search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூபாய் நோட்டுகளால் நோய் தொற்று அபாயம் - மத்திய மந்திரிக்கு வர்த்தகர் கூட்டமைப்பு கடிதம்
    X

    ரூபாய் நோட்டுகளால் நோய் தொற்று அபாயம் - மத்திய மந்திரிக்கு வர்த்தகர் கூட்டமைப்பு கடிதம்

    ரூபாய் நோட்டுகள் மூலம் பரவும் தொற்று நோயை தடுக்க வலியுறுத்தி மத்திய மந்திரி அருண் ஜெட்லிக்கு வர்த்தகர் கூட்டமைப்பு கடிதம் அனுப்பி உள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி அருண் ஜேட்லிக்கு அனைத்து இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு (சி.ஏ.ஐ.டி.) ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    ரூபாய் நோட்டுக்கள் மூலமாக நோய் தொற்று பரவுவதாக ஆய்வறிக்கைகள் மற்றும் ஊடக செய்திகளில் கூறப்பட்டுள்ளது. சிறுநீர் குழாய் நோய் தொற்று, மூச்சு குழாய் நோய் தொற்று, தோல் பாதிப்புகள், வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், செப்கிஸ் போன்ற நோய் பரப்பக்கூடிய கிருமிகள் ரூபாய் நோட்டுகளில் இருப்பதாக பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

    எனவே ரூபாய் நோட்டுகளால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக கூறப்படுவது குறித்து ஆராயும் வகையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பிரவீண் கந்தல்வால் கூறும்போது, “ரூபாய் நோட்டுகளால் பரவும் நோய்க்கிருமிகள் குறித்து ஆண்டுதோறும் விஞ்ஞானிகள் எச்சரித்து வந்தாலும், அது தொடர்பாக எந்த கவனமும் செலுத்தாதது வருந்தத்தக்க வி‌ஷயம்.

    பணத்தை மிக அதிக அளவில் வர்த்தகர்களே கையாளுகின்றனர். இந்த நிலையில் ரூபாய் நோடடுகள் மூலம் நோய் கிருமிகள் பரவுவது உண்மையென்றால் வர்த்தகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள்” என்றார்.  #CurrencyNotes
    Next Story
    ×