என் மலர்tooltip icon

    இந்தியா

    Honey trap: பாகிஸ்தான் முகவர்கள் வலையில் விழுந்த தானே இன்ஜீனியர் - போர்க்கப்பல் விவரங்கள் கசிவு
    X

    Honey trap: பாகிஸ்தான் முகவர்கள் வலையில் விழுந்த தானே இன்ஜீனியர் - போர்க்கப்பல் விவரங்கள் கசிவு

    • ஒரு பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியராக, வர்மா போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் ஏற அனுமதிக்கப்பட்டார்.
    • தங்களை இளம்பெண்களாக சர்மாவுக்கு அறிவுகப்டுத்திக்கொண்டனர்.

    பாகிஸ்தான் உளவுத்துறை முகவர்களுக்கு இந்திய போர்க்கப்பல்கள் பற்றிய தகவல்களை வழங்கியதற்காக மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரவீந்திர வர்மா (27) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

    காவல்துறையினரின் கூற்றுப்படி, தானேயில் வசிக்கும் ரவீந்திர வர்மா ஒரு தனியார் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

    அவருக்கு 2024 ஆம் ஆண்டு பாயல் சர்மா மற்றும் இஸ்ப்ரீத் என்ற பேஸ்புக் கணக்குகளில் இருந்து Friend request கோரிக்கைகளைப் பெற்றார். இந்த பாகிஸ்தான் முகவர்கள் தங்களை இளம்பெண்களாக சர்மாவுக்கு அறிவுகப்டுத்தி அவருக்கு ஆசை காட்டி ஹனிட்ராப்பில் விழ வைத்தனர்.

    ஒரு பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியராக இருந்ததால், வர்மா போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் ஏற அனுமதிக்கப்பட்டார்.

    அவர் தன்னுடன் ஒரு செல்போனையும் எடுத்துச் சென்றார். தனது பணிகளை முடித்த பிறகு, கப்பல்கள் பற்றிய ரகசிய தகவல்களைச் சேகரித்து பாகிஸ்தான் முகவர்களுக்கு வழங்குவார்.

    அவர் படங்கள் மற்றும் பிற வடிவமைப்புகளை வரைவதன் மூலம் தகவல்களை வழங்குவார். சில நேரங்களில் அவர் ரகசிய தகவல்களை ஆடியோ வடிவில் கூட தெரிவிப்பார். இந்த தகவல்களுக்காக அவருக்கு பணம் வழங்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×