என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
    • நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகள் மிகவும் தீவிரமானவை.

    நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் மாநிலங்கள், வட இந்தியாவிலும் பலத்த எதிர்ப்பும், சர்ச்சையும் கிளம்பியிருப்பது.

    மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே நீட் விவகாரத்தால் வார்த்தைப்போர் ஏற்பட்டிருக்கிறது.

    இந்நிலையில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

    மருத்துவ படிப்புகளுக்கு அந்தந்த மாநிலங்களே நுழைவுத் தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும்.

    நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகள் மிகவும் தீவிரமானவை.

    மாநிலங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வில் பிற மாநில மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கலாம்" என்றார்.

    • பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆட்டிச குறைபாடு கொண்ட இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.
    • ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடுதானே ஒழிய, நோயல்ல.

    பெங்களூரில் தனது ஆட்டிஸ குறைபாடு கொண்ட மூன்றரை மாத பெண் குழந்தையை தாய் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு போலீசில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆட்டிச குறைபாடு கொண்ட இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. ஒரு குழந்தைக்கு லேசான ஆட்டிச பாதிப்பு உள்ள நிலையில் மற்றோரு குழந்தை முழுமையாக ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

     

    பெண்ணின் கணவன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் குழந்தைகளுடன் தனியாக அப்பெண் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வியாழனன்று தனது ஆட்டிச பாதிப்பு முழுமையாக உள்ள குழந்தையை கழுத்தை நெரித்து தாய் கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்துள்ளார். இதனைதொடர்ந்து அவரிடம் போலீஸ் விசாரணை நடத்தியதில், ஆட்டிச பாதிப்புடன் தனது குழந்தையின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்ற கவலையில் அவளைக் கொல்ல முடிவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் கடந்த சில மாதங்களாகவே அதிக மன அழுத்தத்தில் தான் இருந்ததால் விரக்தியில் எனது மகளை கொலை செய்தேன் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத் காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

    தந்தை வெளிநாட்டில் இருந்து இன்னும் வராததால் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரட்டைக் குழந்தைகளில் மற்றொரு குழந்தையின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது

    நரம்பியல் வளர்ச்சிக் கோளாறான ஆட்டிசம் என்பது மூளை, தகவல்களைப் பயன்படுத்திப் புரிந்துகொள்ளும் திறனைத் தடுக்கும் ஒரு குறைபாடு ஆகும். இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களைச் சரியாகப் பயன்படுத்துவதில் சிரமம்.

     

    ஆனால் ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடுதானே ஒழிய, நோயல்ல. ஆட்டிசம் உள்ள குழந்தைகள் அதிக புத்திசாலிகளாக இருக்கவும் அதிக வாய்ப்புண்டு. ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்கள் அறிவியல் உட்பட பல்வேறு துறைகளில் சாதனையாளர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

     

    • கர்நாடகாவில் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை அம்மாநில அரசு உயர்த்தியுள்ளது.
    • இந்த வரி உயர்வால் பெட்ரோல் விலை ரூ.3, டீசல் விலை ரூ.3.50 அதிகரித்துள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை உயர்த்தி அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரியை முறையே 29.84 சதவீதம் மற்றும் 18.44 சதவீதம் என அரசாங்கம் திருத்தியுள்ளது.

    இந்த வரி உயர்வால் பெட்ரோல் விலை ரூ.3, டீசல் விலை ரூ.3.50 அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க., மாநில அரசு கட்டண உயர்வை திரும்பப் பெறவேண்டும் என தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, பா.ஜ.க. தலைவர் விஜயேந்திரா கூறுகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை முதல் மந்திரி மற்றும் அரசு திரும்பப் பெறாவிட்டால் திங்கட்கிழமை மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட மையங்களிலும், பிற இடங்களிலும் போராட்டம் நடத்துவோம். எரிபொருள் விலை உயர்வு முடிவை திரும்பப் பெறவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • பா.ஜ.கவின் என்.டி.ஏ அரசு வெகு நாட்கள் நீடிக்காது என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.
    • நாட்டு மக்களுக்கு நன்மையானதாக இருந்தால் சரிதான். நாட்டின் வளர்ச்சிக்காக நாம் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும்

    பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. கடந்த ஜூன் 9 ஆம் தேதி மோடி தொடர்ந்து 3 வது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருடன் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 72 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

    இந்த தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையை இழந்து நிதிஷ் குமாரின் ராஷ்டிரிய ஜனதா தளம் [ 12 சீட்] சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் [16 சீட்] ஆகிய கூட்டணி கட்சிகளின் தயவில் ஆட்சி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

     

    காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 235 இடங்களை கைப்பற்றி பாராளுமன்றத்தில் தங்களின் பிரதிநிதித்துவத்தை வலுவாக நிறுவியுள்ளது. நிதிஷ் குமாரும் சந்திரபாபு நாயுடுவும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்திருந்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்னும் சூழலில் பா.ஜ.கவின் என்.டி.ஏ அரசு வெகு நாட்கள் நீடிக்காது என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.

    இன்று பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, என்.டி.ஏ கூட்டணி தலைமையிலான அரசு தவறுதலாக உருவாகியுள்ளது. .மோடியிடம் அரசைத் தக்கவைக்க எந்த உறுதியும் இல்லை. இது ஒரு மைனாரிட்டி அரசு. எனவே இந்த அரசு எந்த நேரமும் சரிய வாய்ப்புள்ளது. ஆனால் இந்த அரசு தொடரவே நாங்கள் விரும்புகிறோம். அது நாட்டு மக்களுக்கு நன்மையானதாக இருந்தால் சரிதான். நாட்டின் வளர்ச்சிக்காக நாம் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகள் அவையில் இல்லாமலேயே பல முக்கிய சட்டங்களை பெரும்பான்மை வைத்திருந்ததால் பா.ஜ.க தன்னிச்சையாக நிறைவேற்றியது. இனி எந்த சட்டமாக இருந்தாலும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் கருத்தையும் கேட்க வேண்டிய நிர்பந்தம் பா.ஜ.கவுக்கு ஏற்பட்டுள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். 

    • தர்ஷனுக்கு பெரும் செல்வாக்கு இருப்பதாக வெளியில் காட்டப்படுகிறது.
    • தர்ஷனை கைது செய்த காவல்துறையின் நடவடிக்கைகளை திவ்யா பாராட்டியிருந்தார்

    சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள நடிகர் தர்ஷன் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் வழக்கம் கொண்டவர் என்று பிரபல நடிகை திவ்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ளார்.

    மேலும், "தர்ஷனுக்கு பெரும் செல்வாக்கு இருப்பதாக வெளியில் காட்டப்படுகிறது. ஆனால் அப்படியொன்றும் அவருக்கு செல்வாக்கு இல்லை. அவர் தேர்தலில் பிரசாரம் செய்த வேட்பாளர்கள் தோல்வியைத்தான் தழுவியுள்ளார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

    இதற்கு முன்னதாக தர்ஷனை கைது செய்த காவல்துறையின் நடவடிக்கைகளை திவ்யா பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பெங்களூரு நீதிமன்றம் எடியூரப்பாவிற்கு எதிராக ஜாமினில் வரமுடியாத கைது வாரன்ட் பிறப்பிப்பு.
    • ஜூன் 17ம் தேதி வரை கைது செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவரது தாயார், எடியூரப்பா மீது புகார் அளித்தார். இதனடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கான இது தொடர்பான வழக்கை கர்நாடக மாநில டிஜபி, சிஐடி-க்கு மாற்றினார்.

    சிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி எடியூரப்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் எடியூரப்பா சிஐடி முன் ஆஜராகவில்லை.

    இந்த நிலையில் பெங்களூரு நீதிமன்றம் எடியூரப்பாவிற்கு எதிராக ஜாமினில் வரமுடியாத கைது வாரன்ட்-ஐ பிறப்பித்துள்ளது. இதனால் சிஐடி போலீசாரால் எடியூரப்பா கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், எடியூரப்பாவுக்கு எதிரான பிடிவாரண்ட்டுக்கு இடைக்கால தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பிடிவாரண்டுக்கு எதிராக எடியூரப்பா தரப்பு கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில், ஜூன் 17ம் தேதி வரை கைது செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவரும் மத்திய அமைச்சருமான எச்.டி.குமாரசாமி பெங்களூருவில் இன்று ரோடு ஷோ நடத்தினார்.
    • வழி நெடுகிலும் பொதுமக்கள் கூட்டமாக திரண்டு, பூக்களை தூவி குமாரசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான குமாரசாமி 8,51,881 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெங்கடரமண கவுடா 567261 வாக்குகள் பெற்று இருந்தார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 2,84,620 ஆகும்.

    குமாரசாமி இந்த முறை பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தார். தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு துணை நின்றதுடன், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அரசியலிலும் இணைந்திருக்கிறார். மத்திய மந்திரியாக குமாரசாமி பதவியேற்று இருப்பது இதுவே முதல் முறை.

    இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவரும் மத்திய அமைச்சருமான எச்.டி.குமாரசாமி பெங்களூருவில் இன்று ரோடு ஷோ நடத்தினார். வழி நெடுகிலும் பொதுமக்கள் கூட்டமாக திரண்டு, பூக்களை தூவி குமாரசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அப்போது குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    "இன்று மக்கள் தாமாக முன்வந்து என்னை அன்புடன் வரவேற்றனர். மக்கள்தான் எனது பலம். கர்நாடகாவின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி நாட்டிற்காகவும் பாடுபடுவேன். கர்நாடக மக்கள் காங்கிரசுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர் என்று கூறினார்.


    • அந்த டாக்ஸியிலேயே ரேணுகா சுவாமியின் உடல் அங்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
    • தலையாமறைவான ரவி, டாக்ஸி ஊழியர்கள் சங்கத்தின் அறிவுரையை ஏற்று தற்போது சரணடைந்துள்ளதாக தெரிகிறது.

    பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் உள்ள முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்கியுள்ளது. தர்ஷன் தனது காதலி பவித்ரா கௌடாவுடன் மேலும் 11 பேரை இணைத்துக்கொண்டு இந்த கொலையை அரேங்கேற்றியுள்ளதாக கூறபடுகிறது. கொலை செய்யப்பட்ட ரேணுகா சுவாமியின் உடல் பெங்களூரு காமாட்சிபாளையா பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

     

    அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்த போது முந்தைய நாள் இரவில் இரண்டு கார்கள் அங்கிருந்து சென்றது பதிவாகியிருந்தது. பின்னர் அதில் இரண்டாவது கார் நடிகர் தர்ஷனுடையது என்று கண்டறியற்பட்டது. முதலாவதாக சென்றது ஒரு டாக்ஸி ஆகும். அந்த டாக்ஸியிலேயே ரேணுகா சுவாமியின் உடல் அந்த இடத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

    இந்நிலையில் அந்த டாக்ஸியை ஓட்டி வந்த டிரைவர் ரவி தற்போது போலீசில் சரணடைந்துள்ளார். தர்சன் கைது செய்யப்படும் தலைமறைவான ரவி, டாக்ஸி ஊழியர்கள் சங்கத்தின் அறிவுரையை ஏற்று தற்போது சரணடைந்துள்ளதாக தெரிகிறது.

    டாக்ஸி டிரைவர் ரவியின் வாக்குமூலம் இந்த வழக்கில் முக்கியமானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நடிகர் தர்ஷன் கொலைப் பழியை ஏற்கும் படி வேறு ஒருவருக்கு அதிக பணம் அளிக்க முயன்றுள்ளார் என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

    • 17 வயது சிறுமிக்கு பாலியல தொந்தரவு கொடுத்ததாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • சிஐடி போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில், நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தனர்.

    17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவரது தாயார், எடியூரப்பா மீது புகார் அளித்தார். இதனடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கான இது தொடர்பான வழக்கை கர்நாடக மாநில டிஜபி, சிஐடி-க்கு மாற்றினார்.

    சிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி எடியூரப்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் எடியூரப்பா சிஐடி முன் ஆஜராகவில்லை.

    இந்த நிலையில் பெங்களூரு நீதிமன்றம் எடியூரப்பாவிற்கு எதிராக ஜாமினில் வரமுடியாத கைது வாரன்ட்-ஐ பிறப்பித்துள்ளது. இதனால் சிஐடி போலீசாரால் எடியூரப்பா கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எடியூரப்பா பாஜக கட்சியின் பாராளுமன்ற குழு உறுப்பினராக உள்ளார். தற்போது அவர் டெல்லியில் உள்ளார். கர்நாடகா திரும்பிய பிறகு சிஐடி விசாரணைக்கு செல்வார் என, அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்ததன. இந்த நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    81 வயதான எடியூரப்பா பெண்ணின் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்த நிலையில், சட்டப்பூர்வமாக இந்த வழக்கை எதிர்கொள்வேன் எனத் தெரிவித்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் சிஐடி அதிகாரிகள் எடியூரப்பாவின் குரல் மாதிரியை சேகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக கர்நாடக மாநில உள்துறை மந்திரி ஜி. பரமேஷ்வரா "ஜி. பரமேஷ்வரா கூறியதாவது:-

    நடைமுறைப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை ஜூன் 15-ந்தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். சிஐடி போலீசார் அதற்கு முன்னதாகவே குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து விடுவார்கள். அதன்பின் அவர்கள் நடைமுறையை பின்பற்றுவார்கள்.

    எடியூரப்பாவின் வாக்குமூலத்தை பெறுவார்கள். அவசியம் என்றால் சிஐடி போலீசாரால் எடியூரப்பா கைது செய்யப்படுவார். அது அவசியமா என்று என்னால் சொல்ல முடியாது. சிஐடி அதிகாரிகள் சொல்வார்கள். அவர்கள் அவசியம் என்று உணர்ந்தால், அதை செய்வார்கள்" எனத் தெரிவித்திருந்தார்.

    • 17 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் ஒருவர் புகார்.
    • கர்நாடகா மாநில போலீசார் இந்த வழக்கை சிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

    பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கர்நாடகா மாநில முன்னாள் முதல்வருமான எடியூரப்பா மீது பெண் ஒருவர் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது 17 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குறிப்பிட்டிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் அந்த பெண் புகார் அளித்திருந்தார்.

    அதன்அடிப்படையில் அவர் மீது போக்சோ வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கர்நாடக மாநில டிஜிபி அலோக் மோகன் இது தொடர்பான வழக்கை சிஐடி-க்கு மாற்றினார்.

    சிஐடி போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் எடியூரப்பா கைது செய்யப்படுவாரா? என கேட்கப்பட்ட கேள்விக்கு கர்நாடக மாநில உள்துறை மந்திரி ஜி. பரமேஷ்வரா பதில் அளித்தார்.

    இது தொடர்பாக ஜி. பரமேஷ்வரா கூறியதாவது:-

    நடைமுறைப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை ஜூன் 15-ந்தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். சிஐடி போலீசார் அதற்கு முன்னதாகவே குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து விடுவார்கள். அதன்பின் அவர்கள் நடைமுறையை பின்பற்றுவார்கள்.

    எடியூரப்பாவின் வாக்குமூலத்தை பெறுவார்கள். அவசியம் என்றால் சிஐடி போலீசாரால் எடியூரப்பா கைது செய்யப்படுவார். அது அவசியமா என்று என்னால் சொல்ல முடியாது. சிஐடி அதிகாரிகள் சொல்வார்கள். அவர்கள் அவசியம் என்று உணர்ந்தால், அதை செய்வார்கள்.

    இவ்வாறு ஜி. பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

    எடியூரப்பா பாஜக கட்சியின் பாராளுமன்ற குழு உறுப்பினராக உள்ளார். தற்போது அவர் டெல்லியில் உள்ளார். கர்நாடகா திரும்பிய பிறகு சிஐடி விசாரணைக்கு செல்வார் என, அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    எடியூரப்பாக மீது புகார் அளித்த 54 வயதான பெண், கடந்த மாதம் தனியார் மருத்துவமனையில் நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

    81 வயதான எடியூரப்பா பெண்ணின் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்த நிலையில், சட்டப்பூர்வமாக இந்த வழக்கை எதிர்கொள்வேன் எனத் தெரிவித்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் சிஐடி அதிகாரிகள் எடியூரப்பாவின் குரல் மாதிரியை சேகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரேணுகாசாமியை சித்ரதுர்காவில் இருந்து கடத்தி வந்து பெங்களூருவில் வைத்து கொலை செய்து உடலை சாக்கடை கால்வாயில் வீசியதும் தெரிந்தது.
    • நடிகர் தர்ஷன், விஜயலட்சுமியை திருமணம் செய்த நிலையில், நடிகை பவித்ரா கவுடாவுடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.

    பெங்களூரு:

    கன்னட திரை உலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன் (வயது 47). இவர் கன்னடத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'காடீரா' திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று வசூலை குவித்தது.

    இவரது திரைப்படங்கள் வசூலை குவித்து வரும் நிலையில், இவர் கடந்த சில மாதங்களாக பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். தற்போது கொலை வழக்கு ஒன்றில் நடிகர் தர்ஷன் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

    பெங்களூரு காமாட்சிபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. அதன் அருகே கடந்த 9-ந் தேதி அன்று ஆண் பிணம் ஒன்று உடலில் காயங்களுடன் கிடந்தது. இதுபற்றி அருகில் உள்ள கட்டிடத்தின் காவலாளி காமாட்சிபாளையா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்தவரின் உடலை மீட்டனர்.

    மேலும் இதுபற்றி விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்தின்பேரில் போலீசார் 11 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன. அதாவது பிணமாக கிடந்தவர் சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி ( 33) என்பதும், அவர் படுகொலை செய்யப்பட்டதும் தெரிந்தது.

    அதாவது கைதானவர்கள் வினய், மைசூருவை சேர்ந்த நாகராஜு, ஆர்.பி.சி. லே-அவுட்டை சேர்ந்த லட்சுமண், கிரிநகரை சேர்ந்த பிரதோஷ், கார்த்திக், கேசவ் மூர்த்தி, ஆர்.ஆர். நகரில் வசித்து வரும் ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணாவை சேர்ந்த பவன், தீபக் குமார், மண்டியாவை சேர்ந்த நந்தேஷ், பெங்களூரு புறநகர் மாவட்டம் பன்னரகட்டாவை சேர்ந்த நிகில் நாயக், சித்ரதுர்கா டவுனை சேர்ந்த ராகவேந்திரா ஆகிய 11 பேர் என்பது தெரிந்தது.

    மேலும் அவர்கள் தான் ரேணுகாசாமியை சித்ரதுர்காவில் இருந்து கடத்தி வந்து பெங்களூருவில் வைத்து கொலை செய்து உடலை சாக்கடை கால்வாயில் வீசியதும் தெரிந்தது.

    அவர்கள் 11 பேரையும் நடிகர் தர்ஷன் தான் கூலிப்படையாக ஏவி கொலை சம்பவத்தை அரங்கேற்றியதும் அம்பலமாகி உள்ளது. அதாவது நடிகர் தர்ஷனின் தோழி பவித்ரா கவுடா(36) ஆவார். பவித்ரா கவுடாவும் நடிகை ஆவார். நடிகர் தர்ஷன், விஜயலட்சுமியை திருமணம் செய்த நிலையில், நடிகை பவித்ரா கவுடாவுடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.

    அதுதொடர்பான விவகாரம் அவ்வப்போது வெடித்து வருகிறது. இந்த நிலையில் கொலையான ரேணுகாசாமி நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகர் ஆவார். அவர், நடிகர் தர்ஷனுடன் நடிகை பவித்ரா கவுடா நெருங்கி பழகுவது தர்ஷனின் பெயருக்கு களங்கம் ஏற்படும் எனவும், தர்ஷன் - அவருடைய மனைவி விஜயலட்சுமி இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிவு ஏற்படும் எனவும் நினைத்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் அவர், நடிகை பவித்ரா கவுடாவை பற்றி சரமாரியாக தகாத வார்த்தைகளால் திட்டி அவருடைய வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஆபாசமாக குறுந்தகவல்களை அனுப்பி வந்துள்ளார்.

    இதுபற்றி நடிகை பவித்ரா கவுடா, நடிகர் தர்ஷனிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நடிகர் தர்ஷன், சித்ரதுர்கா மாவட்ட தர்ஷன் ரசிகர் மன்ற தலைவர் ராகவேந்திராவை அழைத்து பேசி உள்ளார்.

    அப்போது ரேணுகாசாமியை பெங்களூருவுக்கு அழைத்து வரும்படி தர்ஷன் கூறி உள்ளார். அதன்படி ராகவேந்திரா, சித்ரதுர்காவில் உள்ள வீட்டில் இருந்த ரேணுகாசாமியை பெங்களூருவுக்கு கடந்த 8-ந் தேதி இரவு காரில் அழைத்து வந்துள்ளார்.

    பின்னர் ராஜராஜேஸ்வரி நகர் பட்டனகெரே பகுதியில் உள்ள வினய் என்பவருக்கு சொந்தமான பழைய கார் குடோன் பகுதிக்கு ரேணுகாசாமியை அழைத்து வந்துள்ளனர். அங்கு வைத்து ரேணுகாசாமியை ராகவேந்திரா உள்பட 11 பேரும் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

    அவரது உடலில் ஆங்காங்கே சிகரெட்டால் சூடு வைத்தும், வாய் மற்றும் முகம் உள்பட உடலின் 15 இடங்களில் இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கியும் உள்ளனர். இதில் ரேணுகாசாமி ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்தது தெரிந்தது. அவரை துடிக்க துடிக்க அவர்கள் சரமாரியாக அடித்தே கொன்றுள்ளனர்.

    இதையடுத்து கைதானவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நடிகர் தர்ஷனை, மைசூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வைத்து காமாட்சிபாளையா போலீசார் நேற்று முன்தினம் காலையில் கைது செய்தனர். பின்னர் அவரை உடனடியாக பெங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே நடிகை பவித்ரா கவுடாவையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து கைது எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. பின்னர் கைதான நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 13 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் நடிகர் தர்ஷன் உள்ளிட்டோர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த அன்னபூர்ணேஸ்வரி நகர் காவல் நிலையத்தின் 200 மீட்டர் எல்லைக்குள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 31-ந் தேதி கைது செய்தனர்.
    • வருகிற 18-ந் தேதி வரை காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா மீது பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 3 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பி சென்றார். இதையடுத்து அவரை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரம் காட்டி வந்தனர். அதன் பேரில் பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 31-ந் தேதி கைது செய்தனர்.

    இதையடுத்து பலாத்கார வழக்குகள் குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். 2 முறை போலீஸ் காவலில் எடுத்து பிரஜ்வலிடம் விசாரணை நடத்தினர். பின்னர் காவல் முடிவடைந்த நிலையில் அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்தநிலையில் பெங்களூருவில் சைபர் கிரைம் போலீசில் பதிவான பாலியல் வழக்கு தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழுவினர் காவலில் எடுக்க முடிவு செய்தனர். இதற்காக அவரை மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் நேற்று போலீசார் ஆஜர் படுத்தினர்.

    அப்போது பிரஜ்வல் ரேவண்ணாவை காவலில் எடுத்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவினர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி, பிரஜ்வல் ரேவண்ணாவை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அனுமதி வழங்கினார்.

    அதன்படி வருகிற 18-ந்தேதி வரை பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.

    ×