என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • அஜித் பவார் தலைமையிலான அணிதான் தேசியவாத காங்கிரஸ் என அங்கீகரிக்கப்பட்டது.
    • கடிகாரம் சின்னத்தை பயன்படுத்தும் அதிகாரமும் அஜித் பவார் அணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பல எம்.எல்.ஏ.க்களை பிரித்துக் கொண்டு சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் ஏக் நாத் ஷிண்டேவின் ஆட்சியில் இணைந்து அம்மாநிலத்தின் துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    சரத் பவார் நாங்கள்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்றார். அதேவேளையில் அஜித் பவார் நாங்கள்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்றார். இதனால் இரு தரப்பிலும் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.

    இது தொடர்பாக ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையம், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என நேற்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. அத்துடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கடிகாரம் சின்னத்தை பயன்படுத்தும் உரிமையையும் வழங்கியது.

    இது சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வோம் என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் உத்தவ் தாக்கரேயின் மகனும், மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற உறுப்பினருமான ஆதித்யா தாக்கரே தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில் "தேர்தல் ஆணையம் தானாகவே திருட்டை சட்டப்பூர்வமாக்கத் தொடங்கும்போது, ஜனநாயகம் அழிந்துவிட்டது என்பது உங்களுக்கு தெரியும். தேர்தல் ஆணையம் மோசடி செய்தது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. அது தேர்தல் ஆணையம் அல்ல. "முற்றிலும் சமரசம் (Entirely Compromised)". நாங்கள் சுதந்திரமானவர்கள் அல்ல, நியாயமான ஜனநாயகம் இல்லை என்பதை அனைவருக்கும் அவர்கள் காட்டுகிறார்கள்" என்றார்.

    முன்னதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியில் இருந்து ஏக் நாத் ஷிண்டே பிரிந்து சென்று நாங்கள்தான் சிவசேனா கட்சி எனத் தெரிவித்தது. அத்துடன் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இது தொடர்பான விவகாரத்திலும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிதான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அஜித் பவாரின் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி.
    • பாஜக கூட்டணியில் இணைந்த அஜித் பவார், துணை முதலமைச்சரானர்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிக எம்.எல்.ஏ.க்களை சரத் பவாரின் மருமகனான அஜித் பவார் தன் கைவசம் வைத்திருக்கிறார். இதனால், அஜித் பவாரின் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

    இதன்படி, கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை அஜித் பவாருக்கு கொடுப்பது என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனால், மூத்த தலைவரான சரத் பவாருக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

    நாடாளுமன்ற மேலவை தேர்தலை முன்னிட்டு, அணியின் பெயரை தேர்ந்தெடுக்கும்படி சரத் பவார் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளார்.

    இதன்படி, வருகிற 7-ந்தேதி பிற்பகல் 3 மணிக்குள், அவர்களுடைய அணியின் பெயர் மற்றும் அடையாளம் ஆகியவற்றை தெரிவிக்கும்படி, கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

    கடந்தாண்டு ஜூலை மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்த அஜித் பவார், துணை முதலமைச்சரானர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சந்தா கோச்சார் ஐசிஐசிஐ தலைமை பொறுப்பிலிருந்து பதவி விலகினார்
    • கோச்சார் தம்பதி மற்றும் 6 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது

    1979ல், மும்பையில் வேணுகோபால் தூத் என்பவரால் தொடங்கப்பட்டு பன்னாட்டு நிறுவனமாக வளர்ச்சி பெற்றது வீடியோகான் குழுமம் (Videocon group).

    2009 ஜூன் மாதத்திலிருந்து 2011 அக்டோபர் காலகட்டம் வரை, வீடியோகான் குழுமத்திற்கு, ஐசிஐசிஐ தனியார் வங்கியின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான சந்தா கோச்சார் (Chanda Kochhar) , தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து, நிறுவனர் வேணுகோபால் தூத்திற்கு ரூ.3,250 கோடி கடனாக வழங்கியதாகவும், தகுதியற்ற கடன் வழங்கியதற்கு ஈடாக சந்தாவின் கணவர் தீபக் கோச்சாருக்கு வீடியோகான் லஞ்சம் வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    இதை தொடர்ந்து சந்தா கோச்சார் வங்கியின் உயர் பதவியிலிருந்து விலகினார்.

    இதை விசாரித்த மத்திய புலனாய்வு துறை (CBI) 2023 ஏப்ரல் மாதம், சந்தா கோச்சார், அவர் கணவர் தீபக் கோச்சார், மற்றும் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்தது.

    2022 டிசம்பர் 23 அன்று சந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சார் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டனர். 3 நாட்கள் கடந்து வேணுகோபால் தூத் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார்.

    இது தொடர்பான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நடந்தது.

    இந்நிலையில், இன்று சந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட போது விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என நம்ப இடமிருப்பதாகவும், அவரது கைது சட்டவிரோதம் என்றும் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    கோச்சார் தம்பதியினருக்கு இடைக்கால ஜாமீனையும் நீதிமன்றம் வழங்கியது.

    • ஆளும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
    • இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கண்பத் கெய்க்வாட். இவருக்கும் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் கல்யாண் தொகுதி பொறுப்பாளர் மகேஷ் கெய்க்வாட்டுக்கும் இடையே நிலத் தகராறு இருந்துள்ளது.

    இதற்கிடையே, உல்ஹாஸ் நகர் பகுதியில் உள்ள ஹில் லைன் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக எம்.எல்.ஏ. கண்பத் கெய்க்வாட்டின் மகன் நேற்று இரவு சென்றுள்ளார். அப்போது எதிர்தரப்பில் மகேஷ் கெய்க்வாட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் வந்துள்ளனர்.

    தகவலறிந்த எம்.எல்.ஏ. கண்பத் கெய்க்வாட்டும் அங்கு விரைந்தார். இன்ஸ்பெக்டர் அறையில் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது கைகலப்பு ஏற்பட எம்.எல்.ஏ. கண்பத் கெய்க்வாட் தனது துப்பாக்கியை எடுத்து எதிர்தரப்பினரை நோக்கி சுட்டார். இதில் மகேஷ் கெய்க்வாட், அவரது உதவியாளர் ஆகியோர் காயமடைந்தனர்.

    உடனே இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்திய எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.

    ஆளும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இடையே நடந்த இந்த மோதல் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் புறா கூண்டு போல இந்த பிளாட் உள்ளது.
    • கழிவறைகள், குளிப்பதற்கு போதுமானதாக இல்லை.

    மும்பையில் உள்ள ஒரு பெண் 2பிஎச்கே எனப்படும் பிளாட்டை காட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், 323 சதுர அடி பரப்பளவில் 2பிஎச்கே பிளாட் ஒன்றை அந்த பெண் காட்டுகிறார். 23 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ள அந்த பிளாட்டின் விலை ரூ.75 லட்சம் என கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி 7 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது.

    இதைப்பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒரு பயனர், இதை 2பிஎச்கே என்று அபத்தமாக அழைப்பதற்கு பதிலாக அவர்கள் அதை ஒரு ஸ்டூடியோ வீடு என கூற வேண்டும். இது பேச்சுலர்களின் வசிப்பிடமாக இருக்க வாய்ப்புள்ளது. இதில் இவ்வளவு முதலீடு செய்வது வீண் விரயம். இந்த 75 லட்சம் ரூபாய்க்கு ஐதராபாத்தில் 1000 சதுர அடியில் 2பிஎச்கே கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொரு பயனர் தனது பதிவில், ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் புறா கூண்டு போல இந்த பிளாட் உள்ளது. கழிவறைகள், குளிப்பதற்கு போதுமானதாக இல்லை. இதை வாங்குபவர்கள் மழைக்காலத்தில் கண்ணீர் விட்டு அழ நேரிடும் என பதிவிட்டுள்ளார். இதைப்போன்று பல பயனர்களும் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் ரிஷப் நிகம் ஓட்டல் அறையில் இருந்து வெளியேறும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
    • பட்டாசு சத்தம் காரணமாக துப்பாக்கியால் சுட்ட சத்தம் தங்களுக்கு கேட்கவில்லை என ஓட்டல் ஊழியர்கள் தெரிவித்தனர்.

    மும்பை:

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் வந்தனா திவேதி (வயது26). இவர் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    புனே ஹின்ஜேவாடி பகுதியில் உள்ள ஓட்டலில் கடந்த சனிக்கிழமை இரவு வந்தனா திவேதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரை படுகொலை செய்ததாக அவரது காதலன் ரிஷம் நிகமை(30) போலீசார் நவிமும்பையில் கைது செய்தனர். சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் ரிஷப் நிகம் ஓட்டல் அறையில் இருந்து வெளியேறும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    இதன் மூலம் அவர் தான் கொலையாளி என்று கருதிய போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கொலை நடந்த இரவு ஹின்ஜேவாடி பகுதியில் மராத்தா சமூக இடஒதுக்கீடு வெற்றி கொண்டாட்டம் நடந்து உள்ளது. அப்போது அதிகளவு பட்டாசு வெடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நேரத்தில் ரிஷப் நிகம், வந்தனா திவேதியை துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார். அவரது தலை, கழுத்து பகுதியில் 4 குண்டுகள் பாய்ந்து அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து உள்ளார். பட்டாசு சத்தம் காரணமாக துப்பாக்கியால் சுட்ட சத்தம் தங்களுக்கு கேட்கவில்லை என ஓட்டல் ஊழியர்கள் தெரிவித்தனர்.

    மேலும் பெண் ஐ.டி. ஊழியர் கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வந்தனாவும், ரிஷப்பும் 10 ஆண்டுகளுக்கு மேலாக பழக்கத்தில் இருந்து உள்ளனர். 2 பேரும் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர்கள். வேலை காரணமாக வந்தனா புனேக்கு வந்து உள்ளார். அதன் பிறகு 2 பேரின் உறவில் விரிசல் ஏற்பட்டது. வந்தனா தன்னை விட்டுவிலகி செல்வதாக ரிஷப் நினைத்து இருக்கிறார். மேலும் சமீபத்தில் 2 முறை அவரை சிலர் தாக்கி உள்ளனர்.

    இந்த தாக்குதலின் பின்னணியில் வந்தனா இருப்பதாக அவர் நினைத்து இருக்கிறார். வந்தனா தன்னைவிட்டு வேறு நபருடன் செல்ல போவதாகவும் அவர் சந்தேகப்பட்டு உள்ளார். இதன் காரணமாக தான் கொலை நடந்து இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • மகாராஷ்டிராவில் உள்ள தடோபா புலிகள் காப்பகத்திற்கு சச்சின் சென்றுள்ளார்.
    • இயற்கை அதிசயத்தை கண்டதில் எனக்கு மிக பெரிய பிரமிப்பு ஏற்பட்டது.

    கிரிக்கெட் ஜாம்பவன் சச்சின் தெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தேசிய சுற்றுலாத்தினத்தை கொண்டாடும் வகையில் சச்சின் வெளியிட்ட அந்த வீடியோவில், மராட்டியத்தில் உள்ள தடோபா புலிகள் காப்பகத்திற்கு சச்சின் சென்றுள்ளார்.

    அங்கு 3 தலைமுறை புலிகள் நடந்து வரும் காட்சியை பார்த்து பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், இந்த இயற்கை அதிசயத்தை கண்டதில் எனக்கு மிக பெரிய பிரமிப்பு ஏற்பட்டது. தேசிய சுற்றுலாத்தினத்தை ஆரவாரத்துடன் கொண்டாடுகிறோம்! தடோபாவில் நான் 3 தலைமுறை புலிகளை பார்த்தேன். ஜூனோபாய் என்ற புலியின் குட்டி வீரா, வீராவின் குட்டிகள் என அனைவரையும் பார்த்தேன். இந்தியாவில் ஆராய்வதற்கு பல இடங்கள் உள்ளன என்று பதிவிட்டு இருந்தார். அவரது இந்த வீடியோ வைரலாகி வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

    • குன்பி சமூகத்தினருக்கு வழங்கும் சான்றிதழ் வழங்க வேண்டும்.
    • கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினரை ஓபிசி (மிகவும் பிற்படுத்தப்பட்டோர்) பட்டியலில் சேர்க்க வேண்டும் என அந்த சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுகுறித்து மகாராஷ்டிர மாநில அரசு ஆலோசித்த வந்த போதிலும் இறுதியான முடிவை எடுக்கவில்லை.

    இந்த நிலையில்தான் குன்பி இனத்தினருக்கு வழங்கும் சான்றிதழ் வழங்க வேண்டும். இலவசக் கல்வி வழங்க வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திய மனோஜ் ஜராங்கே பாட்டீல் போராட்டத்தை அறிவித்தார்.

    அவருடன் ஆயிரக்காணக்கானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டக்குழுவினர் நேற்று நவிமும்பையை வந்தடைந்தனர். நவிமும்பையில் போராட்டக்காரர்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. எங்களது கோரிக்கைகள் ஏற்கடாவிடில், எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை நாங்கள் நாட்டுவோம் என மனோஜ் ஜராங்கே தெரிவித்திருந்தார்.

    இந்த நிலயைில் இரண்டு மந்திரிகள் நேற்றிரவு மனோஜ் ஜராங்கே உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் இன்று காலை 9.30 மணியளவில், மகாராஷ்டிர மாநில அரசு அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுள்ளது. போராட்டம் நிறைவு பெறுகிறது என அறிவித்தார்.

    மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேரில் வந்து மனோஜ் ஜராங்கேயின் போராட்டத்தை முடித்து வைப்பார் எனத் தெரிகிறது.

    தற்போது வரை மகாராஷ்டிரா மாநிலத்தில் குன்பி சான்றிதழ் 37 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் அதன் எண்ணிக்கை 50 லட்சமாக உயரும்.

    • மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன்.
    • அமலாக்கத்துறை அலுவலகம் வரை சுப்ரியா சுலே உடன் சென்றார்.

    சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ரோகித் பவார். இவர் சரத் பவார் குடும்பத்தைச் சேர்ந்தவர். மகாராஷ்டிரா மாநில எம்.எல்.ஏ.-வாகவும் உள்ளார்.

    மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக அலுவலகத்தில் இன்று ஆஜராகும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் ரோகித் பவாருக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.

    அதன்படி இன்று காலை ரோகித் பவார் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவருடன் சரத் பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலே உடன் சென்றார். அமலாக்கத்துறை அலுவலகம் வரை சென்ற அவர், ரோகித் பவார் கையில் அரசியலமைப்பு நகலை வழங்கினார். ரோகித் பவார் அலுவலகம் உள்ளே சென்ற நிலையில், உண்மையே வெல்லும் என சுப்ரியா சுலே தெரிவித்தார்.

    தெற்கு மும்பையில் இருந்து நூற்றுக்காணக்கான தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அமலாக்கத்துறை அலுவலகம் முன் கூடியிருந்தனர். ரோகித் பவாருக்கு ஆதராவாக முழக்கமிட்டனர். அமலாக்கத்துறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மும்பையில் ஊர்வலம் நடைபெற்றது.
    • ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது கல்வீசி தாக்கியதில் சிலர் காயம் அடைந்தனர்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. மதக்கலவரம், வன்முறையில் ஈடுபடும் நபர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது.

    இதுகுறித்து கேள்வி எழுப்பியதும் ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள இடங்களில் வசிப்பவர்கள்தான் இதற்கு முக்கிய காரணம். இதனால் அப்பகுதிகள் இடிக்கப்படுகிறது என உத்தர பிரதேச மாநில அரசு தெரிவித்தது.

    அதேபோல்தான் அரியானா மாநிலத்தில் இந்து அமைப்பினர் நடத்திய பேரணியில் கல்வீச்சு நடைபெற்றது. அப்போது கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பவர்கள் காரணம் என அரியானா அரசு புல்டோசர் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் அனைத்தையும் இடித்து தரைமட்டமாக்கியது.

    பா.ஜனதா அரசு ஆட்சி செய்யும் மாநிலங்களில் புல்டோசர் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.

    இந்த நிலையில்தான் ராமர் கோவில் கும்பாபிஷேகம் தினத்தை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இந்து அமைப்பினர் ஸ்ரீராம் ஷோப யாத்திரையில் ஈடுபட்டனர். ஊர்வலம் மிரா சாலை நயா நகர் பகுதியை கடந்தபோது ஒரு கும்பல் பைக் மற்றும் காரில் காவி கொடியுடன் சென்றவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் சிலர் காயம் அடைந்தனர். கல் மற்றும் கம்புகளால் கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

    இந்த நிலையில் இந்த கல்வீச்சு சம்பவத்திற்கு முக்கிய காரணம் ஆக்கிரமிப்பு இடங்களில் வசித்து வருபவர்கள்தான் என அரசு சார்பில் சட்டவிரோதமான 15 இடங்களை இடித்துத் தள்ள முடிவு செய்தது. இதனால் அப்பகுதிக்கு புல்டோசர் கொண்டு வரப்பட்டது.

    புல்டோசர் மூலம் சட்டவிரோத இடங்களில் கட்டப்பட்ட கட்டடங்கள் இடிக்கும் பணி தொடங்கியது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் இடித்து தள்ளப்பட்டன.

    • மகளிர் ஐ.பி.எல். எனப்படும் பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது.
    • ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் கோப்பை வென்றது.

    மும்பை:

    மகளிர் ஐ.பி.எல். எனப்படும் பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.

    முதலாவது மகளிர் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் கோப்பையை வென்றது.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் வரும் பிப்ரவரி 23-ம் தேதி தொடங்க உள்ளதாகவும், இந்த முறை தொடர் பெங்களூரு, டெல்லியில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


     பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த சீசனைப் போல இந்த சீசனிலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2-வது மற்றும் 3-வது இடம் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் ஆட்டத்தில் மோதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மகளிர் ஐ.பி.எல். தொடர் பிப்ரவரி 23-ம் தேதி முதல் மார்ச் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச் 15-ம் தேதி எலிமினேட்டர் ஆட்டமும், மார்ச் 17-ம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது. எலிமினேட்டர் மற்றும் இறுதிப்போட்டி ஆட்டங்கள் டெல்லியில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

    • ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஜகதம்பா மந்திரில் ஹல்வா தயார் செய்யப்படுகிறது.
    • 6,000 கிலோ ஹல்வா பிரசாதமாகத் தயாரிக்கப்படுகிறது.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவையொட்டி, மகாராஷ்டிர மாநிலம் கோரடியில் உள்ள ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஜகதம்பா மந்திரில் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்னிலையில் உலகின் மிகப்பெரிய கடாயில் 6,000 கிலோ அல்வா தயாரிக்கும் பணி தொடங்கியது. 

    இதுகுறித்து மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் பட்நாவிஸ் கூறுகையில், "இன்று நாக்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோரடி மந்திரில், ராமர் ராம்ஜன்பூமிக்கு வருவதையும், ராம் லல்லாவின் பிரான் பிரதிஷ்டை நிகழ்வையும் குறிக்கும் வகையில், 6,000 கிலோ ஹல்வா பிரசாதமாகத் தயாரிக்கப்படுகிறது.

    சந்திரசேகர் பவான்குலே இந்த முயற்சியை முன்னெடுத்துச் சென்றுள்ளார்" என்றார்.

    ×