என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து சுற்றுப்பயணம்"

    • இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும் துணை கேப்டனாக ரிஷப் பண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • கேப்டன் பதவியை விட கிரிக்கெட்டை தான் நான் அதிகம் நேசிக்கிறேன்.

    இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

    இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும் துணை கேப்டனாக ரிஷப் பண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பும்ராவிற்கு டெஸ்ட் கேப்டன் பதவி வழங்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சுப்மன் கில்லுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் நியமிக்க பி.சி.சி.ஐ. அணுகியதாகவும் ஆனால் தான் அதை வேண்டாம் என்று நிராகரித்து விட்டதாக பும்ரா தெரிவித்துள்ளார்.

    ஸ்கை ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக் உடனான உரையாடலின் போது, பும்ரா இவ்வாறு தெரிவித்தார்.

    அந்த பேட்டியில் பேசிய அவர், "ரோகித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்த தன்னை கேப்டன் பதவியில் நியமிக்க பி.சி.சி.ஐ. அணுகியது. இருப்பினும் பணிச்சுமை மற்றும் அடிக்கடி காயம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு அந்த வாய்ப்பை தான் நிராகரித்தேன்.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முழுவதும் என்னால் விளையாட முடியுமா என்ற சந்தேகம் இருக்கும்போது, நான் எப்படி கேப்டன்சி செய்ய முடியும்? 3 போட்டிகளுக்கு ஒருவர் கேப்டனாகவும் 2 போட்டிகளுக்கு மற்றொருவர் கேப்டனாகவும் இருப்பது சரியல்ல. அணிக்கு எது முக்கியமோ அதைதான் நான் செய்தேன்

    இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்துவது மிகப்பெரிய மரியாதை. ஆனால் கேப்டன் பதவியை விட கிரிக்கெட்டை தான் நான் அதிகம் நேசிக்கிறேன். அதனால் ஒரு வீரராக இந்திய அணிக்கும் அதிக பங்களிப்பை வழங்க விரும்புகிறேன்" என்று தெரிவித்தார். 

    • இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது.

    மும்பை:

    இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

    இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியதாவது:

    பெங்களூருவில் நடந்த உயிரிழப்பு குறித்து கேட்கிறீர்கள். அதற்கு நான் பதில் சொல்ல வேண்டியது அவசியம். எனக்கு எப்போதும் வெற்றி கொண்டாட்ட ஊர்வலங்களை நடத்துவதில் நம்பிக்கை இருந்ததில்லை.

    2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வென்றபோது கூட இதையே நான் கூறினேன். ஏனெனில் வெற்றி கொண்டாட்டத்தை விட மக்களின் வாழ்க்கை முக்கியமானது. ரோடு ஷோ நடத்துவதற்கு ஏற்ப நீங்கள் முழுமையாக தயாராக இல்லை என்றால், அதை நடத்தியிருக்கக் கூடாது. எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்களில் நாம் இன்னும் பொறுப்புணர்வுடன் இருக்கவேண்டும். மைதானத்திலோ அல்லது மூடிய அரங்கிலோ இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தலாம்.

    இங்கிலாந்தில் விளையாடும்போது ஆடுகளத்தன்மை மட்டுமின்றி, மேகமூட்டமான சீதோஷ்ண நிலையையும் கவனிக்க வேண்டும். இதற்கு ஏற்ப ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வோம்.

    இளம் வீரர்கள் உள்ளூர் முதல்தர கிரிக்கெட்டில் விளையாட வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். உள்ளூர் போட்டியில் தொடர்ந்து சிறப்பாக ஆடினால் தேசிய அணிக்கான கதவு திறக்கும். அதற்கு சரியான உதாரணம் இப்போது அணிக்கு திரும்பியிருக்கும் கருண் நாயர். அவரது அனுபவம் நிச்சயம் அணிக்கு உதவிகரமாக இருக்கும். ஆனால் ஒன்றிரண்டு டெஸ்ட் போட்டியை வைத்து ஒரு வீரரின் திறமையை மதிப்பிட மாட்டோம் என தெரிவித்தார்.

    • இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது.

    மும்பை:

    இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

    இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது:

    ஒவ்வொரு தொடரிலும் ஏதாவது ஒரு வகையில் நெருக்கடி இருக்கும்.

    நீண்ட காலம் சிறப்பாக விளையாடிய இரு முன்னணி வீரர்கள் இல்லாமல் இந்திய அணி களமிறங்குகிறது.

    அவர்களது இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதல்ல. சீனியர் வீரர்கள் இல்லாமல் விளையாட பழகி வருகிறோம்.

    மற்றபடி டெஸ்ட் அணி கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட உடன் திகைத்து விட்டேன்.

    இது மிகப்பெரிய பொறுப்பு. இதற்கான சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். கேப்டன் பணியில் எனக்கென ஸ்டைல் எதுவும் இல்லை.

    அணியின் மற்ற வீரர்களின் பலம், பலவீனங்களை அவர்களுக்கு தெரிவிக்க முயற்சிப்பேன். அணியில் தங்களது இடம் பாதுகாப்பானது என்பதை அவர்கள் உணர வேண்டும். அப்போது தான் சிறப்பாக செயல்படுவர்.

    டெஸ்ட் தொடருக்கான பேட்டிங் ஆர்டர் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இந்திய வீரர்கள் இரு அணியாக பிரிந்து பயிற்சி போட்டியில் பங்கேற்க உள்ளோம். பும்ரா விளையாடினால் சிறப்பாக இருக்கும். அவர் இல்லாதபோது சமாளிக்கத் தேவையான பவுலர்கள் அணியில் உள்ளனர்.

    என்னைப் பொறுத்தவரையில் சராசரிகளை நம்புவது இல்லை. கேப்டனாக, மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க முயற்சிப்பேன் என தெரிவித்தார்.

    இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் இருக்கும் குரூப் போட்டோவில் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும் இடம் பெற்றுள்ளது இணையத்தில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. #ViratKohli #AnushkaSharma #TeamIndia
    லண்டன்:

    இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்நிலையில், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து இந்திய அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று இந்திய கிரிக்கெட் அணி, தூதரகத்திற்கு சென்றது. 

    இறுதியாக ஒட்டுமொத்த அணியும், தூதரக கட்டிடத்திற்கு முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்டது. இந்த புகைப்படத்தில் பாலிவுட் நடிகையும் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மாவும் போஸ் கொடுத்தார். 

    இந்த போட்டோவை கண்ட ட்விட்டர் வாசிகள், அனுஷ்கா சர்மா என்ன இந்திய அணியில் ஒருவரா? அவர் ஏன் இந்திய அணியுடன் புகைப்படத்திற்கு போஸ் தருகிறார். பிசிசிஐ இதனை எப்படி அனுமதித்தது? மற்ற வீரர்களின் மனைவிகள் எங்கே? என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.  

    ஏற்கனவே வீரர்கள் தங்களது மனைவி, தோழிகளுடன் அதிக நேரத்தை செலவிடுவதை குறைத்து, போட்டிகளில் கவனத்தை செலுத்துமாறு கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது. 
    ×