என் மலர்
மகாராஷ்டிரா
- இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது.
மும்பை:
இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியதாவது:
பெங்களூருவில் நடந்த உயிரிழப்பு குறித்து கேட்கிறீர்கள். அதற்கு நான் பதில் சொல்ல வேண்டியது அவசியம். எனக்கு எப்போதும் வெற்றி கொண்டாட்ட ஊர்வலங்களை நடத்துவதில் நம்பிக்கை இருந்ததில்லை.
2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வென்றபோது கூட இதையே நான் கூறினேன். ஏனெனில் வெற்றி கொண்டாட்டத்தை விட மக்களின் வாழ்க்கை முக்கியமானது. ரோடு ஷோ நடத்துவதற்கு ஏற்ப நீங்கள் முழுமையாக தயாராக இல்லை என்றால், அதை நடத்தியிருக்கக் கூடாது. எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்களில் நாம் இன்னும் பொறுப்புணர்வுடன் இருக்கவேண்டும். மைதானத்திலோ அல்லது மூடிய அரங்கிலோ இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தலாம்.
இங்கிலாந்தில் விளையாடும்போது ஆடுகளத்தன்மை மட்டுமின்றி, மேகமூட்டமான சீதோஷ்ண நிலையையும் கவனிக்க வேண்டும். இதற்கு ஏற்ப ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வோம்.
இளம் வீரர்கள் உள்ளூர் முதல்தர கிரிக்கெட்டில் விளையாட வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். உள்ளூர் போட்டியில் தொடர்ந்து சிறப்பாக ஆடினால் தேசிய அணிக்கான கதவு திறக்கும். அதற்கு சரியான உதாரணம் இப்போது அணிக்கு திரும்பியிருக்கும் கருண் நாயர். அவரது அனுபவம் நிச்சயம் அணிக்கு உதவிகரமாக இருக்கும். ஆனால் ஒன்றிரண்டு டெஸ்ட் போட்டியை வைத்து ஒரு வீரரின் திறமையை மதிப்பிட மாட்டோம் என தெரிவித்தார்.
- இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது.
மும்பை:
இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது:
ஒவ்வொரு தொடரிலும் ஏதாவது ஒரு வகையில் நெருக்கடி இருக்கும்.
நீண்ட காலம் சிறப்பாக விளையாடிய இரு முன்னணி வீரர்கள் இல்லாமல் இந்திய அணி களமிறங்குகிறது.
அவர்களது இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதல்ல. சீனியர் வீரர்கள் இல்லாமல் விளையாட பழகி வருகிறோம்.
மற்றபடி டெஸ்ட் அணி கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட உடன் திகைத்து விட்டேன்.
இது மிகப்பெரிய பொறுப்பு. இதற்கான சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். கேப்டன் பணியில் எனக்கென ஸ்டைல் எதுவும் இல்லை.
அணியின் மற்ற வீரர்களின் பலம், பலவீனங்களை அவர்களுக்கு தெரிவிக்க முயற்சிப்பேன். அணியில் தங்களது இடம் பாதுகாப்பானது என்பதை அவர்கள் உணர வேண்டும். அப்போது தான் சிறப்பாக செயல்படுவர்.
டெஸ்ட் தொடருக்கான பேட்டிங் ஆர்டர் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இந்திய வீரர்கள் இரு அணியாக பிரிந்து பயிற்சி போட்டியில் பங்கேற்க உள்ளோம். பும்ரா விளையாடினால் சிறப்பாக இருக்கும். அவர் இல்லாதபோது சமாளிக்கத் தேவையான பவுலர்கள் அணியில் உள்ளனர்.
என்னைப் பொறுத்தவரையில் சராசரிகளை நம்புவது இல்லை. கேப்டனாக, மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க முயற்சிப்பேன் என தெரிவித்தார்.
- விடியற்காலை தனது தோழி வீட்டிற்கு சென்றுள்ளார்.
- 21ஆவது மாடிக்கு சென்ற அவர், திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 25 வயதேயான ஐ.டி. பெண் ஊழியர் 21ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அபிலஷா பௌசாஹேப் கோதிம்பிரே என்ற அந்த பெண் ஊழியர், அதிகாலை 4.30 மணிக்கு, அவளுடைய தோழி வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். திடீரென அவரது நண்பர் வசித்து வரும் 21ஆவது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துள்ளார்.
நான் வாழ்ந்து முடித்துவிட்டேன். இனிமேல் எனக்கு வாழ விருப்பமில்லை என கடிதம் எழுதி வைத்துள்ளார். மேலும் அந்த கடிதத்தில் இந்த முடிவை எடுத்ததற்காக பெற்றோர் மற்றும் நண்பர்கள் மன்னித்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
- கால்நடை மார்கெட்டுகளை ஜூன் 3ஆம் தேதியில் இருந்து 8ஆம் தேதி வரை மூட வேண்டும் என கடிதம்.
- பசுவதைக்கு எதிராக கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து சட்டம் அமலில் உள்ளது.
ஜூன் 7ஆம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில அரசின் கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண் விளைபொருள் சந்தை குழுக்களிடம், கால்நடை மார்கெட்டுகளை ஜூன் 3ஆம் தேதியில் இருந்து 8ஆம் தேதி வரை மூட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், பசுவதைக்கு எதிராக கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து சட்டம் அமலில் உள்ளது. கொலை செய்தல், அவற்றை கொண்டு செல்லுதல், விற்பனை மற்றும் கொள்முதல் செய்தல், சேமித்து வைப்பது சட்ட விரோதமாகும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் சிவசேனா (UBT) தலைவர் ஆதித்யா தாக்கரே, அரசின் வேலை பஹல்காமில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை கண்டுபிடிப்பது. விழா கொண்டாட்டத்தில் தலையிடுவது இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "இதை சேமிக்க அல்லது அதை சேமிக்க ஏன் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் பண்டிகையை கொண்டாடுறீங்க. நான் ஏற்கனவே சுற்றுச்சூழல் ஆர்வலர். தண்ணீர் அல்லது பசுமையை சேமிக்க எல்லோரும் குரல் கொடுக்கிறார்கள். இது அரசு வேலையை கிடையாது. தற்கொலை செய்து கொண்டிருக்கும் விவசாயிகளை காப்பாற்றுவதுதான் அரசுடைய வேலை.
தண்ணீர் வீட்டிற்குள் புகுந்தால், அதன்பின் ஏன் அவ்வாறு நிகழ்ந்தது என விசாரிக்க வேண்டும். பஹல்காம் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை கண்டுபிடிப்பதுதான் அரசாங்கத்தின் வேலை. விழா கொண்டாட்டத்தில் தலையிடுவது அல்ல.
இவ்வாறு ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.
- இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் 7ம் தேதி (சனிக் கிழமை) கொண்டாடப்படுகிறது.
- பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஆடுகள் விற்பனை படுஜோராக இருந்து வருகிறது.
பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி, இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் 7ம் தேதி (சனிக் கிழமை) கொண்டாடப்படுகிறது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஆடுகள் விற்பனை படுஜோராக இருந்து வருகிறது.
இந்நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி மகாராஷ்டிராவில் கால்நடை சந்தைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா கோசேவா ஆயோக் (Maharashtra Goseva Ayog) மாநிலத்தில் உள்ள வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்களுக்கு (APMCs) ஜூன் 3 முதல் 8 வரை கால்நடை சந்தைகளை மூட உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை இருக்கிறது. ஆனால், சந்தைகளையே நடத்தக் கூடாது என்றால் ஆடுகளை எப்படி விற்பது? என வியாபாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் இது மகாராஷ்டிரா கோசேவா ஆயோகின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது என்று சிலர் விமர்சித்தும் வருகின்றனர்.
- ஒரு பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியராக, வர்மா போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் ஏற அனுமதிக்கப்பட்டார்.
- தங்களை இளம்பெண்களாக சர்மாவுக்கு அறிவுகப்டுத்திக்கொண்டனர்.
பாகிஸ்தான் உளவுத்துறை முகவர்களுக்கு இந்திய போர்க்கப்பல்கள் பற்றிய தகவல்களை வழங்கியதற்காக மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரவீந்திர வர்மா (27) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, தானேயில் வசிக்கும் ரவீந்திர வர்மா ஒரு தனியார் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
அவருக்கு 2024 ஆம் ஆண்டு பாயல் சர்மா மற்றும் இஸ்ப்ரீத் என்ற பேஸ்புக் கணக்குகளில் இருந்து Friend request கோரிக்கைகளைப் பெற்றார். இந்த பாகிஸ்தான் முகவர்கள் தங்களை இளம்பெண்களாக சர்மாவுக்கு அறிவுகப்டுத்தி அவருக்கு ஆசை காட்டி ஹனிட்ராப்பில் விழ வைத்தனர்.
ஒரு பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியராக இருந்ததால், வர்மா போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் ஏற அனுமதிக்கப்பட்டார்.
அவர் தன்னுடன் ஒரு செல்போனையும் எடுத்துச் சென்றார். தனது பணிகளை முடித்த பிறகு, கப்பல்கள் பற்றிய ரகசிய தகவல்களைச் சேகரித்து பாகிஸ்தான் முகவர்களுக்கு வழங்குவார்.
அவர் படங்கள் மற்றும் பிற வடிவமைப்புகளை வரைவதன் மூலம் தகவல்களை வழங்குவார். சில நேரங்களில் அவர் ரகசிய தகவல்களை ஆடியோ வடிவில் கூட தெரிவிப்பார். இந்த தகவல்களுக்காக அவருக்கு பணம் வழங்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.
- 2018ல் கேரள பெருவெள்ளத்தின் போது, பல நாடுகளில் இருந்து அம்மாநில அரசுக்கு நிதியுதவி வழங்க முன்வந்தபோது ஒன்றிய அரசு அனுமதி மறுத்தது.
- FCRA இன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.
மகாராஷ்டிரா முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக் கணக்கிற்கு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010 இன் கீழ் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
சட்டத்தின்படி, வெளிநாட்டு பங்களிப்புகளைப் பெறும் அனைத்து சங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களும் FCRA இன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.
மகாராஷ்டிரா முதலமைச்சரின் நிவாரண நிதி தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்ததால் FCRA இல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரு மாநிலம் இந்த அனுமதியை பெறுவது இதுவே முதல் முறை.
முன்னதாக கடந்த 2018ல் கேரள பெருவெள்ளத்தின் போது, பல நாடுகளில் இருந்து அம்மாநில அரசுக்கு நிதியுதவி வழங்க முன்வந்தபோது ஒன்றிய அரசு அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெள்ளத்தில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் தங்கள் வாழ்வாதரத்தை இழந்து நிர்கதியாக்கப்பட்டனர்.
- சாதாரணமாக நகரங்களில் வீடு வாங்குவது என்பது சில லட்சங்களில் முடிந்துவிடும்.
- சென்னை போன்ற பெரு நகரங்களில் கோடிகளை தொட்டுவிடும்.
சொந்த வீடு என்பது நம் ஒவ்வொருவரின் கனவு. மாதச் சம்பளம் பெறும் நடுத்தர மக்கள் பலர், வங்கிக்கடன் மூலம் தங்களது சொந்த வீடு என்னும் லட்சியத்தை நிறைவேற்றுகிறார்கள்.
ஆனால் அதற்கான மாதத்தவணையை கட்டி முடிப்பதற்குள், போதும் போதும் என்றாகிவிடும். இருந்தாலும், மற்றச் செலவினங்களை குறைத்து பலர் தங்களது கனவு இல்லத்தை சொந்தமாக்குகிறார்கள்.
சாதாரணமாக நகரங்களில் வீடு வாங்குவது என்பது சில லட்சங்களில் முடிந்துவிடும். சென்னை போன்ற பெரு நகரங்களில் கோடிகளை தொட்டுவிடும். பெரு நகரங்களின் முக்கிய பகுதிகளில் வீடு வாங்குவது என்பது நடுத்தர மக்களுக்குத்தான் சிரமம். கோடீஸ்வரர்களுக்கு இல்லை.
ஆனால் கோடீஸ்வரர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு பெண், பல கோடிகளை கொட்டி 2 வீடுகளை வாங்கியுள்ளார். அதன் மதிப்பை கேட்டால் தலை சுற்றிவிடும். அதுவும் அவர் இந்தியாவின் பொருளாதார நகரமான மும்பையில் அந்த வீடுகளை வாங்கியுள்ளார்.
அவரது பெயர் லீனா காந்தி திவாரி. பிரபல பன்னாட்டு மருந்து கம்பெனியை நடத்தி வருகிறார். மும்பையில் மிகவும் மதிப்பு மிக்க வொர்லியில் நமன் சனாவில் 40 அடுக்கு மாடிகளை கொண்ட குடியிருப்பில் 2 வீடுகளை அவர் வாங்கியுள்ளார். அதன் விலை ரூ.639 கோடி. இதுதான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அரபிக்கடலை பார்க்கும் வகையில் அமைந்துள்ள அந்த பிளாட்டுகள் 22,572 சதுர அடி கொண்டது. சதுர அடிக்கு ரூ.2.83 லட்சம் விலையாக கொடுத்து அந்த வீடுகளை அவர் வாங்கியுள்ளார். இதற்காக அவர் ஜி.எஸ்.டி.யாக மட்டும் ரூ.63.9 கோடி செலுத்தியுள்ளார் என்பது பத்திரப்பதிவு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே அவர் வாங்கிய 2 வீடுகளின் மொத்த மதிப்பு ரூ.703 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.
கோடிகளை கொட்டி வீடு வாங்கிய பெண் தொழில் அதிபர் லீனா காந்தி திவாரி, பிரபல இந்திப்பட நடிகை ஜூகிசாவ்லாவின் நெருங்கிய தோழியாவார்.
மும்பை வொர்லி நமன் சனாவில் இதுபோன்று கோடிகளில் வீடு வாங்குவது ஒன்றும் புதிது அல்ல. சமீபத்தில் கோடாக் மஹிந்த்ரா வங்கியின் நிறுவனர் உதய் கோடாக், 22 அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.400 கோடிக்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கொரோனா 2ஆவது அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டது.
- மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் நோயாளிகள் பரிதாபமாக உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ஆவது அலை உச்சக்கட்டத்தில் இருந்தபோது, அரசு டாக்டர் நோயாளியை கொன்றுவிடுங்கள் எனக்கூறும் வகையில் வெளியான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று 2020ஆம் ஆண்டு இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்தியது. முதற்கட்ட அலை தாக்குதலை தாக்குப்பிடித்த நிலையில், 2021-ல் மீண்டும் 2ஆவது அலை உருவானது. அப்போது மக்கள் மூச்சுவிட முடியாமல் திணறினர். இதனால் உயிர் பிழைப்பதற்கு ஆக்சிஜன் தேவைப்பட்டது. மருத்துவமனையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சிகிச்சைக்காக படுக்கை கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
கொரோனா பாதிப்பில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில அரசு டாக்டர் ஒருவர் சக டாக்டரிடம், யாரையும் மருத்துவமனைக்குள் அனுமதிக்காதீர்கள். சிகிச்சை வந்துள்ள பெண்மணியை கொன்றுவிடுங்கள்" எனக் கூறுகிறார். ஆனால் சக டாக்டர், சமாளித்துக் கொண்டு, நோயாளிக்கு அளிக்கும் ஆக்சிஜன் அளவு குறைக்கப்பட்டுள்ளது" என பதில் அளிக்கிறார்.
இது தொடர்பான ஆடியோ வெளியாகி கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கிடையே சிகிச்சை பெற்ற பெண்ணின் கணவன், அரசு டாக்டர் மீது புகார் அளிக்க, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த பெண் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்துக் கொண்டார்.
போலீசார் ஆடியோ கிளப்பின் உண்மைத்தன்மையை கண்டறிந்து வருகின்றனர். அரசு டாக்டரின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சக டாக்டருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
- மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் 320.70 புள்ளிகள் உயர்ந்தன.
- இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி 81.15 புள்ளிகள் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி ஆகியவை கடந்த இரண்டு நாட்களாக சரிவை சந்தித்தன. இந்த நிலையில் இன்று சென்செக்ஸ் 320.70 புள்ளிகளும், நிஃப்டி 81.15 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
நேற்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் 81,312.32 புள்ளிகளாக இருந்தது. இன்று காலை சுமார் 270 புள்ளிகள் உயர்வுடன் 81,591.03 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று அதிக பட்சமாக 81,816.89 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 81,106.98 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 320.70 (0.39%) புள்ளிகள் உயர்ந்து 81,633.02 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 24,752.45 புள்ளியாக இருந்தது. இன்று காலை சுமார் 73 புள்ளிகள் உயர்வுடன் 24,825.10 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதிக பட்சமாக 24,892.60 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 24,677.30 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 81.15 (0.33%) உயர்ந்து 24,833.60 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
நேற்றைய முன்தினம் (செவ்வாய்க்கிழமை) வர்த்தகத்தில் சென்செக்ஸ் 624.82 புள்ளிகளும், நிஃப்டி 174.95 புள்ளிகளும் சரிவை சந்தித்தன.
நேற்று (புதன்கிழமை) மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் 239 புள்ளிகளும், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி 73.75 புள்ளிகளும் சரிவை சந்தித்தன.
- 500 ரூபாய் நோட்டுகள் 40.9 சதவீதம் புழக்கத்தில் இருந்தது.
- 10 ரூபாய், 20 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் 31.7 சதவீதம் புழக்கத்தில் இருந்தாகவும் தெரிவித்துள்ளது.
2023-24 நிதியாண்டில் பணம் நோட்டுகள் அச்சடிப்பதற்கு 5101.4 கோடி ரூபாய் செலவான நிலையில், 2024-25 நிதியாண்டில் 25 சதவீதம் அதிகரித்து 6372.8 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புழக்கத்தில் உள்ள பண மதிப்பு 6 சதவீதம் அதிகரித்துள்ளது. நோட்டுகளின் அளவு 5.6 சதவீதம் 2024-25 நிதியாண்டில் அதிகரித்துள்ளது.
500 ரூபாய் நோட்டுகள் 40.9 சதவீதம் புழக்கத்தில் இருந்ததாகவும், 10 ரூபாய் நோட்டுகள் 16.4 சதவீதம் புழக்கத்தில் இருந்தாகவும் வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
10 ரூபாய், 20 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் 31.7 சதவீதம் புழக்கத்தில் இருந்தாகவும் தெரிவித்துள்ளது. ஆர்பிஐ கடந்த 2023ஆம் ஆண்டு 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்தது. அப்போது சுமார் 3.56 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்தது. அதில் கடந்த மார்ச் 31ஆம் தேதி வரையில் 98.2 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளது.
நாணயங்கள் மதிப்பு மற்றும் அளவில் முறையே 9.6 சதவீதம், 3.6 சதவீதம் அதிகரித்துள்ளது. எலக்ட்ரானிக் பணம் (e-rupee) மதிப்பு 334 சதவீதம் அதிகரித்துள்ளது.
தற்போது 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய், 50 7பாய், 100 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது. இதில் 2 ரூபாய், 5 ரூபாய் நோட்டுகளை ஆர்பிஐ அச்சிடுவதில்லை. 50 பைசா, 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன.
- சாவர்க்கரைப் பற்றிய ராகுல் காந்தியின் கருத்துகள் அவமானகரமானது.
- ராகுல் காந்தி நாசிக் வந்தால் அவரது முகத்தில் கருப்பு மை பூசுவோம் என்றார்.
மும்பை:
காங்கிரஸ் கட்சியும், உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனாவும் தேசிய அளவில் இந்தியா கூட்டணி மற்றும் மகாராஷ்டிர அளவில் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.
இதற்கிடையே, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, சுதந்திரப் போராட்ட வீரர் வீரசாவர்க்கரை 'மாபிவீர்' (மன்னிப்பு கேட்கும் வீரர்) என்று விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உத்தவ் சிவசேனா கட்சியின் நாசிக் நகரப்பிரிவு துணைத்தலைவர் பாலா தராதே, வீர சாவர்க்கர் பிறந்தநாளை முன்னிட்டு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சாவர்க்கரைப் பற்றிய ராகுல் காந்தியின் கருத்துகள் அவமானகரமானது. அதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். ராகுல் காந்தி நாசிக் வந்தால் அவரது முகத்தில் கருப்பு மை பூசுவோம். அதைச் செய்ய முடியாவிட்டால், அவரது வாகன பேரணி மீது கற்களை வீசுவோம். மகா விகாஸ் அகாடி கூட்டணியின் எதிர்காலம் என்னவாக இருந்தாலும், அதைப்பற்றி கவலை இல்லை என தெரிவித்தார்.






