search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "veer savarkar"

    • கர்நாடக சட்டசபையில் இருந்து சாவர்க்கர் உருவப்படத்தை அகற்றுவேன் என பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
    • காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கேவுக்கு எதிராக மும்பை, நாக்பூரில் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கே நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கர்நாடக சட்டசபையில் இருந்து சாவர்க்கரின் உருவப்படத்தை அகற்றுவது சரியானது. அனுமதித்தால் அதை அகற்றுவேன் என தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், சாவர்க்கரின் சித்தாந்தம் வெறுப்பைத் தூண்டும் வகையில் இருப்பதால் கர்நாடக சட்டசபையில் அவரது புகைப்படம் இருக்கக் கூடாது என தான் கருதுகிறேன். சாவர்க்கருக்கு வீர் பட்டம் கொடுத்தது யார்? அதில் தெளிவு இல்லை. பா.ஜ.க.வுக்கு தெரிந்தால் சொல்லட்டும். சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் ஓய்வூதியம் வாங்கினாரா இல்லையா? மன்னிப்பு கடிதம் எழுதினாரா, இல்லையா என கேள்வி எழுப்பினார்.

    இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கேவுக்கு எதிராக மும்பை மற்றும் நாக்பூரில் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், வீர சாவர்க்கரின் பேரனான ரஞ்சித் சாவர்க்கர் கூறுகையில், காங்கிரஸ் நீண்ட காலமாக வீர் சாவர்க்கரையும் புரட்சியாளர்களையும் துஷ்பிரயோகம் செய்து வருகிறது என கண்டனம் தெரிவித்துள்ளார்.

    • வீர சாவர்க்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
    • ரூபாய் நோட்டுகளில் வீர சாவர்க்கர் உருவம் பொறிக்க வேண்டும் என இந்து மகாசபா கோரிக்கை விடுத்தது.

    லக்னோ:

    சுதந்திரப் போராட்ட வீரரும், இந்து மகாசபா முன்னாள் தலைவருமான வீர சாவர்க்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

    உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள இந்து மகாசபா அலுவலகத்தில் நினைவுநாள் நிகழ்ச்சி நடந்தது. நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து, மத்திய அரசுக்கு இந்து மகாசபா சார்பில் ஒரு கடிதம் எழுதப்பட்டது. அந்தக் கடிதத்தில் கூறியதாவது:

    ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்திக்கு பதிலாக வீர சாவர்க்கர் மற்றும் இதர சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவங்களைப் பொறிக்க வேண்டும். மேலும், பாராளுமன்ற கட்டிடத்துக்குச் செல்லும் சாலைக்கு வீர சாவர்க்கர் பெயரை சூட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • வீர சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
    • இந்தக் கருத்துக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது.

    மும்பை:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை நடத்தி வருகிறார்.

    இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, சுதந்திரப் போராட்ட வீரரும், இந்து மகாசபையின் முன்னோடி தலைவர்களில் ஒருவராக விளங்கியவருமான வீர சாவர்க்கர் ஆங்கிலேயேர்களுக்கு உதவியதாகவும் அவர்களின் ஆதரவை எதிர்பார்த்து கருணை மனு கொடுத்ததாகவும் கூறினார். அதற்கு ஆதாரமாக ஒரு கடிதத்தையும் வெளியிட்டார்.

    ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பிட் பாத்ரா கூறுகையில், நாட்டின் பெருமையாக விளங்கிய வீர சாவர்க்கரை ராகுல் காந்தி அவமரியாதை செய்திருக்கிறார் . வீர சாவர்க்கர் மிகச் சிறந்த விடுதலைப் போராட்ட வீரர் என முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியே புகழாரம் சூட்டியுள்ளார். இந்திரா காந்தி சொல்வது பொய்யா அல்லது ராகுல் காந்தி சொல்வது பொய்யா என சோனியா காந்தி குடும்பம் விளக்க வேண்டும். தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு சிறை சென்றார்கள் என சோனியா காந்தி குடும்பம் நினைத்துக் கொண்டிருக்கிறது என காட்டமாக தெரிவித்தார்.

    மேலும், வீர சாவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

    இந்நிலையில், தனது தாத்தா குறித்து ராகுல் காந்தி அவமதித்து விட்டார் எனக்கூறி ரஞ்சித் சாவர்க்கர் சிவாஜி பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    சுதந்திரப் போராட்ட வீரரான வீர சவர்க்காருக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
    புதுடெல்லி:

    சுதந்திரப் போராட்ட வீரரான வீர சவர்க்காரின் பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது சேவையை நினைவு கூரும் வகையில் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், சுதந்திரப் போராட்ட வீரரான வீர சவர்க்காருக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இன்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், வீர சவர்க்காரின் மன தைரியம், தேசப்பற்று மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவை வலுவான இந்தியாவை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்துள்ளன. நிறைய பேருக்கு அவர் முன்னுதாரணமாக விளங்கி வருகிறார் என பதிவிட்டுள்ளார்.
    ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி புகைப்படத்தை அகற்றிவிட்டு பதிலாக சவார்கர் படத்தை இடம்பெறச்செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு அகில பாரத இந்து மஹாசபை கோரிக்கை விடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்துத்துவ இயக்கங்களின் முன்னோடியாக கருதப்படும் விநாயக் தாமோதர் சவாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என சில அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவரது பிறந்தநாள் நேற்று இந்த அமைப்பினரால் விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில், ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி புகைப்படத்தை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக சவார்கர் படத்தை இடம்பெறச்செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு அகில பாரத இந்து மஹாசபை கோரிக்கை விடுத்துள்ளது.

    காந்தி மற்றும் சவார்கர்

    ×