என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் தொழில் அதிபர்"

    • சாதாரணமாக நகரங்களில் வீடு வாங்குவது என்பது சில லட்சங்களில் முடிந்துவிடும்.
    • சென்னை போன்ற பெரு நகரங்களில் கோடிகளை தொட்டுவிடும்.

    சொந்த வீடு என்பது நம் ஒவ்வொருவரின் கனவு. மாதச் சம்பளம் பெறும் நடுத்தர மக்கள் பலர், வங்கிக்கடன் மூலம் தங்களது சொந்த வீடு என்னும் லட்சியத்தை நிறைவேற்றுகிறார்கள்.

    ஆனால் அதற்கான மாதத்தவணையை கட்டி முடிப்பதற்குள், போதும் போதும் என்றாகிவிடும். இருந்தாலும், மற்றச் செலவினங்களை குறைத்து பலர் தங்களது கனவு இல்லத்தை சொந்தமாக்குகிறார்கள்.

    சாதாரணமாக நகரங்களில் வீடு வாங்குவது என்பது சில லட்சங்களில் முடிந்துவிடும். சென்னை போன்ற பெரு நகரங்களில் கோடிகளை தொட்டுவிடும். பெரு நகரங்களின் முக்கிய பகுதிகளில் வீடு வாங்குவது என்பது நடுத்தர மக்களுக்குத்தான் சிரமம். கோடீஸ்வரர்களுக்கு இல்லை.

    ஆனால் கோடீஸ்வரர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு பெண், பல கோடிகளை கொட்டி 2 வீடுகளை வாங்கியுள்ளார். அதன் மதிப்பை கேட்டால் தலை சுற்றிவிடும். அதுவும் அவர் இந்தியாவின் பொருளாதார நகரமான மும்பையில் அந்த வீடுகளை வாங்கியுள்ளார்.

    அவரது பெயர் லீனா காந்தி திவாரி. பிரபல பன்னாட்டு மருந்து கம்பெனியை நடத்தி வருகிறார். மும்பையில் மிகவும் மதிப்பு மிக்க வொர்லியில் நமன் சனாவில் 40 அடுக்கு மாடிகளை கொண்ட குடியிருப்பில் 2 வீடுகளை அவர் வாங்கியுள்ளார். அதன் விலை ரூ.639 கோடி. இதுதான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    அரபிக்கடலை பார்க்கும் வகையில் அமைந்துள்ள அந்த பிளாட்டுகள் 22,572 சதுர அடி கொண்டது. சதுர அடிக்கு ரூ.2.83 லட்சம் விலையாக கொடுத்து அந்த வீடுகளை அவர் வாங்கியுள்ளார். இதற்காக அவர் ஜி.எஸ்.டி.யாக மட்டும் ரூ.63.9 கோடி செலுத்தியுள்ளார் என்பது பத்திரப்பதிவு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    எனவே அவர் வாங்கிய 2 வீடுகளின் மொத்த மதிப்பு ரூ.703 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.

    கோடிகளை கொட்டி வீடு வாங்கிய பெண் தொழில் அதிபர் லீனா காந்தி திவாரி, பிரபல இந்திப்பட நடிகை ஜூகிசாவ்லாவின் நெருங்கிய தோழியாவார்.

    மும்பை வொர்லி நமன் சனாவில் இதுபோன்று கோடிகளில் வீடு வாங்குவது ஒன்றும் புதிது அல்ல. சமீபத்தில் கோடாக் மஹிந்த்ரா வங்கியின் நிறுவனர் உதய் கோடாக், 22 அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.400 கோடிக்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர்.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பழையபாளையம் கீதா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி மஞ்சுளா தேவி (55). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். செந்தில்குமார் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    தொழில் அதிபரான மஞ்சுளாதேவி கிரானைட் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் தற்போது அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். மஞ்சுளா தேவி மட்டும் வீட்டில் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் அவ்வப்போது பூந்துறையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று வருவார். மஞ்சுளாதேவியின் வீடு கீழ்த்தளம் மற்றும் முதல் மாடி கொண்ட வீடாக உள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று மஞ்சுளா தேவி தனது தாயாரை பூந்துறையில் உள்ள அவரது வீட்டில் கொண்டு விட்டுவிட்டு கொல்கத்தாவில் உள்ள காளி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுவிட்டார். பின்னர் சாமி கும்பிட்டு விட்டு நேற்று மஞ்சள் தேவி மீண்டும் வீட்டுக்கு வந்தார்.

    அப்போது வீட்டின் ஜன்னல் கதவுகள் உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கதவை திறந்து உள்ளே சென்றபோது வீட்டின் முதல் மாடி கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டில் பீரோ இருக்கும் அறைக்கு சென்றபோது பீரோ உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. மேலும் அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.

    பீரோவில் இருந்த வைரத்தோடு 3 ஜோடி, வைர வளையல் ஒரு ஜோடி, 4 வைர மோதிரம், 7 ஜோடி தங்கத்தோடு, 3 தங்க மோதிரம், 4 தங்க வளையல்கள், 3 தங்க பவள மாலை என மொத்தம் 18 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது. மேலும் பீரோவில் இருந்த ரூ.4.50 லட்சம் ரொக்க பணமும் திருட்டு போய் இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.12 லட்சத்து 54 ஆயிரம் ஆகும்.

    இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு மஞ்சுளாதேவி புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 2 நபர்கள் உள்ளே வருவது பதிவாகி இருந்தது. ஆனால் அந்த நபர்கள் சி.சி.டி.வி. கேமிராவை திருப்பி வைத்து விட்டதால் சரியாக அடையாளம் தெரியவில்லை.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்டு இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால் மஞ்சுளா தேவி பற்றி நன்கு தெரிந்தவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ×