிறுத்தி, தேவையான ஆவணங்களை பயன்படுத்தி சட்டப்படி திருமணம் செய்துகொள்வார். சில நாட்கள் மட்டும் கணவருடன் தங்கியிருந்து, சரியான நேரம் பார்த்து கையில் கிடைக்கும் பணம், நகை மற்றும் மின்சாதன பொருட்களுடன் இரவோடு இரவாக அங்கிருந்து தப்பிச் சென்று விடுவார். இதையே வாடிக்கையாக கொண்டு கச்சிதமாக பல திருமணங்களை செய்துள்ளார்" என தெரிவித்தனர்.
- முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
ஜெய்ப்பூர்:
நடப்பு ஐபிஎல் தொடரின் 59வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது.
அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் ஹர்பிரீத் பிரார் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்நிலையில், வெற்றிக்கு பிறகு பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேசியதாவது:
முந்தைய நாள் பயிற்சியின் போது கைவிரலில் பந்து தாக்கியதால் வலி இருந்தது. காயத்தின் தன்மை குறித்து தெளிவாக தெரியவில்லை. அதனை பரிசோதனை செய்யவேண்டும்.
பீல்டிங் செய்ய களம் இறங்காததால் வெளியில் இருந்தபடி வீரர்களுக்கு தகவல்களை பரிமாறினேன். எதிரணி சிறப்பாக ஆடும் போது நமது வீரர்களுக்கு தளர்வு ஏற்படும். அதனை தவிர்க்கவே வீரர்களுடன் தொடர்ந்து பேசினேன். எங்கள் அணி வீரர்களின் துணிச்சலான அணுகுமுறை பாராட்டும் வகையில் இருந்தது.
ஹர்பிரீத் பிரார் வலைபயிற்சியில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்தார். அவருக்கு கிடைத்த இந்த வாய்ப்பில் அருமையாக செயல்பட்டார். அவரது மனநிலை அபாரமாக இருக்கிறது.
சூழ்நிலை எப்படி இருந்தாலும் வெற்றி பெறவேண்டும் என்ற மனநிலையை நாங்கள் ஒருங்கிணைந்து வெளிக்காட்டி இருக்கிறோம். இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சை அடித்து ஆடுவது கடினமாக இருந்தது. எனவே பெரும்பாலான ரன்களை வேகப்பந்து வீச்சுக்கு எதிராக எடுத்தோம். எந்தச் சூழ்நிலையிலும் ஆட்டத்தை எங்களுக்கு சாதகமாக மாற்ற முடியும் என தெரிவித்தார்.
- ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் இழந்து விட்டது.
- பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே-ஆப் ரேஸில் உள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 59-வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது
இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். காயத்தில் இருந்து மீண்ட சஞ்சு சாம்சன் இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.
இப்போட்டியின் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது.
இப்போட்டியில் அதிகபட்சமாக நெஹல் வதோரா 70, ஷஷங் சிங் 59, ஸ்ரேயாஸ் ஐயர் 30 என்கள் எடுத்தனர்.
இதையடுத்து, 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களிமிறங்கியது.
ஆனால் ஆட்டத்தின் முடிவில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இந்நிலையில், ஐபிஎஸ் தொடர் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியுள்ளது.
- மக்களுக்கு தினமும் தேசபக்தி சான்றிதழ்களை விநியோகிக்கும் இந்த எம்எல்ஏ, மூவர்ணக் கொடியால் மூக்கைத் துடைக்கிறார்.
- வழியில் யாரோ அதை எனக்குக் கொடுத்தார்கள்.
ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ பால்முகுந்த் ஆச்சார்யா தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில்,பேரணியில் நடந்து செல்லும் அவர் மூவர்ணக் கொடியால் முகத்தை துடைப்பது பதிவாகி உள்ளது.
காங்கிரஸ் எம்பி இம்ரான் பிரதாப்கர்ஹி இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "ஜெய்ப்பூர் மக்களுக்கு தினமும் தேசபக்தி சான்றிதழ்களை விநியோகிக்கும் இந்த எம்எல்ஏ, மூவர்ணக் கொடியால் மூக்கைத் துடைக்கிறார்.
மூவர்ணக் கொடியை இப்படித்தான் மதிக்கிறார்களா? தேசியக் கொடியை அவமதிப்பது கடுமையான குற்றம்" என்று தெரிவித்துள்ளார். பால்முகுந்த் ஆச்சார்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராஜஸ்தான் காங்கிரஸ் கோரியுள்ளது.
இதற்கிடையே இதற்கு விளக்கம் அளித்த பாலமுகுந்த் ஆச்சாரியா, " அது தேசியக் கொடி அல்ல, வெள்ளை மற்றும் பச்சை நிறத் துணி. வழியில் யாரோ அதை எனக்குக் கொடுத்தார்கள்.
நான் துணியை முத்தமிட்டு, மற்றொரு துணியால் வியர்வையைத் துடைத்தேன். மூவர்ணக் கொடியை எப்படி மதிக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்" என்று தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் சாதனைகளை மக்களுக்கு பரப்ப பாஜக நாடு தழுவிய யாத்திரை நடத்தி வரும் சூழலில் இந்த சம்பவம் சர்ச்சையாகி வருகிறது.
- ராஜஸ்தான் விளையாட்டு குழுவின் இணையதளத்திற்கு பாகிஸ்தானில் இருந்து மிரட்டல்.
- பாதுகாப்பு நடவடிக்கையாக மைதானத்தில் இருந்து ஊழியர்கள் வெறியேற்றினர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் ராஜஸ்தான் விளையாட்டு குழுவின் இணையதளத்திற்கு பாகிஸ்தானில் இருந்து இ-மெயில் வந்துள்ளது.
மைதானத்திற்குள் சக்தி வாய்ந்த வெடிகுண்டு இருப்பதால் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக மைதானத்தில் இருந்து ஊழியர்கள் வெறியேற்றினர்.
மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நபுணர்கள் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.






