என் மலர்
நீங்கள் தேடியது "lucknow court"
- ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக லக்னோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
- இந்த வழக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு ஜாமின் வழங்கியது.
லக்னோ:
இந்தியா-சீனா இடையே மோதல் நிலவிவந்த காலகட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதி சூழ்நிலையை மத்திய அரசு முறையாக கையாளவில்லை என கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டார்.
இந்திய ஆயுதப்படையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் ராகுல் காந்தி கருத்து தெரிவித்ததாக எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற உதய்சங்கர் ஸ்ரீ வஸ்தவா என்பவர் லக்னோ கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அவர் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் சம்மனை ரத்துசெய்ய ஐகோர்ட மறுத்துவிட்டது.
இந்நிலையில், லக்னோ கோர்ட்டில் இன்று ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். அப்போது ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கி மாவட்ட நீதிமன்ற கூடுதல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
- பிரபல தாதா முக்தார் அன்சாரியின் நெருங்கிய உதவியாளர் சஞ்சீவ் லக்னோ.
- இவர் லக்னோ கோர்ட்டு வளாகத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
லக்னோ:
காங்கிரஸ் மூத்த தலைவரான அவதேஷ் ராய் கடந்த 1991-ம் ஆண்டு ஆகஸ்டு 3-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கு கடந்த ஆண்டு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. வாரணாசியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.வுக்கான கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.
கடந்த மே 19-ம் தேதி விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கில் பிரபல தாதா முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
நில அபகரிப்பு, மிரட்டல் மற்றும் கொலை உள்பட 60-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல தாதா முக்தார் அன்சாரி, கடந்த 2005-ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், முக்தார் அன்சாரியின் நெருங்கிய உதவியாளரான சஞ்சீவ் மகேஸ்வரி ஜீவா லக்னோ கோர்ட் வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். வழக்கறிஞர்கள் போல் வேடமணிந்து வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. துப்பாக்கி சூடு நடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
முக்தார் அன்சாரியின் நெருங்கிய உதவியாளராகக் கருதப்படும் ஜீவா, பா.ஜ.க. தலைவர் பிரம்மதத்தா திவேதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். ஜீவா மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
- இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
லக்னோ:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த 2022-ம் ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் அகோலாவில் 2022, டிசம்பர் 17ல் நடந்த கூட்டத்தில் பேசியபோது வீர சாவர்க்கர் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கறிஞர் நிருபேந்திர பாண்டே ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, வழக்கு விசாரணைக்கு இன்று ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு லக்னோ கோர்ட் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சாவர்க்கர் குறித்த அவதூறு வழக்குக்காக லக்னோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.






