என் மலர்
ஒடிசா
- லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
- தேரின் வடங்களைப் பிடிக்க பக்தர்கள் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை உலகப் புகழ்பெற்றது. இந்த ஆண்டுக்கான ரத யாத்திரைக்காக மூன்று பிரமாண்ட தேர்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுக்கத் தொடங்கினர்.வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களும் பூரி நகரின் வீதிகளில் அசைந்தாடி செல்லும் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தேரின் வடங்களைப் பிடிக்க பக்தர்கள் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுத்தனர்.
- பூரி நகர் வீதிகளில் தேர்கள் அசைந்து சென்ற காட்சியை லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை உலகப் புகழ்பெற்றது. இந்த ஆண்டுக்கான ரத யாத்திரைக்காக மூன்று பிரமாண்ட தேர்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுக்கத் தொடங்கினர்.வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களும் பூரி நகரின் வீதிகளில் அசைந்தாடி செல்லும் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 500 பேர் காயம் அடைந்துள்ளனர் என தகவல் வெளியானது.
வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களில் 8 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணையில், தேரின் வடங்களைப் பிடிக்க பக்தர்கள் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
- "சுத்திகரிப்பு சடங்கு" என்ற பெயரில் மொட்டை அடிக்கபட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
- மொட்டை அடித்த குடும்ப உறுப்பினர்கள் வயலில் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஒடிசாவில் ஒரு பெண் வேறு சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால், அவரது குடும்பத்தைச் சேர்ந்த நாற்பது பேர் "சுத்திகரிப்பு சடங்கு" என்ற பெயரில் மொட்டை அடிக்கபட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
இந்த சம்பவம் ராயகடா மாவட்டத்தில் உள்ள காசிபூர் வட்டாரத்தின் பைங்கனகுடா கிராமத்தில் நடந்தது.
பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பெண், சமீபத்தில் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்தத் திருமணம் கிராம மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி, குடும்பத்தை சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாக்கியது.
பெண் வீட்டார் மீண்டும் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்றால், சுத்திகரிப்பு சடங்கைச் செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரினர். அவர்கள் மறுத்தால், காலவரையற்ற சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாக நேரிடும் என்று கிராம மக்கள் அச்சுறுத்தினர்.
கிராம மக்களின் அழுத்தத்தின் காரணமாக, குடும்பத்தினர் உள்ளூர் தெய்வத்தின் முன் சடங்குப்படி விலங்குகளை பலியிட்டனர். அதைத் தொடர்ந்து மொட்டை அடிக்கும் சடங்கு நடைபெற்றது.
மொட்டை அடித்த குடும்ப உறுப்பினர்கள் வயலில் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தச் செய்தி பரவியதும், காசிபூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) விஜய் சோய் இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒடிசாவில் உள்ள பர்கர் மாவட்டத்தில் வேறு சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்த ஒருவரின் இறுதி சடங்குகளை அவரது குடும்பத்தினர் நடத்த அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிசா அரசு கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ₹2.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.
- ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
- ஒடிசா கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் யோகா தொடர்பான விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கினார்.
புவனேஸ்வர்:
பிரதமர் நரேந்திர மோடி செல்லும் இடமெல்லாம் உடல் நலன் குறித்துப் பேசிவருகிறார். அப்படி, 2014-ம் ஆண்டு ஐ.நா.சபையில் உரையாற்றிய பிரதமர் மோடி, யோகாவின் நன்மைகளையும் பெருமையையும் எடுத்துக்கூறி அதனை சர்வதேச தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என பரிந்துரைத்தார். இதற்கு 177 உறுப்பு நாடுகள் ஆதரவளித்த நிலையில், 2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா.சபை அறிவித்தது.
சுமார் 200 நாடுகளில் யோகா பயிற்சியை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். அன்றாட வாழ்வில் யோகா பயிற்சியில் ஈடுபடுவதால் உடல் மற்றும் மனத்திற்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும், இந்த பண்டைய நடைமுறையை உலகெங்கிலும் உள்ள மக்கள் ஏற்றுக்கொள்ள ஊக்குவிப்பதே சர்வதேச யோகா தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதற்கிடையே, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் யோகா தின பயிற்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், இன்று சர்வதேச யோகா தினத்தையொட்டி, பத்மஸ்ரீ விருது பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் பிரமாண்டமான விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கினார்.
அந்தச் சிற்பத்தில் பிரதமர் மோடி யோகா செய்வது போலவும், Yoga for One Nation One Health என குறிப்பிட்டுள்ளார்.
- இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கனடா சென்றிருந்தேன்.
- கனடாவில் இருக்கும்போது, டொனால் டிரம்ப் என்னை டெலிபோனில் அழைத்தார்.
பிரதமர் மோடி இன்று ஒடிசா மாநிலம் சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கனடா சென்றிருந்தேன். கனடாவில் இருக்கும்போது, டொனால் டிரம்ப் என்னை டெலிபோனில் அழைத்தார். கனடாவில் இருக்கிறீர்கள். வாஷிங்டன் வழியாக வாருங்கள். இரவு உணவு சாப்பிடலாம். பேசாலாம் என அழைப்பு விடுத்தார். மிகுந்த வற்புறுத்தலுடன் தொடர்ந்து அழைப்பு விடுத்தார்.
நான் டிரம்பிடம், உங்களுடைய அழைப்பிற்கு நன்றி. மகாபிரபு நிலத்திற்கு (பூரி ஜெகநாதர் கோவில் உள்ள இடம்) செல்வது எனக்கு மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்தேன். உங்களுடைய அன்பு (மக்கள்) மற்றும் மகா பிரபு மீதான பக்தி இந்த மண்ணுக்கு என்னை கொண்டு வந்தது.
இவ்வாறு பிரதமர் மோடி விவரித்தார்.
- ஒடிசாவில் மோகன் சரண் மாஜி தலைமையில் ஆட்சி அமைந்து ஒரு வருடம் நிறைவடைகிறது.
- ஒரு வருட நிறைவு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி ஒடிசா செல்கிறார்.
மக்களவை தேர்தலுடன் கடந்த வருடம் ஒடிசா மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக அமோக வெற்றி பெற்றது. மோகன் சரண் மாஜி முதல்வராக பொறுப்பேற்றார். பாஜக ஆட்சியமைத்து ஒரு வருடம் நிறைவடைகிறது.
ஆட்சியமைத்த ஒரு வருடம் நிறைவு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நாளை ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் செல்கிறார். இதனைத் தொடர்ந்து மதியத்திற்கு மேல் அரைநாள் விடுமுறை அளித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புவனேஸ்வர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள், வருவாய் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு 20ஆம் தேதி விடுமறை அளிக்கப்பட்டிருந்தது. புவனேஸ்வரில் உள்ள ஜனதா மைதானதில் முதலாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற இருக்கிறது.
பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பத்துக்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் அவர்களை நெருங்கியது.
- அவர்களை வயது வந்தவர்களாகக் கருதி வழக்கை விசாரிக்க நீதிமன்றத்திடம் கோரப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோபால்பூர் கடற்கரையில் 20 வயது இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக நான்கு சிறுவர்கள் உட்பட பத்து பேர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனது ஆண் நண்பருடன் அப்பெண் கடற்கரைக்குச் சென்றிருந்தபோது, ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பத்துக்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் அவர்களை நெருங்கி, நண்பரை கட்டிப்போட்டுவிட்டு, பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் தெரிவித்தார்.
காவல்துறையினர் முதலில் ஏழு பேரையும், பின்னர் மற்ற மூன்று பேரையும் கைது செய்தனர். குற்றவாளிகள் வேறு மாநிலத்திற்கு தப்பிச் செல்ல முயன்றபோது பிடிபட்டனர். மூவர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும், மற்ற ஏழு பேர் அதற்கு துணை நின்றனர் என்றும் எஸ்பி சரவண விவேக் எம் தெரிவித்துள்ளார்.

சிறார்கள் இத்தகைய கொடூர குற்றத்தில் ஈடுபட்டதால், அவர்களை வயது வந்தவர்களாகக் கருதி வழக்கை விசாரிக்க நீதிமன்றத்திடம் கோரப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
- ஒடிசா கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கினார்.
புவனேஸ்வர்:
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை ஒட்டி ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில் கொரோனா விழிப்புணர்வு மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி புகையிலை பயன்பாட்டின் தீமைகள் குறித்து அரசு மட்டுமின்றி சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, பத்மஸ்ரீ விருது பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் பிரமாண்டமான விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கினார்.
சிகரெட்டின் தீமையை விளக்கும் வகையில் எலும்புக்கூட்டை வடிவமைத்த அவர், குடும்பத்தில் இருந்து உங்களை விலக்கும் முன்னர் புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
- தேசிய பூங்காவின் சல்பாரி மலைத்தொடரில் நடந்த இந்த சம்பவம் நடந்தது.
- காண்டாமிருகம் பல முறை வாகனத்தைக் கவிழ்க்க முயன்றது.
அசாமின் மனாஸ் தேசிய பூங்காவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரு காண்டாமிருகம் சுற்றுலாப் பயணிகள் சென்ற சஃபாரி ஜீப்பை முட்டி மோதிய சம்பவம் நிகழ்ந்தது.
தேசிய பூங்காவின் சல்பாரி மலைத்தொடரில் நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அந்த காணொளியில், சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் ஜீப்பை நோக்கி காண்டாமிருகம் நடந்து செல்வதைக் காட்டுகிறது.
காண்டாமிருகம் பல முறை வாகனத்தைக் கவிழ்க்க முயன்றது. பின்னர் அங்கிருந்து நகர்ந்து சென்றது.
தகவல்களின்படி, ஜீப்பில் இருந்த அனைத்து சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர்.
கடந்த காலங்களில் காண்டாமிருக தாக்குதல் சம்பவங்கள் பல நடந்துள்ளன. இந்த ஆண்டு ஜனவரியில், அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவில் வேகமாக வந்த ஜீப்பில் இருந்து ஒரு பெண் மற்றும் அவரது மகள் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் முன் விழுந்தனர்.
அதிர்ஷ்டவசமாக, காண்டாமிருகங்களில் சஃபாரி ஜீப்புகளில் ஒன்றை நோக்கி ஓடி நகர்ந்ததால் இருவரும் காயமின்றி தப்பினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
- சிறுவனை ஒதுக்குபுறமான இடத்திற்கு அழைத்து சென்று தகாத உறவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு.
- சிறுவனின் பெற்றொர் புகார் அளிக்க, ஏராளமான சிறுவர்களுக்கு எதிராக தகாத உறவில் ஈடுபட்டது தெரியவந்தது.
ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பல சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை (sexually assault) கொடுத்த நபருக்கு போக்சோ நீதிமன்ற நீதிபதி 25 வருடம் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த மார்ச் 21ஆம் தேதி சிறுவனை குற்றவாளி ஒதுக்குபுறமான இடத்திற்கு தூக்கிச் சென்று அவனுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். அந்த சிறுவன், தகாத உறவுக்கு மறுப்பு தெரிவிக்க, அடித்து உதைத்ததுடன் இது தொடர்பாக வெளியில் கூறினால் கொலை செய்வதாக மிரட்டியுள்ளான். ஆனால், அந்த சிறுவன் நடந்த அனைத்தையும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளான்.
இதனைத் தொடர்ந்து மார்ச் 23ஆம் தேதி பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்த விவகாரம் வெளியில தெரியவர, அந்த கிராமத்தில் உள்ள ஏராளமான சிறுவனை குற்றவாளி தனியாக அழைத்துச் சென்று தகாத உறவில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அத்துடன் கற்பழிப்பு வழக்கில் ஜெயிலில் இருந்துள்ளார்.
போலீசார் குற்றவாளியை மார்ச் 27ஆம் தேதி கைது செய்தனர். அவர் மீது ஏப்ரல் 8ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று நீதிபதி 25 வருட சிறைத் தண்டனை வழங்கியதுடன், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.
- காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில், மின்னல் தாக்கியதில் 6 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோராபுட், கட்டாக், கோர்த்தா, நயாகட், ஜாஜ்பூர், பாலேசோர் மற்றும் கஞ்சம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை, மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழை மற்றும் மணிக்கு 60 முதல் 70 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கூட்டாக வரும் சிறிய ரக ட்ரோன்களை தாக்கி அழிக்கும் வான்பாதுகாப்பு அமைப்பு பார்கவஸ்த்ரா.
- ஒடிசா மாநிலம் கோபால்பூரில் அடுத்தடுத்து 2 ராக்கெட்டுகளை ஏவி சோதனை வெற்றி.
மைக்ரோ ராக்கெட்டுகளை பயன்படுத்தும், ட்ரோன் தடுப்பு வான்பாதுகாப்பு அமைப்பான பார்கவஸ்த்ரா சோதனை வெற்றிப் பெற்றுள்ளது.
கூட்டாக வரும் சிறிய ரக ட்ரோன்களை தாக்கி அழிக்கும் வான்பாதுகாப்பு அமைப்பு பார்கவஸ்த்ரா.
பார்கவஸ்த்ரா வான்பாதுகாப்பு அமைப்பின் ராக்கெட்டுகள் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் கோபால்பூரில் அடுத்தடுத்து 2 ராக்கெட்டுகளை ஏவி நடைபெற்ற சோதனை வெற்றியடைந்துள்ளது.






