என் மலர்
கேரளா
- பாகிஸ்தானின் தொடர் அத்துமீறல் நம்நாட்டில் மக்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை எற்படுத்தி இருக்கிறது.
- எதிரி நாட்டின் பெயர் நம் நாட்டில் இருக்கக்கூடாது என்ற கோரிக்கை எழுந்தது.
திருவனந்தபுரம்:
ஐம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் சுற்றுலா பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகளின் இருப்பிடங்களின் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து பாகிஸ்தானும் பதில் தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையே போர் ஏற்பட்டது. இரு நாட்டினரும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்தியாவின் தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதவில் ஜம்மு காஷ்மீரில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் பலியாகினர்.
இந்தநிலையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து போர் கை விடப்பட்டது. இருந்த போதிலும் பாகிஸ்தான் எப்போது தாக்குதல் நடத்தினாலும் பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்தினர் எல்லைகளில் தொடர்ந்து உஷார் நிலையில் உள்ளனர்.
பாகிஸ்தானின் தொடர் அத்துமீறல் நம்நாட்டில் மக்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை எற்படுத்தி இருக்கிறது. இந்தநிலையில் கேரள மாநிலத்தில் பல ஆண்டுகளாக பிரதான சாலை சந்திப்பின் பெயராக இருந்து வரும் "பாகிஸ்தான் முக்கு" என்ற பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள குன்னத்தூர் கிராம பஞ்சாயத்து நிலக்கல் வார்டில் பிரதான சாலை ஒன்றின் சந்திப்பின் பெயர் "பாகிஸ்தான் முக்கு" என்று வைக்கப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாக அந்த சந்திப்பு அந்த பெயரை வைத்தே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.
இந்தநிலையில் தற்போது நம் நாட்டின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொடர்ந்து, எதிரி நாட்டின் பெயர் நம் நாட்டில் இருக்கக்கூடாது என்ற கோரிக்கை எழுந்தது. பஞ்சாயத்து கவுன்சிலர்கள் அதே கோரிக்கையை வலியு றுத்தினர். "பாகிஸ்தான் முக்கு" என்ற பெயரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று கூறினர்.
இந்த கோரிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பஞ்சாயத்து குழு கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வார்டு உறுப்பினர் அனீஷ்யா முன்வைத்தார். அதற்கு ஏராளமான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து "பாகிஸ்தான் முக்கு" என்ற பெயரை மாற்ற ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
"பாகிஸ்தான் முக்கு" என்ற பெயரை "இவருகலா" என்று மாற்ற முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதற்கான உத்தரவை மாநில அரசு பிறப்பித்தபிறகு முறையான அறிவிப்பு வெளியாகும் என்று கருதப்படுகிறது.
- சிறுமியாக இருந்த பார்வதி 10, 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.
- கிருஷ்ண தேஜா அளித்த ஊக்கமும் அறிவுரையும், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை பார்வதியின் மனதில் விதைத்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் அம்பலப்புழையை சேர்ந்தவர் கே.எஸ்.கோபகுமார். இவர் ஆலப்புழை கலெக்டர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இவருடயை மனைவி ஸ்ரீ கலா, ஆசிரியர். இவர்களது மகள் பார்வதி கோபகுமார் (வயது27). இவர் கடந்த 2010-ம் ஆண்டு 7-ம் வகுப்பு படித்து கொண்டு இருந்த போது, ஒரு நாள் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நடந்த விபத்தில் வலது கையை இழந்தார். அதன்பின்பு அவருக்கு செயற்கை கை பொருத்தப்பட்டது.
எழுதுவது உள்பட வலது கையின் அனைத்து செயல்பாடுகளையும் இடது கையால் நிறைவேற்ற தொடங்கினார். சிறுமியாக இருந்த பார்வதி 10, 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.
தொடர்ந்து பெங்களூருவில் சட்ட கல்லூரியில் படிப்பை முடித்த அவர், இடைக்கால பயிற்சிக்காக ஆலப்புழை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருக்கிறார். அப்போது ஆலப்புழை கலெக்டராக எஸ்.சுகாஸ் பணியாற்றினார். அந்த அலுவலகத்தில் அப்போது உதவி கலெக்டராக கிருஷ்ண தேஜா பணியாற்றி வந்தார். அப்போது அவர் அளித்த ஊக்கமும் அறிவுரையும், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை பார்வதியின் மனதில் விதைத்தது. அந்த விதையை மரமாக்க கடினமாக உழைத்த பார்வதி 2024-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் 282-வது இடத்தை (ரேங்க்) பிடித்து வெற்றி பெற்றார். தற்போது எர்ணாகுளம் கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.
ஒரு கை பலத்தாலும் மன உறுதியாலும், கடின உழைப்பாலும், ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று உதவி கலெக்டராக பொறுப்பேற்றுள்ள பார்வதி கோபகுமாருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. உதவி கலெக்டர் பார்வதியின் தங்கை ரேவதி திருவனந்தபுரத்தில் படித்து வருகிறார்.
- தென்மேற்கு பருவமழை அதற்கு முன்னதாகவே தொடங்கி விடும் என்று தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.
- மிக அதிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் வயநாடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும். அப்போது கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் பல மாவட்டங்களில் மழை பெய்யும். இது ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும்.
முக்கியமாக மேற்கு தொடர்ச்சி மலை இருக்கும் குமரி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பொழியும். இந்த நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 4 நாட்கள் முன்னதாக இந்த மாதம் 27-ந்தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
ஆனால் தென்மேற்கு பருவமழை அதற்கு முன்னதாகவே தொடங்கி விடும் என்று தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்குவதன் அறிகுறியாக தற்போதே பல மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. மேலும் வருகிற 23-ந்தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மாவட்டங்களுக்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதால் அந்த மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஆகவே இந்த மாவட்டங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. வடக்கு கேரளத்தில் உள்ள இந்த மாவட்டங்களில் பொதுமக்களை உஷார்படுத்தும் விதமாக நேற்று மாலை "சைரன் ஒலி" எழுப்பப்பட்டது.
பேரிடர் தயார்நிலை மற்றும் பொது விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் கேரளாவின் "கேடய அமைப்பு" மூலமாக இந்த 4 மாவட்டங்களிலும் "சைரன் ஒலி" எழுப்பப்பட்டது. மிக அதிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் வயநாடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவும், தணணீர் தேங்கும் அல்லது நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை தவிர்க்கவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.
மேலும் மாவட்ட அதிகாரிகள் பிறப்பிக்கும் பாாதுகாப்பு உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்றவும் பொதுமக்களை இந்திய வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தி உள்ளது. கனமழையால் பாதிக்கப்படும் என்று கண்டறியப்பட்டுள்ள இடங்களில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்கின்றனர்.
- கோழிக்கோடு, வயநாடு கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- வருகிற 23-ந்தேதி வரை பல மாவட்டங்களில் பலத்தமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்னதாகவே வருகிற 27-ந்தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே இன்னும் நான்கு, ஐந்து நாட்களில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த வருடம் முன்னதாகவே தொடங்க இருக்கிறது.
இந்தநிலையில் அங்கு பல மாவட்டங்களில் தற்போதே மழை பெய்ய தொடங்கியிருக்கிறது. இன்று 12 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கோழிக்கோடு, வயநாடு கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று வருகிற 23-ந்தேதி வரை பல மாவட்டங்களில் பலத்தமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- காங்கிரஸ் வழங்கிய பெயரை மத்திய அரசு நிராகரித்து சசி தரூர் பெயரை அறிவித்துள்ளது.
- நாங்கள் வழங்கிய பெயரை தவிர்த்து மற்றொரு பெயரை அறிவித்தது நியாயமற்ற என காங்கிரஸ் தெரிவித்திருந்தது..
பாகிஸ்தானில் இருந்து வெளிப்படும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று விளக்கம் அளிப்பதற்கு மத்திய அரசு எம்.பி.க்கள் அடங்கிய குழுவை வழி நடத்தும் 7 பேர் பெயரை அறிவித்துள்ளது. இதில் ஒரு குழுவை வழி நடத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதை சசி தரூர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்த குழுவை அமைப்பதற்கு முன்னதாக எம்.பி.க்கள் பெயரை வழங்குமாறு மத்திய அரசு கட்சிகளிடம் கேட்டுக்கொண்டது. அதனடிப்படையில் காங்கிரஸ் கட்சி ஆனந்த் சர்மா, கவுரவ் கோகாய், ராஜா பரார் மற்றும் நாசர் ஹுசைன் ஆகிய 4 எம்.பி.க்கள் பெயரை வழங்கியது. ஆனால் மத்திய அரசு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டது.
தாங்கள் வழங்கப்படாத எங்கள் கட்சி எம்.பி. பெயரை அறிவித்தது நேர்மையற்றது என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் அரசியல் இருப்பதாக பார்க்கவில்லை என சசி தரூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சசி தரூர் கூறியதாவது:-
இந்த விவகாரத்தில் நான் எந்த அரசியலையும் பார்க்கவில்லை. என்னை பொறுத்தவரையில், நாடு என்று வரும்போது அரசியல் முக்கியமானதாகிறது. நாம் அனைவரும் இந்தியர்கள். தேசத்திற்கு நெருக்கடி வரும்போது, மத்திய அரசு குடிமகனின் உதவியை கேட்கும்போது, வேறு எந்த பதில் சொல்வீர்கள்?.
உலகம் நம்மைப் பற்றி என்ன சொல்கிறது என்பதில் நாம் அனைவரும் ஒரு பங்கைக் கொண்டிருக்க வேண்டும். அந்த மனநிலையில்தான் நான் அதற்கு ஒப்புக்கொண்டேன்.
இவ்வாறு சசி தரூர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் பரிந்துரைத் பெயரை வெளியிட்டு தங்களை இழிவுப்படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறதா? என கேள்வி எழுப்பியதற்கு என்னை யாரும் எளிதில் இழிவுப்படுத்திட முடியாது. என்னுடைய மதிப்பு எனக்குத் தெரியும் என பதில் அளித்தார்.
- முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் புத்தகங்கள் கொண்டு செல்ல தேவையில்லை.
- முதல் 2 வாரங்கள் சமூக பிரச்சனைகள் தொடர்பான விழிப்புணர்வு வகுப்புகள் நடைபெறும்
கேரளாவில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும்போது, முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் புத்தகங்கள் கொண்டு செல்ல தேவையில்லை என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறந்து முதல் 2 வாரங்கள் சமூக பிரச்சனைகள் தொடர்பான விழிப்புணர்வு வகுப்புகள் நடைபெறும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி, போதைப்பொருள் துஷ்பிரயோகம், பொது சொத்துக்களை அழித்தல் மற்றும் உணர்ச்சி கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல தலைப்புகளில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பள்ளிகளில் நடைபெறும் என்று தெரிவித்தார்.
- தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்த இது நேரமில்லை என காங்கிரஸ் கண்டித்தது.
- நான் மத்திய அரசு செய்தி தொடர்பாளரும் அல்ல என காட்டமாக தெரிவித்தார் சசி தரூர்.
திருவனந்தபுரம்:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதியின் எம்.பி.யுமான சசி தரூர் சமீப காலமாக பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளை புகழும் விதமாக பேசி வருகிறார்.
பாகிஸ்தானுடன் இந்தியா மோதல், அதைத்தொடர்ந்து ஏற்பட்ட சண்டை நிறுத்தம் ஆகியவை தொடர்பாக சசி தரூரின் கருத்துக்கள் காங்கிரஸ் தலைமையின் கருத்துக்கு முரணாக அமைந்திருந்தன.
இதற்கிடையே, தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்த இது நேரமில்லை. கட்சியின் கருத்துக்களைப் பொதுமக்களிடம் முன்வைக்க வேண்டும் என அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியது.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் சசி தரூர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
போர்ச்சூழலில் நான் ஒரு இந்தியனாக பேசினேன். நான் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அல்ல. மத்திய அரசு செய்தி தொடர்பாளரும் அல்ல.
நான் என்ன சொல்கிறேனோ அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம். அதில் உடன்பாடு இல்லை என்றால் என்னை தனிப்பட்ட முறையில் குறை கூறலாம், பரவாயில்லை.
எனது தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்துகிறேன் என்பதை மிகத்தெளிவாகக் கூறிவிட்டேன். சர்வதேச அளவில் மிகவும் முக்கியமான ஒரு நேரத்தில், நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்திருக்க வேண்டிய தருணத்தில், நாட்டுக்கான எனது பங்களிப்பு இது. என் கருத்தை ஏற்பதும் நிராகரிப்பதும் கேட்பவரின் விருப்பம் என தெரிவித்தார்.
- கடந்த 2009-ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை மே 23-ந்தேதி தொடங்கியது.
- கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் தமிழகத்திலும் மழை பெய்யும்.
திருவனந்தபுரம்:
தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு 4 நாட்கள் முன்னதாக மே 27-ந்தேதியே தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை மே 23-ந்தேதி தொடங்கியது. அதன்பிறகு வந்த ஆண்டுகளில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டி தொடங்கவில்லை.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் தமிழகத்திலும் மழை பெய்யும். இதனால் தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டை பொறுத்தவரை விவசாயத்துக்கு பருவமழை மிகவும் முக்கியமானதாகும். தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.
- வழக்கமாக தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தான் தொடங்கும்
- இந்தாண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை 4 நாட்கள் முன்கூட்டியே தொடங்கும்
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தாண்டு 10 நாட்களுக்கு முன்னதாகவே வருகிற 13-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் உள்ளது. இதனால் ஜூன் மாதத்திற்கு பதிலாக மே மாதமே தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை 4 நாட்கள் முன்கூட்டியே வரும் 27ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தான் தொடங்கும்.
முன்னதாக தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்களா விரிகுடா, நிக்கோபார் தீவுகளின் சில பகுதிகளில் வருகிற 13-ந்தேதி தென்மேற்கு பருவமழை உருவாக வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
- வெகுநேரமாகியும் மாணவிகளுக்கு மயக்கம் தெளியாததால் வாலிபர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
- மாணவிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்ததை தொடர்ந்து அவர்கள் மயக்கம் தெளிந்து எழுந்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் களக்கூட்டம் பகுதியில் தம்புரான்முக்கு பகுதியில் ஏராளமான ஓட்டல்கள் மற்றும் லாட்ஜூகள் இருக்கின்றன. அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு சம்பவத்தன்று 3 வாலிபர்கள் மற்றும் 2 மைனர் சிறுமிகள் வந்துள்ளனர்.
பள்ளி படிக்கும் அந்த சிறுமிகள், தங்களை அழைத்து வந்த வாலிபர்களுடன் சேர்ந்து மது குடித்ததாக தெரிகிறது. அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் போதை அதிகமாகி மாணவிகள் இருவரும் மயக்கமடைந்தனர்.
இதையடுத்து போதையை தெளியவைக்க முகத்தை கழுவ அறைக்கு அழைத்துச் செல்வதாக கூறிவிட்டு, மாணவிகள் இருவரையும் அங்குள்ள ஒரு அறையில் இருந்த குளியலறைக்கு வாலிபர்கள் தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு கொண்டுசென்று முகத்தை கழுவியபிறகும் மாணவிகளுக்கு மயக்கம் தெளியவில்லை.
அதனை பயன்படுத்தி குளியலறைக்குள் வைத்து மாணவிகள் இருவரையும் மயக்க நிலையிலேயே 3 வாலிபர்களும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வெகுநேரமாகியும் மாணவிகளுக்கு மயக்கம் தெளியாததால் வாலிபர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் அவர்கள் மாணவிகளை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். மேலும் மாணவிகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து, அவர்களது பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மாணவிகளின் பெற்றோர் மருத்துவமனைக்கு சென்றனர்.
மாணவிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்ததை தொடர்ந்து அவர்கள் மயக்கம் தெளிந்து எழுந்தனர். அப்போது தங்களை 3 வாலிபர்களும் சேர்ந்து ஓட்டல் குளியலறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த தகவலை மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.
அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர், அது பற்றி தும்பா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் மாணவிகளை சீரழித்த வாலிபர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் திருவனந்தபுரம் சங்குமுகத்தை சேர்ந்த எபின் (வயது19), அபிலாஷ்(24), பைசர்கான்(38) ஆகியோர் என்பது தெரியவந்தது.
அதன்பேரில் 3 வாலிபர்களின் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது. வாலிபர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மது கொடுத்து மாணவிகள் இருவரையும் மயங்க செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது.
பள்ளி மாணவிகள் இருவருக்கு மது கொடுத்து மயங்க செய்து, ஓட்டல் குளியலறையில் வைத்து வாலிபர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பம்பையில் இருந்து இருமுடி கட்டி பாதயாத்திரையாக சன்னிதானம் செல்வதாகக் கூறப்பட்டது.
- ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சபரிமலையில் 18, 19-ல் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
ஜனாதிபதி திரவுபதி முர்மு வைகாசி மாத பூஜையை முன்னிட்டு வரும் 19-ம் தேதி சபரிமலைக்கு வர இருப்பதாக கேரள உள்துறைக்கு கடந்த 6-ம் தேதி தகவல் வந்தது. அவர் பம்பையில் இருந்து இருமுடி கட்டி பாதயாத்திரையாக சன்னிதானம் செல்வதாகக் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் பாதுகாப்பு உள்பட அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வந்தது. ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு சபரிமலையில் வரும் 18 மற்றும் 19-ம் தேதிகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றத்தைத் தொடர்ந்து ஜனாதிபதியின் சபரிமலை வருகை நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் வைகாசி மாத பூஜையையொட்டி வரும் 18, 19-ம் தேதிகளில் சபரிமலையில் தரிசனத்திற்கு தடையில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
- விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
- பயணிகளுக்கான உடல் மற்றும் அடையாள சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம்:
இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் நடந்துவரும் நிலையில் இரு நாட்டினரும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதையடுத்து விமான நிலையங்களுக்கு பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்னதாக வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு வரக்கூடிய பயணிகள் மூன்று அடுக்கு பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பயணிகளுக்கான உடல் மற்றும் அடையாள சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதனால் விமான நிலையங்களுக்கு பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்னதாக வருமாறு ஏர் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.






