search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Currency notes"

    • 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
    • 2,000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லத்தக்கவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

    கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அப்போது, புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

    கடந்த மே 19-ந் தேதி, அந்த நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அவற்றை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாம் என்று அறிவித்தது. பின்னர், இந்த கால அவகாசம், அக்டோபர் 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து, 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இன்று 2000 ரூபாய் நோட்டுகளில் கிட்டத்தட்ட 97.69 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளதாகவும் மற்றும் 8,202 கோடி ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடம் புழக்கத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்ட மே 19, 2023 அன்று வணிகம் முடிவடையும்போது ரூ.3.56 லட்சம் கோடியாக புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு மார்ச் மாத வணிக முடிவில் ரூ.8,202 கோடியாகக் குறைந்துள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    மேலும், இதனால், மே 19, 2023 நிலவரப்படி புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 97.69 சதவீதம் திரும்பி வந்துவிட்டன. இருப்பினும், 2,000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லத்தக்கவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கட்டிலில் படுத்தபடி ரூ.500 நோட்டுக்களை உடல் மீது கொட்டி தூங்குவது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.
    • இந்தப் படத்தை பார்த்த பலர் சமூக வலைதளங்களில் பல விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

    அசாமின்  ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (யுபிபிஎல்) தலைவர் பெஞ்சமின் பாசுமாதாரி. உடல்குரி மாவட்டத்தில் உள்ள பைரகுரியில் கிராம சபை மேம்பாட்டுக் குழுவின் தலைவராக உள்ளார்.

    தற்போது இவர் கட்டிலில் படுத்தபடி ரூ.500 நோட்டுக்களை உடல் மீது கொட்டி தூங்குவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்தப் படத்தை பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அந்த அரசியல் தலைவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் தற்போது எழுந்து வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், இவ்விவகாரம் பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.




    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த புகைப்படம் அதிகளவில் தற்போது பரவி வருகிறது. இந்தப் படத்தை பார்த்த பலர் சமூக வலைதளங்களில் பல விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

    NDA மற்றும் UPPL ஆகிய இரு கட்சிகளும் ஊழலற்ற ஆட்சியை உறுதி செய்வதாக உறுதியளித்து வரும் நிலையில், இப்படி ஒரு புகைப்படம் வெளியாகி இருப்பது இரு கட்சிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் தரிசனம் செய்து வந்தனர்.
    • பழைய நோட்டுகளை வங்கியில் மாற்ற ஊர் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கண்ணகுருக்கை மேல் நாச்சிப்பட்டு பகுதியில் பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் தரிசனம் செய்து வந்தனர்.

    இக்கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை, வரவு செலவு சம்பந்தமாக இரு தரப்பினரிடையே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.

    இதன் காரணமாக உண்டியல் திறக்கப்படாமல் மூடியே வைக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் திருவிழாவும் நடத்தப்படவில்லை. கோவில் மட்டும் தொடர்ந்து கிராம மக்கள் வழிபாட்டில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் செங்கம் தாசில்தார் முருகன் தலைமையில், பாச்சல் போலீசார் முன்னிலையில் சமரச பேச்சு வார்த்தை கூட்டம் கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. அதில் இருதரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது.

    தொடர்ந்து மீண்டும் கோவில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

    7 ஆண்டுகளாக உண்டியல் திறக்கப்படாததால் அதிலிருந்த பெரும்பாலான ரூபாய் நோட்டுகள் மக்கி நிறம் மாறியதோடு கிழிந்திருந்தது.

    மேலும் 2016-ம் ஆண்டு செல்லாததாக அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளும், சமீபத்தில் செல்லாததாக அறிவித்து மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்ட ரூ.2000 நோட்டுகள் சில இருந்ததாகவும் தெரிகிறது. இந்த பழைய ரூபாய் நோட்டுகளை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உண்டியலில் இருந்து சேதமடையாமல் இருந்த புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறைகள் மட்டுமே எண்ணப்பட்டது.

    மேலும், பழைய நோட்டுகளை வங்கியில் மாற்ற ஊர் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    7 ஆண்டுகளாக இருதரப்பு பிரச்சினையால் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்படாமல் அதிலிருந்த பணம் வீணானது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.

    • வீர சாவர்க்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
    • ரூபாய் நோட்டுகளில் வீர சாவர்க்கர் உருவம் பொறிக்க வேண்டும் என இந்து மகாசபா கோரிக்கை விடுத்தது.

    லக்னோ:

    சுதந்திரப் போராட்ட வீரரும், இந்து மகாசபா முன்னாள் தலைவருமான வீர சாவர்க்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

    உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள இந்து மகாசபா அலுவலகத்தில் நினைவுநாள் நிகழ்ச்சி நடந்தது. நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து, மத்திய அரசுக்கு இந்து மகாசபா சார்பில் ஒரு கடிதம் எழுதப்பட்டது. அந்தக் கடிதத்தில் கூறியதாவது:

    ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்திக்கு பதிலாக வீர சாவர்க்கர் மற்றும் இதர சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவங்களைப் பொறிக்க வேண்டும். மேலும், பாராளுமன்ற கட்டிடத்துக்குச் செல்லும் சாலைக்கு வீர சாவர்க்கர் பெயரை சூட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    ரூபாய் நோட்டுகள் மூலம் பரவும் தொற்று நோயை தடுக்க வலியுறுத்தி மத்திய மந்திரி அருண் ஜெட்லிக்கு வர்த்தகர் கூட்டமைப்பு கடிதம் அனுப்பி உள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி அருண் ஜேட்லிக்கு அனைத்து இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு (சி.ஏ.ஐ.டி.) ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    ரூபாய் நோட்டுக்கள் மூலமாக நோய் தொற்று பரவுவதாக ஆய்வறிக்கைகள் மற்றும் ஊடக செய்திகளில் கூறப்பட்டுள்ளது. சிறுநீர் குழாய் நோய் தொற்று, மூச்சு குழாய் நோய் தொற்று, தோல் பாதிப்புகள், வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், செப்கிஸ் போன்ற நோய் பரப்பக்கூடிய கிருமிகள் ரூபாய் நோட்டுகளில் இருப்பதாக பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

    எனவே ரூபாய் நோட்டுகளால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக கூறப்படுவது குறித்து ஆராயும் வகையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பிரவீண் கந்தல்வால் கூறும்போது, “ரூபாய் நோட்டுகளால் பரவும் நோய்க்கிருமிகள் குறித்து ஆண்டுதோறும் விஞ்ஞானிகள் எச்சரித்து வந்தாலும், அது தொடர்பாக எந்த கவனமும் செலுத்தாதது வருந்தத்தக்க வி‌ஷயம்.

    பணத்தை மிக அதிக அளவில் வர்த்தகர்களே கையாளுகின்றனர். இந்த நிலையில் ரூபாய் நோடடுகள் மூலம் நோய் கிருமிகள் பரவுவது உண்மையென்றால் வர்த்தகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள்” என்றார்.  #CurrencyNotes
    திருப்பதியில் 80 வயது மூதாட்டி ஒருவர் கோவில் வாசலில் பிச்சை எடுத்து சிறிது, சிறிதாக சேர்த்த பணத்தில், செல்லாத ரூ.70 ஆயிரம் நோட்டுகள் வைத்திருந்ததை என்னவென்று சொல்வது தெரியவில்லை.
    திருப்பதி:

    திருப்பதி அருகேயுள்ள குந்திரபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கந்தம்மா (80). இவரை உறவினர்கள் யாரும் கண்டுகொள்ளாமல் கைவிட்டனர். எனவே திருப்பதி வந்த அவர் கரி மாரியம்மன் கோவில் அருகே தங்கி பிச்சை எடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் மயங்கி கிடந்தார். ரோட்டில் சென்றவர்கள் பார்த்து திருப்பதி மேற்கு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் அங்கு சென்றார். கந்தம்மாவை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தார். அப்போது பிச்சை எடுத்து சேர்த்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கந்தம்மாவிடம் இருந்தது.

    கடந்த ஆண்டு மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்தது. அதில் 70 ஆயிரம் செல்லாத ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதை பாங்கியில் கொடுத்து மாற்ற முடியாததால் அவற்றையும் தானே வைத்து இருந்தது தெரியவந்தது.


    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கந்தம்மா தற்போது நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவரது பணத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தார்.

    உறவினர்களால் அனாதையாக கைவிடப்பட்ட கந்தம்மாவுக்கு திருமணமாகி விட்டது. அதன்பிறகு அவர் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகருக்கு வந்து தங்கியிருந்தார். 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனது சொந்த கிராமமான குந்திரபாக்கம் வந்தார்.

    அவருக்கு ஒரு மகள் இருந்தார். அவர் மரணம் அடைந்துவிட்டதை அடுத்து ஆதரவற்ற அனாதையானார். எனவே கடந்த 5 ஆண்டுகளாக திருப்பதி கரிமாரியம்மன் கோவிலில் தங்கி பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

    இவருக்கு மாணிக்யா காரி என்ற தம்பி இருக்கிறார். அவர் திருப்பதியில் தங்கி இருக்கிறார். அவரை நாங்கள் யாரும் பிச்சை எடுக்க வறுபுறுத்தவில்லை. எங்களுடன் தங்க மறுக்கிறார் என அவர் கூறினார். கந்தம்மாவுக்கு உறவினர்களுடன் நல்ல உறவு இல்லை. தனது பணத்தை அவர்கள் பறித்து கொள்வார்கள் என பயந்து தனியாக ஒதுங்கி வாழ்கிறார்.
    ×