search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புரட்சியாளர்களை தொடர்ந்து அவமதிக்கும் காங்கிரஸ்: ரஞ்சித் சாவர்க்கர் ஆவேசம்
    X

    புரட்சியாளர்களை தொடர்ந்து அவமதிக்கும் காங்கிரஸ்: ரஞ்சித் சாவர்க்கர் ஆவேசம்

    • கர்நாடக சட்டசபையில் இருந்து சாவர்க்கர் உருவப்படத்தை அகற்றுவேன் என பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
    • காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கேவுக்கு எதிராக மும்பை, நாக்பூரில் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கே நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கர்நாடக சட்டசபையில் இருந்து சாவர்க்கரின் உருவப்படத்தை அகற்றுவது சரியானது. அனுமதித்தால் அதை அகற்றுவேன் என தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், சாவர்க்கரின் சித்தாந்தம் வெறுப்பைத் தூண்டும் வகையில் இருப்பதால் கர்நாடக சட்டசபையில் அவரது புகைப்படம் இருக்கக் கூடாது என தான் கருதுகிறேன். சாவர்க்கருக்கு வீர் பட்டம் கொடுத்தது யார்? அதில் தெளிவு இல்லை. பா.ஜ.க.வுக்கு தெரிந்தால் சொல்லட்டும். சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் ஓய்வூதியம் வாங்கினாரா இல்லையா? மன்னிப்பு கடிதம் எழுதினாரா, இல்லையா என கேள்வி எழுப்பினார்.

    இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கேவுக்கு எதிராக மும்பை மற்றும் நாக்பூரில் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், வீர சாவர்க்கரின் பேரனான ரஞ்சித் சாவர்க்கர் கூறுகையில், காங்கிரஸ் நீண்ட காலமாக வீர் சாவர்க்கரையும் புரட்சியாளர்களையும் துஷ்பிரயோகம் செய்து வருகிறது என கண்டனம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×